Wednesday 3 December 2014

உலக கொலம்பிய கண்காட்சி (எக்ஸ்போ) - 2

World Columbian Expo – 2

மே 1st 1893 ஒரு மகத்தான பாணியில் மற்றும் முழு மூச்சில் உலக கொலம்பிய பொருட்காட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. முதல் நாளன்றே இந்த பெரிய கண்காட்சியைக் கிட்டத்தட்ட நூறு ஆயிரம் (ஒரு லட்சம்) பேர்  பார்த்திருக்கின்னர். பார்வையாளர்கள் நாள் முழுவதும் பொருட்காட்சியில் பல்வேறு இடங்களிலும் கட்டிடங்கள் மற்றும் சிறப்பு காட்சி சென்று பார்த்து அனுபவித்தார்கள் மற்றும் இராத்திரி பொழுது வரும் போது அந்த இடமே மாய வசியத்தால் கட்டுண்டது போல் இருப்பதை பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். யாரெல்லாம் அப்பொழுது அங்கு இருந்தார்களோ அவர்கள் முழு ஆச்சரியம் மற்றும் திகைப்புடனும் பார்க்குமாறு, டாக்டர் நிகோலா டெஸ்லாவால் AC மின்சாரத்தால் இயங்கும் நிறைய விளக்குகளால் பெரும் செலவில் மிகச் சிறப்பாக கண்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த உலகமே எப்போதுமே பார்த்திராத அளவுக்கு, இந்த கண்காட்சியில் விளக்குகள் அலங்காரங்கள் இருந்தது. உலக அற்புதத்தில் சற்றும் குறையாத அளவுக்கு இந்த மின்சாரத்தால் அலங்கரித்த கட்டிடமாக செய்யப்பட்டிருந்தது.

Tesla neon lights
முந்தைய கட்டுரைகளில், நாம் டாக்டர் நிகோலா டெஸ்லா, எரிவாயு நிரப்பப்பட்ட குழாய்களில் உயர் மின்னழுத்த மின்சாரத்தை மற்றும் உயர் அதிர்வெண் நீரோட்டங்களைச் செலுத்துவதன் மூலம் மாற்றி அமைக்க முடியும்  என்ற  கருத்தை பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் டாக்டர் டெஸ்லா இதற்காக வேண்டி எரிவாயு நிரப்பப்பட்ட குழாய்களை மற்றும் அவற்றை பல்வேறு வடிவங்களில் வளைத்து சிறப்பாக உருவாக்கியிருந்தார். மேலும், அவற்றில் பல்வேறு வாயுக்களை நிரப்பி அதில் அதிக அதிர்வெண் மின்னோட்டத்தைப் பயன்படுத்தி அவற்றை ஒளியூட்டச்செய்கிறார்.இந்த விளக்குகளிலிருந்து சிதறுகின்ற ஓளியானது இந்த கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களுக்கான ஒரு  அருமையான  கண்கவர் வண்ணத்தில் விளைவுகளை ஏற்படுத்தி  இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இந்த விளக்குகள் தான் இன்று நாம் எல்லா இடங்களிலும் காண்கின்ற விளம்பர பதாகைகள் மற்றும் காட்சிகள் வடிவத்தில் இருக்கும்  உண்மையான நியான் குழாய்களுக்கு முன்னோடியாக இருந்தது.

எனினும், 1980 களின் பிற்பகுதிக்கு பின்னர்தான் அதிக திறனுள்ள உயர் அதிர்வெண் மின்தூண்டிகள் (சோக்குகளை) மற்றும் எரிவாயு பல்புகள் உருவாக்கப்பட்டன. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டெஸ்லாவால் உருவாக்கப்பட்ட பல்புகள் மற்றும் விளக்குகளுடன் இந்த விளக்குகளில் மிகுந்த ஒற்றுமைகள் இருந்தது. இதனால் நிரூபிக்கபடுவது என்னவென்றால், டாக்டர் நிகோலா டெஸ்லா ஒளிரும் விளக்குகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்பதாகும்.
டாக்டர் நிகோலா டெஸ்லாவின் ஆய்வகத்தில் பயன்படுத்தப்படுகின்ற  ஒளிர்வொளி  (florescent ) பல்புகள் அவரால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, உண்மையில் 'கண்டுபிடிக்கப்பட்டது' என்று என்றழைக்கப்படுகின்ற தொழில், பொது நடைமுறையில் அவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில், இன்னொரு குறிப்பிடத்தக்க பரிசோதனை டாக்டர் டெஸ்லாவால்  நிகழ்த்தப்பட்டது. 'டெஸ்லா மற்றும் இது  “கொலம்பஸ்ஸின் முட்டை”, ( Tesla and the Egg of Columbus’) என்று பரவலாக அறியப்படுகிறது.

'டெஸ்லா மற்றும் கொலம்பஸ்ஸின் முட்டை- 

Tesla egg of Columbus

டெஸ்லாவின் கொலம்பஸ் முட்டை
இந்த மாதிரி சொல்லப்படுகின்ற ஒரு பிரபலமான கதை உண்டு, அமெரிக்க கண்டத்தைக் கண்டுபிடித்த பிறகு, கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒருமுறை சில ஸ்பானிஷ் பண்பாளர்களுடன் விருந்தில் கலந்துக்கொண்டபோது, அவர்கள் அவரை  கண்டு நகைத்தார்கள்.எரிச்சலடைந்த அவர், அவர்களுக்கு ஒரு சவாலைவிடுத்தார். அவர், ஒரு முட்டையை அதன்  ஒரு முனையை ஒரு தட்டில் முற்றிலும் எந்தவொரு ஆதரவு இல்லாமல் தானாகவே சமநிலைப்படுத்தி நிற்க வைக்க வேண்டும் என்று கோரினார்.  அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அங்கு கூடியிருந்த எவராலும் இந்த தந்திரத்தை செய்து காண்பிக்கமுடியவில்லை மற்றும் அவர்கள் தங்களுடைய தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். இந்த அபோகிரிபால் கதை எங்கோ 16 ஆம் நூற்றாண்டில் மீண்டும் துவங்குகிறது. டாக்டர் நிகோலா டெஸ்லா,  400 ஆண்டுகளுக்கு பின்னர்,  கிறிஸ்டோபர் கொலம்பஸ்ஸால்  கொடுக்கப்பட்ட இந்த சவாலை, கொலம்பஸ்ஸின்  வெற்றி கொண்டாட்ட  நிகழ்வின் போது ஏற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது நேர்த்தியான நுண்ணறிவுடன், எந்த ஆதரவும் இல்லாமல், முட்டை யைஅதன் முனையில் நிற்க வைக்கப்பட்டது. டாக்டர் டெஸ்லா உண்மையில் தாமிரம் செய்யப்பட்ட ஒரு முட்டையை பயன்படுத்தினார். பின்னர் மின்சாரம் மற்றும் காந்தவிசையையும் முதன்மையாகக் கொண்டு, அவர் அதன் ஒரு முனையில் நிற்க செய்தார். இந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை இன்னும் சிறிது விரிவாக பார்ப்போம்.

டாக்டர் நிகோலா டெஸ்லா வட்ட எல்லைகளை கொண்ட ஒரு மர தட்டை ஏற்பாடு செய்து மற்றும் அது மேல் தனது செப்பு முட்டை வைத்தார் இந்த மரத்தட்டின் கீழே ஒரு சுழலும் காந்த மோட்டார் ஏற்பாடு செய்தார்.(.மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்கும் மோட்டார்). இது ஒரு சுழலும் காந்த புலத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. தாமிரம், ஒரு நல்ல அயக்காந்தத்துக்குரிய (பெரோக்காந்தத்துக்குரிய) பொருளாக இருப்பதால் தொடர்ந்து மர தட்டின் கீழே  சுழலும் காந்த புலம் தயாரிக்கப்பட்டு, தொடர்ந்து (சுழலும்) செப்பு முட்டையை சுழலச்செய்கிறது. காந்த புலத்தில் அதிர்வெண் அதிகரிக்க, செப்பு முட்டையின் சுழற்சியின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது. ஒரு புள்ளியில் அந்த செப்பு முட்டை தன்னை தானே சுற்றி மிக வேகமாக சுழல்வது  ஒரு சுழலுகின்ற பம்பரம் போல் ஆனாலும் அது ஒரு முனையில்  நிற்பது போல் தெரியும். இவ்வாறு, டாக்டர் டெஸ்லா மின்சார சக்தி, காந்த புலம், மற்றும் மாறுதிசை மின்னோட்டத்தை இந்த சோதனையின் மூலம் பறைசாற்றினார். இப்படி தான் டாக்டர் டெஸ்லா என்ற மேதையின் மூளை அதிசயங்களைச் செய்துக் காண்பித்தது. இது அனைத்து சாத்தியமானது எப்படியெனில் , டாக்டர் டெஸ்லா முற்றிலும் அன்புகூர்ந்து மற்றும் அவரது வேலையை அனுபவித்தும் செய்தார்.

Tesla with fluorescent lamp

Tesla with fluorescent lamp
ஒளிரும் விளக்குடன் டெஸ்லா
உலக கொலம்பிய கண்காட்சி ஒரு பெரிய வெற்றிகரமாக நிறைவேறியது. அது அந்த ஆறு மாத காலத்தில், 28 (2.8 கோடி) மில்லியன் மக்கள் கண்காட்சியை கண்டு மகிழ்ந்துள்ளனர். பெரிய அரங்கில் இருக்கும் மின்சாரத்தில்  டாக்டர் டெஸ்லாவின் பல மின்முனை AC மின்சார அமைப்பு, உலகம் முழுவதும் பார்க்க வேண்டிய  காட்சியாக இருந்தது மற்றும் இயந்திரங்கள் வைக்கப்பட்ட ஹாலில் பார்வையாளர்கள் பெரும் அளவில் பார்வையிட வருகின்ற இடத்தில் உள்ள மாறுதிசை மின்னோட்டம் ஜெனரேட்டர்களால் தான் இத்தகைய கண்காட்சியில் உண்மையில் மின்னோட்டத்தை  இயக்க பயன்பட்டதை பார்க்க முடியும். உலகமே, இந்த மாறுதிசை மின்சாரத்தின் அமைப்பின் விளைவுகள் மற்றும் பயன்பாட்டினை கண்டு பிரமிப்பால் அதிர்ந்து பார்த்தது. டாக்டர் டெஸ்லாவால் உருவாக்கப்பட்ட பெருமளவிலான அழகிய லைட்டிங் விளைவுகளை பார்த்தது. அவர்களுக்கு இது  ஒரு வரலாற்று காலத்தில் வாழ்வது போல் இருந்துது. மக்கள் இதனை ஒரு புரட்சியின் ஒரு ஆரம்பம் என்று புரிந்து கொண்டனர். 1893 கொலம்பிய பொருட்காட்சியில் சிறந்த விளைவாக இருந்த விஷயமானது, அது பல மின்முனை மாறுதிசை அமைப்பின் பயன்பாட்டின் கடைசி வரையான தீவிர சந்தேகங்களை  தொழில்நுட்பவல்லுனர்கள் மற்றும் தொழிலதிபர்களின் மனதிலிருந்து  நீக்கியதோடு மட்டுமல்லாமல், பொது மக்களும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்த  உதவும்   என்பதையும் காட்டினார்.

உலக கொலம்பிய பொருட்காட்சியில் நடைபெற்ற இடத்தில் கூட்டமாக சூழப்பட்டு இருந்தவர் லார்டு கெல்வின். ஆவார். அவர் கண்காட்சிக்கு வருகை தந்த போது மற்றும் அவர்   மின்னோட்டம் மற்றும் மாறுதிசை மின்னோட்டம் மக்களை சென்றடைந்ததை அவர் உண்மையில் தன் கண்களால் பார்த்து முற்றிலும் பெரும் வியப்பினால் ஆழ்த்தப்பட்டு மற்றும் ஈர்க்கப்பட்டார். லார்டு கெல்வின் அந்த நேரத்தில் சர்வதேச நயாகரா ஆணையத்தின் தலைவராக இருந்தார். பின்னர், நயாகரா ஆணையம், நயாகரா நீர்வீழ்ச்சியின் சக்தியின் மூலம் மின்சாரத்தை உருவாக்கும் வழிகளை சிந்தித்தது. ஆரம்பத்தில் லார்டு கெல்வின் AC மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு எதிராக இருந்தார் ஆனால் மாறுதிசை மின்னோட்டம் மகத்தாக   சென்றடைந்ததையும்  மற்றும் திறனை பார்த்த பிறகு, அந்த இடத்திலேயே தனது மனதை மாற்றிக்கொண்டார் மற்றும் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தை அணுகினார் என்று  நம்பப்படுகிறது. மேற்கொண்டு நேரத்தை வீணாக்காமல், லார்டு கெல்வின் நயாகரா சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி ஒப்பந்தத்தை இறுதி முடிவு செய்தார் மற்றும் உடனடியாக வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் டாக்டர் நிகோலா டெஸ்லாவுக்கும் வழங்கப்பட்டது.

டாக்டர் டெஸ்லாவின் அதுவரைக்கும்  இதுவே தனது வாழ்நாளில் பெற்ற இரண்டாவது பெரிய ஒப்பந்தம் ஆகும். இதற்கு முன்னர், டாக்டர் டெஸ்லா  தனது அனைத்து காட்சிகள் மற்றும் கண்காட்சிகளில் எல்லாம் அவரது மாறுதிசை மின்னோட்டங்கள் நிரூபிக்க பயன்படுத்தப்படுவது பற்றியே இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் நிஜ வாழ்க்கையில் மாறுதிசை மின்னோட்டத்தின் அமைப்பு உண்மையாக செயல்படுத்துவது சாத்தியமாகும் என்பதை உணர்த்தியது. இந்த ஒப்பந்தத்தால் “மின்னோட்டத்தின் யுத்தம்”, முடிவுக்கு வந்ததை குறிப்பிடப்படும் இது ஒன்று என அறியப்படுகிறது மற்றும் மின்சார உற்பத்தி மற்றும் மின்னாற்றல் செலுத்துதல்  போன்ற இவைகளுக்கு எல்லாம் மாறுதிசை மின்னோட்டமே  ஒரு தரநிலையாக நிறுவப்பட்டது. ஆனால் இந்த  விஷயங்களை மட்டுமல்லாது புவியியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நயாகரா டாக்டர் டெஸ்லாவை கவர்ந்ததோடு இல்லாமல், இந்த நிகழ்வு பல ஆண்டுகளாக அவர் கண்ட  ஒரு கனவு உண்மையில் நினைவாகி விட்டது. 

அனைத்தும் டாக்டர் நிகோலா டெஸ்லாவிற்கு பிரமாதமாக  மற்றும் சரியாக நடந்தேறிக்கொண்டிருந்தது. ஆனால் மாறுதிசை  மின்னோட்டத்தின்  அதிகரிக்கும்   மக்கள் சென்வாக்கு மற்றும் டாக்டர் நிகோலா டெஸ்லாவின் நன்மதிப்பினாலும் இங்கு நம்மில் சில பேர் அமைதியற்ற நிலையைப் பெறுகிறார்கள். இப்போது பந்து உருளத்தொடங்கி விட்டது மற்றும் விஷயங்கள் மாற்றமடைய தொடங்கி விட்டது.

ll ஹரி ஓம் ll ll ஸ்ரீராம் ll ll அம்பக்ஞ ll

மேலும் விவரங்களுக்கு பார்க்கவும்:

மூள லேக -



No comments:

Post a Comment