Tuesday 4 June 2013

"நான் அநிருத்தன்"

|| ஹரி ஓம் ||

 "நான் அநிருத்தன்"
           

             நான் அனேகமாக என்னுடைய 50 வது பிறந்த நாளில் வெளிவரயிருக்கும் விசேஷ பத்திறிகையில் என்னைப்பற்றியே
எழுதிக்கொள்ளும் முதல் இதழாசிறியர் ஆவேன். என்னுடைய பாட்டி [அம்மாவழி] சின்னவயதிலிருந்து என்னை, இவனா? எப்போ என்ன செய்வான் என்று தெரியாது என்பாள்.என் தாய் என்னை "அதிசய ஆதித்தன்" என்று சொல்லுவாள். ஆகையால் எனது சிறுவயது அதிசயிக்கும் வித்தியாசமே வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
           பள்ளி கல்வியிலிருந்து வெளி வந்தவுடன், நாம் வாய்பாடு என்று சொல்லும் சாதாரண பெருக்கல் கணக்கை  அதாவது 1x1=1, 
1x2=2 என்பதை மறந்து விட்டு , இந்த வாய்பாடான,  நான்xஒன்று =நான், நான்x பத்து= நான்,  என்பது சுலபமாகவே வரும்,காரணம் நான் என்பது பத்து திசைகளிலும் குதிரை மேல் உட்கார்ந்து எப்போது, எப்படி எகிறும் என்று தெரியாது. நான் இப்படி,நான் அப்படி, நான் இப்படி இல்லை, நான் அப்படி இல்லை, எனக்கு இது வேண்டும், எனக்கு அது வேண்டாம், நான் இது செய்தேன், அது செய்யவில்லை, இப்படி பல வடிவில். பலரூபத்தில் இந்த ஒவ்வொருவரின் "நான்" கூத்தடித்துக் கொண்டிருக்கும். இந்த அநிருத்தனோ சிறுவர்கள், குழந்தைகளின் "கூத்துக்கும்" ஊக்குவிக்கும் களிப்பரங்கத்தின் தோள் கொடுக்கும் தலைவன். அவ்வாரு இருக்க இந்த அநிருத்தனின் "நான்" ஒன்றும் செய்யாது இருக்கமுடியுமா?. "இதுதான் நான்  அதுவே நான் தான்"

நான் இப்படி  இருக்கிறேன், நான் அப்படி இருக்கிறேன்:
நான் எப்படி இருக்கிறேன் அது எனக்கு மட்டும் தான் தெரியும்.  நான் எப்படி இல்லை என்பது எனக்கு தெரியாது. அந்தந்த நிலையில் இருக்கும் மனிதர்களை பொருத்து இல்லை,அந்தந்த நிலவரத்தை பொருத்தும் இல்லை. பக்கத்தில் இருப்பவனோ, நிலவரமோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், நான் அப்படியேதான் இருப்பேன். காரணம் நான் எப்போதும் நிகழ்காலத்திலேயே உலாவுகின்றேன். நடந்து  கொண்டிருக்கும் வாஸ்தவத்தை எப்போதும் நழுவ விடுவதில்லை. கடந்த காலத்தின் விபரம்[தகவல், ஞானம்], ஞாபகம் எனக்கு என் நிகழ்கால்த்திற்கு ஒரு பாடம், அனுபவம் போன்றது, வருங்காலமோ அதன் கணிப்போ இதே நிகழ்காலத்தில் எனக்கு விழிப்புணர்வு, ஜாக்கிரதையுடன் செயல்பட எச்சரிக்கை. அதுதான் என் சுபாவம்.

நான் கெட்டவனா நான் நல்லவனா?
நான் திறந்த மனத்துடன் இதை உலகத்துக்கு அற்பணித்து விட்டேன்.அதுவே எப்படி வேண்டுமானாலும், தீர்மானிக்கட்டும், ஏனெனில்,மற்றவர் என்னநினைக்கிறார்கள் என்பது எனக்குக் கவலை இல்லை. என்னுடைய தத்தகுருவும், காயத்ரி மாதாவும் நான் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படியே இருப்பது எனது ஆயுளின் ஒரே கோரிக்கை. அவர்களது அன்பினால் மட்டும் அல்லாது, நான் அவ்வாரு வளர்க்கப்பட்டேன்.

நான் இதுவும் அல்ல நான் அதுவும் அல்ல:
நான் எதுவாக இல்லை, எங்கே இல்லை, எப்படி இல்லை,உண்மையாக நான் அறியேன். ஆனால் எந்த நிபந்தனை,நிலமையில் நான் இல்லை என்பதை நன்கு  அறிவேன். அதுவே என் பயணத்துக்கு வெளிச்சமாகும்.

எனக்கு இதுவே வேண்டும், எனக்கு அது தேவை இல்லை:.
நான் பக்தனின் காரணமும், விளைவும்  ஆமோதிக்கிறேன்,அரசியலை வெருக்கிறேன். நான் சேவை செய்வதை விரும்புகிறேன், பதவியை அல்ல. நான் பக்தர்களின் அன்பின் சிம்ஹாசனத்தில் அமர்கிறேன், ஆனால் ஆதிக்கம் வேண்டாம். நான் அஹிம்ஸயை ஆதரிக்கிறேன்,கோழைத்தனத்தை கொப்பளிக்கிறேன். எனக்கு திறமை ஆற்றல் முழுமையாக வேண்டும், சூதோ, சுரண்டலோ பிடிக்காது. அரசாங்க ஆதிக்கம் ஆதரவு உண்டு, வன்முறை கண்டனத்துக்கு உறியது. நான் ஒவ்வொரு பரமனின் பக்தனுக்கு சேவகனாக இருக்க விரும்புகிறேன்,  ஆனால் ,போலி , கபட நாடகம் ,மூடநம்பிக்கை வெருக்கிறேன்.

நான் யாரையும்  தேடி, நாடிப் போவதில்லை என்பது பலர் கோபத்துக்கு காரணம். நான் யாரிடமும் எதுவும் பெறவேண்டாம் ,கொடுக்கவும் வேண்டாம். அப்படியிருக்கையில் நான் யாரை பார்க்க வேண்டும்? நான் நண்பர்களை சந்திக்கிறேன். காரணம் "சுத்த சொந்தமே, நட்பே. அதாவது கேட்க கொடுக்க எல்லாவற்றிர்கு  அப்பார்ப்பட்ட காந்தம்,அதுவே பந்தம். இதே காரணத்தினால்  சந்திக்கிறேன் .இந்த சந்திப்பு சுத்த அன்பு, பாசத்தினால் ஆனது. அதற்கு அன்பைத்தவிர எதுவும் வேண்டாம். எனக்கு அந்த கொடுக்கல் வாங்கல் சர்ச்சை வேண்டாம். ஞானம் என்ற பேரில் காலியான ,பகட்ட ஆரவாரம் வேண்டாம். ஞானம்  சுயமுயற்சியால் பெற்று .வெற்றி கண்டு சுயநலமில்லா செயல்களுக்கும் ,சமூகத்தின் வளர்ச்சிக்கும் உபயோகமாக இருத்தல் வேண்டும்.

நான் இதை செய்தேன், அதைசெய்தேன்: 
என்னுள் இருக்கும் நான் செய்யவில்லை. அது எவ்வாறு? நான் செய்யவில்லை ஆனால் "இல்லையே-நான்" செய்து தருகிறான், செய்விக்கிறான், இதுவே என் முழுமையான நம்பிக்கை. அப்படியானால் என்னுள் இருக்கும் "நான்" செயலிழந்து இருக்கிறதா? அப்படி இல்லை. அநிருத்தனுள் இருக்கும் அந்த " நான்" ஸ்ரத்தாவான்களின்[பக்தர்களின்]  வாழ்க்கை பாதையை "இல்லையே -நானிடம் கொடுத்ததை கவனித்து, கண்காணித்து, ப்ரவாஹத்தை தடுத்து நிருத்தாது இருக்கவும், நதி காயாது இருக்கவும், தேக்கப்பட்டதை விடுவித்து அந்த "இல்லையே -நான்" என்பதை, பக்தர்களின் வாழ்க்கை ப்ரவாஹம் ஓடிக்கொண்டே இருக்க இது "இல்லையே -நான் "[பரமாத்மாவின்] என்ற அன்பு  வாழ்க்கை ப்ரவாஹத்தை நிருத்தாது , பாய்ந்து கொண்டு இருக்கவே என் முயற்சி. இப்போது ,சொல்லுங்கள் இதில் ஏதாவது எனதாகுமா?

நான்  சத்தியம், அன்பு , ஆனந்தத்தை மதிக்கிறேன், ஆதரிக்கிறேன். ஆகவே , பொய், துக்கம் தானாகவே கண்டனத்துகுறியது. இது இயல்பாகவே நடக்கிறது.ஏனெனில் பிறந்ததை ஒட்டிய இயற்கையான, சுயமான எந்தவித ஊக்குவிப்பும் இல்லாத பாகம் ஆகும் என்பதை குறிக்கிறது. ப்ரபு ராம ச்ந்திரரின்  மரியாதை பாதை, எதிர்பார்பில்லா சேவை[நிஷ்காம்ய கர்மா],பக்தி மார்கம்,சுயமரியாதை அடிவாரமாக கொண்டு இருப்பது ,  எனது கருத்து. நான் சொரணை அற்றவன் அல்ல, அன்பால் ஆடிவிடுகிறேன், அன்பினால் இணைகிறேன். என் செயல் அன்பினால் அலங்கரித்தவை. நான், பவித்ரமான, பரிசுத்தமான,  சத்தியம், உண்மையையே நம்புபவன்,வெளிப்படை வாஸ்தவத்தில் மட்டும் அல்ல.

 நான் என்ன செய்ய விரும்புகிறேன்? நான் என்ன செய்யப் போகிறேன்?  நான் ஏன் இந்த இதழ் ஆசிரியர் கட்டுரையை  எழுதவேண்டும்? ஏன் உலக மஹா யுத்தம் பற்றி அவ்வளவு எழுத வேண்டும்?, நான் ஏன் ப்ரசங்கம் செய்ய வேண்டும்?. இது அனைத்துக்கும் பதில் எளிதானதே. இதயம் எப்படி துடிக்கிறது?. எப்படி நான் ஸ்வாசிக்கிறேன்? என்ற கேள்விக்கு பதில் போல்.
[உண்மையாக அதற்கு பதில் ஏதும் இல்லை]. ஆம் அதுவே பதில் ஆகும்.

நண்பர்களே தூய்மையும், அன்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கம் போல் ஆகும். அதைக் கொண்டே என்னை வாங்கிவிடலாம். வேறு எதுவும் செல்லாது. சொல்லப்போனால் என்னுள் இருக்கும் "நான்" அநிருத்தன் உங்களுடையவன்.உங்களுடையவன் மட்டும் தான். எப்போதும் என்னுடையதாக இருந்ததே இல்லை, இனி இருக்கவும் மாட்டேன், இது உறுதி. 
                                                                      நண்ப்ர்களின் நண்பனான  
                                                                        "அநிருத்தன்"  


|| ஹரி ஓம் ||                             

No comments:

Post a Comment