Wednesday 28 August 2013

ஆங்கில மொழி வளர்ச்சிபெற[செம்மையாக்க] நந்தா மாதா எழுதிய, புத்தக வெளியீடு விழா".

ஆங்கில மொழி வளர்ச்சிபெற[செம்மையாக்க]
நந்தா மாதா எழுதிய,  புத்தக வெளியீடு விழா".

Launch of Books authored by Nandai to Improve English


உங்கள் அனைவருக்கும் நேற்று மிகவும் விமரிசையாக, கோலாகலமாக நம் பரம பூஜ்ய பாப்பு, நந்தாமாதா ,ஸுசித்தாதா முன் நிலையில்  "ஸாயீ ஃபார் மீ"[ஸாயீ எனக்காக] என்ற தலைப்பில் "ஹாப்பீ இங்க்லீஷ் ஸ்டோரீஸ்"[ ஆனந்த ஆங்கிலக் கதைகள்] என்ற தொடரிலிருந்து முதல் கணம் அல்லது  தொகுப்பு புத்தகங்கள் வெளியீடு விழா நடந்தேறியது என்பதறிவீர்கள், என்று நான் உறுதி. ஆத்மபல காரியதரிசியும் ,  மூத்தவரும்,  எண்பது வயதுக்கும் மேர்ப்பட்ட  பெரியவருமான ஆசிரியை "ஸ்ரீமதி துர்காவீரா வாக்" அவர்களை கௌரவிக்கும் வகையில் ,  அவர்கள் திருக்கரங்களினால்  இப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன.இந்த புத்தகங்கள், ஆங்கில மொழி பயில ஆரம்பிப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் நன்கு தெரிந்தவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்ற நோக்கத்தை கொண்டது.
 

இந்த புத்தக வெளியீடு விழாவுடன் "புக்ஷணரி பப்ளிகேஷன்ஸ்" [புக்ஷணரி ப்ரசுரம்] ப்ரசுர உலகத்தில் மனதைக்கவர்ந்த  ப்ரவேசம் செய்திருக்கின்றது.புக்ஷணரி பல தலைமுறைகளுக்கும்  ,விஷயங்களுக்கும் தரமான இலக்கியங்கள்  தர , வழங்க ஆயத்தமாய் உள்ளது, அவை புத்தகமாகமட்டும் அல்லாமல் சி.டீ, வீ.சீ.டீ, கணிப்பொறிக்கு ஏற்ற ,ஈ-புத்தகங்கள் தற்காலிக தேவைக்கேற்ப்ப கிடைக்கும் நவீன ப்ரசுர வசதிகளும் அளிக்க தயாராக உள்ளது.

பாப்பு தன் ராமராஜ்யம் 2025 என்ற கொரிக்கையை  அவரது  மே 6, 2010 ஆம் ஆண்டு ப்ரசங்கத்தில்  தெளிவு படுத்தி விவரிக்கும் போது பல ஆன்மீக தத்துவங்கள்,செயல்முறை கூறு கோணங்கள் ,தனி  நபருக்குறிய, குடும்பத்திற்குரிய, சமூகத்திற்குறிய, தேசத்திற்குறிய, ஏன் இந்த உலகத்திற்குறிய செயல்படுத்தவேண்டிய பட்டியல் அளித்தார். அதில் அவர் குறிப்பாக ஆங்கிலமொழியின்  தொடர்பு கொள்ளும் வழி,முறையின் முக்கிய அங்கமாக இருப்பதை அழுத்தமாக ச் சொன்னார்.

இன்று ஆங்கிலம் உலகமெங்கும் தொடர்புகொள்ள முக்கியாமான மொழியாக நிரந்தரமாகி விட்டது, எழுத்திலும் சரி , உறையாடல் வார்த்தைகளாகவும் அப்படியே.
இன்றைய காலகட்டத்தில் ,தொடர்பு கொள்ளுதல்  வாணிகம் வர்த்தகம் செய்ய ஒரு திறமான  மிக அவசியமான கருவியாகும், ஆகையால் ஆங்கிலத்தை அனைவரும் ஆதரிக்க அவசியம் நேரிடும். இன்று, ஆங்கில்த்தை  தவிர்த்த உலகப்ப்குதியிலும் , ஆங்கிலத்தை அங்கீகாரம் செய்ய நேரிட்டதால் , செய்தும் வருகின்றனர்.
ஆங்கிலத்தில் வல்லமை அன்றாடத் தேவையே, இல்லாவிடில் நமக்கு எந்த தகுதியோ, பட்டமோ, பதவியோ இருந்தாலும் , நாம் சமூகத்தில் தேவையற்றவர்களாகிவிடுவோம்.  இன்று சீனாவைவிட  நம்  பாரத தேசம் கணிப்பொறி [ப்ரோக்ராம், program] இயக்கும் நிரல் சம்பந்தப்பட்ட ஆற்றலில் முன்னிலையில் இருக்கக் காரணம், நம் ஆள்வலிமை வளம்[manpower resources] சீனாவைவிட அதிக விலைமதிப்புள்ளதாக இருப்பினும், நமது தேசத்து நிரல் அமைப்பவர்கள் [programmers]  சீனர்களைவிட ஆங்கிலத்தில் தேற்சிபெற்றவர்கள் என்பதால்தான், அதேசமயம் சீனர்கள் ஆங்கிலத்தில் வல்லவர்கள் அல்லர்.

2005 ஆம் ஆண்டு ப்ரதயக்ஷ என்ற அன்றாட பத்திரிகை வெளியீட்டின் போது ,நம்மை சுற்றி நடக்கும் மெய்மை, உண்மைகளைப்பற்றி   அறியாது இருத்தல் இருட்டை ப்போன்றதாகும், இந்த இருட்டு ஏமாற்றத்தை அளிக்கும். நம்மை, கசக்கிப்பிழிந்து  நாசமாக்கும்  என்று பாப்பு திட்டவட்டமாக கூறினார். . ஆகையால் அனைத்து ஸ்ரத்தாவன்களின்[பக்தர்களின்] நலனுக்காக , நமது நந்தா மாதா [டாக். ஸ்ரீமதி நந்தா அநிருத்த ஜோஷி ] அவர்கள் இந்த ப்ரசுரத்தின்  தொடர் புத்தகங்களை   நாம் லாபமடைய ,முன்னேற , ஆங்கில மொழி வளமாக்க வெளியிட்டிருக்கின்றார்கள். புத்தகங்கள் ,ஆங்கிலம்  கற்க  ஆரம்பிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ளவும் அதை  செயல்படுத்தவும் அமைந்திருக்கின்றன. இப்புத்தகங்கள் ,ஆங்கிலம் நன்கு அறிந்தவர்களுக்கும் பல உதவி அளிக்கவல்லது.

இப்புத்தகங்கள் நமது குருக்ஷேத்ரத்திலிருந்து உறிய விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம். இவை ஸ்ரீ ஆஞ்சனேயா பப்ளிகேஷன்ஸ்லிருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். தொடர்பு கொள்ள வெப் சைட்[www.aanjaneyapaublications.com]

" அடியேன் அம்பக்ஞ ஆதிமாதே"

"अंबञॊस्मी आदिमातॆ"


No comments:

Post a Comment