Saturday 22 June 2013

ஐரோப்பா பொருளாதாரம்

                                                              || ஹரி ஓம் || 


ஐரோப்பா  பொருளாதாரம்
[தர்போதுள்ள நிலவரம் பற்றிய ஒரு ஆய்வு]

போனவாரம், ரெட்க்ராஸ் காரியதரிசி முகவர்[செக்ரெடரி ஜெனரல்] "பெகலெ கெலெடா" சில  ஐரோப்பிய நாடுகளின் நிரந்தரமாக  "அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை," வறுமை, கலக்கம்,கலவரம், வன்முறையை ஊக்குவிக்கும் எரிபொருள், சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள்.என்று எச்செரிக்கை விட்டிருந்தார். ஜெர்மனியின் நிதி மந்திரி வுல்ஃப்காங்க் ஷாபுல் வேலைவாய்ப்பின்மையை அடக்காவிட்டால் ஐரோப்பிய  நாடுகள் பிரிந்து அழிந்து போகும் என்றார்.  


இந்த எசாரிக்கைகளுக்கு சற்றேமுன்பு ஐரோப்பாவில் பொருளாதாரத்தில்
பளுவான நாடாக கருதப்படும் ஸ்வீடன் ,அதன் தலை ந்கரமான ஸ்டாகோமில் ஒரு பெருத்த வன்முறை,கலவரம் வெடிப்பு கண்டது /சந்தித்த்தது. இதில்  கவனிக்கவேண்டியது "ஸ்வீடனின் தலை நகரம் ஸடாகோம் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த நகரமாக , ஐரோப்பாவில் கருதப்ப்டுகின்றது. இதன் முன்  இத்தகைய அளவில் ஸ்வீடன் , குழப்பததையும் ,கலவரமும் கண்டதே இல்லை.  இந்த சம்பவம் எவ்வாரு ஐரோப்பாவின் ப்ரபலமான பொருளாதாரம் செறிந்த நிலை, நீர்க்குமிழி போல் சில வருடங்களாக ஊடைந்து சிதறியது.



பல ஐரோப்பிய நாடுகள் {ஜி.டி.பி}  "ஒட்டு மொத்த உள்நாட்டு பொருளாதார பலன்" குறைவை சந்திக்கின்றனர், காரணம் பல நாடுகள் மலை போன்று கடன்பட்டிருக்கின்றனர். இதன் நடுவில். ஸ்வீடன் ஒரு வளமான பொருளாதார வளர்ச்சியை தொடர்கின்றது, அதன் விளைவு, தற்போது ஸ்வீடன் , ஜெர்மனி, ஃப்ரான்ஸை விட பொருளாதாரத்தில் அதிக உறுதியாகவும் வளமாகவும்  உள்ளது. அப்படியிருந்தும் அங்கு அதிக வன்முறையும் ,கலக்கமும், கலவரமும்  ஆனது காரணம் அரியாது பலர்  குழம்பியிருக்கின்றனர். அதன் காரணம் ஸ்வீடனில், ஐரோப்பிய  பொருளாதார நிலை சறிவின் [பின் வாங்குதல்]  விளைவின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக  பல மாற்றங்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாகோமும் அதை சுற்றி இருக்கும் பல பகுதிகளும்,  இடம் பெயர்ந்தோரின் அளவுக்கடங்காத உட்புகுதலுக்கு பலியானது. ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வேலை வாய்ப்பை தேடியும், சுகமான  எதிர்காலத்தின் கனாவுடன் வந்திருந்தனர். ஆனால் இப்போதும் அது அடையாத, நிகழாத வாஸ்தவமாகும். வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்து, இளைஞர்கள், படித்தவர்கள் கூட வேலையில்லாது  கஷ்டப்ப்டுகின்றனர்.  இதே நிலவரம்  ஐரோப்பாவிலும் உள்ளது. ஐரோப்பநாட்டின் ஒன்றான க்ரேக்க தேசத்தில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை சதவிகிதம் வானளாவ 64.2% ஆக உயர்ந்துள்ளது ,சிறிது நாளில் அது 75% தொட்டுவிடும் . ஸ்பெயின் நாட்டிலும்  இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை 56.4%. "போற்துகல்"கூட அதிகமாக இதில் பின் தங்காது இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை  42.5% ஆக உள்ளது. அதே சமயம் மற்ற இதர ஐரோப்பிய, சக நாடுகளான "சைப்ரஸ், லாடிவியா,அயர்லாந்து,லிதுவேனியா,இஸ்டோனியா போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை வேகமாக் அதிகரரிப்பதை காண்கின்றனர்.  அதோடு   ஜனத்தொகையின் பயங்கரமான அளவான உத்தேஸமாக மூன்றின் ஒரு பங்கு 15லிருந்து  
24   வயது உள்ளவர்கள் வறுமையை நோக்கி தள்ளப்படும் அபாயம் உள்ளது.



இதோடு இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தந்த இடத்துக்குறிய ஆட்சிக்குழுக்கள்  பல  சமூக நல திட்டச் செலவுகளை கடுமையாக குறத்துவிட்டனர். அதில் கல்வி பொருப்பாட்சி மய்யங்களுக்கு அளித்து வந்த சலுகைகளும் அடக்கம். இதனால் மனச்சோர்வு, உள்ளச்சோர்வு அடைந்து வெறுப்பேரிய இளைஞர்களின் எதிரொலியே ஸ்டாகோமின் கலவரம் ஆகும். இதே போல் யுனைடெட் கிங்க்டம் என்று அழைக்கப்படும்  ப்ரிட்டனில் வீதிகளில் 2011ல் நடந்த கலவரம் உண்டு. தலைநகரம் லண்டன் ஐந்து நாள் எறிந்தது. இந்த வன்முறை, கலவரம் அதன் பக்கத்திலும், சுற்றியிருக்கும் நகரங்களுக்கும்,ஊர்களுக்கும் பரவியது. கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டன,பாதுகப்பு போலீஸ் ஒன்றும் செய்ய முடியாது தவித்தது. இதையும் கவனித்தவுடன் தெரிய வந்த விஷயம், இந்த  வன்முறை, கலவரத்துக்கு காரணமும், பொருளாதார ப்ரச்சனை,வேலையில்லா நிலவரம், வேலை வாய்ப்பின்மை  அதிகரிப்பு , வறுமை, கட்டுப்படுத்த முடியாத இடம் பெயர்ந்தோர் உட்புகுதல், செல்வந்தர் - ஏழை  பலத்த வித்தியாசம் அதிகரிப்பு என்பவையில் வேருன்றியிருந்ததே ஆகும். ஸ்டாகோம் கலவரம் ஐரோப்பாவின் நிலவரம் 2011லிருந்து முன்னேராது இருப்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமலலாமல் ,ஐரோப்பா மண்டலத்தின் தகர்வையே அநேகமாக குறிக்கிறது,  அதுவே ஐரோப்பாவின் சின்னா பின்னத்தில் முடியலாம். பொருளாதார நிலை பின்வாங்குதல் நின்று , முனேற்றம்  காண்கிறது என்பது, வாஸ்தவத்தில் அறிவித்ததைவிட குறைந்த விகிதமேயாகும்.

அரசாங்க பொக்கிஷம் மேல் அழுத்தம் வராது இருக்க பல நாடுகள் பல எளிமையாக செயல்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர். வேலையின்மை வேலைநஷ்டம் காரணத்தால்  அதிகரிக்கும் உதவியின்மை குடும்ப செலவு முதுகொடிந்து அதை தாங்கும் நிலையோ, கட்டுக் கடங்காது போயிற்று, இதோடு இணைந்து  அரசாங்க விசேஷ சலுகை திட்ட மானியங்கள் கணிசமாக குறைதல் ஐரோப்பா கண்டம் முழுவதும் ,சாமான்ய ப்ரஜைகளில் திருப்தியில்லாது, மனக்குறைவையும்  அதிகரித்து விட்டது. க்ரீஸ்,போர்துகல்,இடாலி,அயர்லாந்து,ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் இந்த சமூக ச் செலவின் குறைப்பால் சாமன்ய் ப்ரஜைகள் திருப்தி இல்லாமை , சமீபத்தில் ச்ந்தித்த விஷயமே. இதில் கவனிக்க வேண்டியது ,ஜெர்மனி போன்ற பளுவான பொருளாதார நாட்டிலும் இந்த குறைவு,  திருப்தியின்மை உள்ளது. 

2011ம் ஆண்டு,அரேபிய நாடுகளில் வன்முறை, கலவரம் கொழுந்துவிட்டு எரிந்தபோது அமெரிக்காவிலும் ,பல ஐரோப்பா நாடுகளின் வீதிகளில் ["ஆக்குபை"] குடியிரு, அனுபவி கலகத்தினால் ஆட்டம் கண்டது. மக்கள் வீதிகளில் சென்று குறிவைத்தது வடநாட்டு அரசாங்கத்தையும் அது கவனித்தும் , காத்தும் வந்த பலத்த முதலீடு செய்த வர்த்தகர்களையும் மட்டுமே. பூகோளத்தின் பல பெரிய நகரங்களிலும் இத்தகைய கலவரம் கண்டது. கடந்த ஓர் ஆண்டு காலமாக இதேபோன்ற புரட்சி {ப்லாக்குபை} என்ற பெயரில் உருவாகி வருகின்றது. இந்த நிலை நேர் மாற்றமாக இருப்பதோடு, ஐரோப்பா நாடுகள் எவை பலத்த முதலீட்டோர் கொள்கையினால் பயனுற்றதோ அக்கொள்கைகளையே எதிர்த்து புரட்சியை சந்திக்கின்றன.முக்கியாமாக கவனிக்கவேண்டியது ஐரோப்பா ,அத்துடன் பொருளாதார நிலை ஸ்திரமாக் இருந்து வந்த ஜெர்மனியிலும் இத்தகைய கலவரம் உருவாகின.  பல ஐரோப்பிய அரசாங்கங்களாலும், ஐரோப்பிய கூட்டுறவு சங்கங்களாலும்,ஐரொப்பிய மத்திய வங்கிகளினாலும் [இன்டர் நேஷனல் மானிடரி ஃபண்ட்] "சர்வதேச நாட்டின் பண்முறை சார்ந்த நிதி"  கழகத்தினாலும் விதிக்கப்பட்ட அரசாங்க விசேஷ சலுகை திட்ட மானியங்களின் அசாத்திய குறைவே காரணம், ஏனெனில் இக்கழகங்கள் யாவும் ஐரோப்பாநாடுகளை பொருளாதார ஆபத்திலிருந்து காப்பாற்ற  உதவியன [ஆகையால் பொதுநலத்திற்காக கட்டுப்பாடு விதித்தன]. 

இந்த சங்கடம் அதிகரிக்க காரணம் ,இந்த சூழ்நிலையில் பொருளாதார முன்னேற்றம் காணும் ஐரோப்பாவின் , பல ப்ரதேசஙகளின்  முக்கிய  கோரிக்கையான ,சுதந்திரம் சுய உரிமைக்காக  போராட்டமும் ஆகும். இந்த தேசங்களின் பட்டியல் பெரியது, அதில் இடாலியின் வெனெடோ,லொம்பார்டி ப்ரதேசங்களும் ; யுனைடெட் கிங்க்டொமின் ஸ்காட்லாண்டும், ஸ்பெயினில் இருக்கும் காடாலோனியாவும், பெல்ஜியமில் உள்ள ஃப்லாண்டர்ஸ், ஃப்ரான்ஸில் இருக்கும் கோர்ஸிகா ஆகும். வளமாகவும் செழிப்பாகவும் இருந்து இந்த நாடுகள் அவர்களது நாட்டின்   {ஜி.டி.பி}  "ஒட்டு மொத்த உள்நாட்டு பொருளாதார பலனுக்கும், வரி வசூலித்து அளிப்பதும், அதிகபட்சமாக இருந்தும் இன்நாடுகளுக்கு வளர்ச்சிக்கோ முன்னேற்றத்திர்கோ கிடைக்கும் திட்டங்கள் படுகுறைவேயாகும். இந்த சமானமின்மை, பலத்த வித்தியாசம் இந்த ப்ரதேசத்து  நாடுகளின் திருப்தியின்மைக்கு காரணம், அதுவே இன்நாடுகளின் சுதந்திர போராட்டத்திற்கும் காரணம் ஆகும். இவ்வாறு, சுருக்கமாக சொல்லப்போனால், பொருளாதார வீழ்ச்சி ஐரோப்பா மண்டலத்தின்  விரிசல், உடைதல் மட்டும் அல்லாமல் , ஐரோப்பா நாடுகளில் இருக்கும் பல ப்ர்தேசங்கள், மாகாணங்கள் பிரிந்துவிடும் என்று நம்பப்ப்டுகிறது. 

அமெரிக்க  டாலரின் மதிப்பு நிலையற்ற நிலையில் ஐரோப்பா யூரோவும் நிச்சயமில்லை. மிகப்பெரிய வேலை வாய்ப்பின்மை,வறுமை, இதோடு இணைந்து ஐரோப்பா பொருளாதார வள்ர்ச்சிக் குறைவு ஒரு  பலத்த பொருளாதார பின்வாங்கும் நிலையையே குறிக்கிறது, அது ஐரோப்பா ப்ரதேசத்தை மூழ்கடிப்பதோடு ஐரோப்பா கண்டத்தையே மூழ்கடித்துவிடும். இதன் பின் விளைவினால் இந்திய ரூபாயின் மதிப்பு பலத்த அடிபட்டு பெரும் வீழ்ச்சியை ககண்டுள்ளது . அமெரிக்கா டாலருக்கு எதிரில் இன்று ௫ 58.5க்கு மேல் ஆகியுள்ளது.

மூள லேக -



                                                            || ஹரி ஓம் || 


No comments:

Post a Comment