Tuesday 2 December 2014

உலக மஹா கொலம்பிய கண் காட்சி

World Columbian Exposition
நாம் யாவரும் தற்போது உலக கால்பந்து க் கோப்பை போட்டிகளை ஸ்வாரஸ்யமாக கவனித்து வருகிறோம். அது ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அடுத்த படியான ஒரு விளையாட்டுப் போட்டி என்று கருதப்பட்டது. உலகத்தின்  முப்பத்தி இரண்டு நாடுகளிலிருந்து 550வீரர்கள் விளையாடும் போட்டி. கோடிக்கணக்கான மக்கள் காணும் , கண்டு களித்துவரும் போட்டி.
அதேபோல்  1893ல் அமெரிக்காவில் ஒரு வியக்கத்தக்க நிகழ்சி நடந்தேறியது. 46 நாடுகளிலிருந்து 2.8 கோடி மக்கள் பங்கேற்றனர். அது ஒரு விளையாட்டு நிகழ்சி அல்லாமல் அது அக்காலத்து  ஒரு மிகப்பெரிய கலாசார ,விஞான கண்காட்சியாக புகழ் பெற்றது. அது அமெரிக்க நகரான சிகாகொவில் 1893 ல் நடைபெற்ற கொலம்பியன் எக்சிபிஷன் என்று அழைக்கப்பட்டது.  அது 1492 ல் க்ரிஸ்டாஃபர் கொலம்பஸ் அமெரிக்க பூமியில் கால்வைத்த  400 ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு நடத்தப் பட்டது. 630 ஏகர் நிலப்பரப்பில்  இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. ஒரு பெரிய குளம் கொலம்பஸ்ஸின் மிகப்பெரிய உலகப்ப்ரயாணத்தின் சின்னமாக நடுவில் அமைந்திருந்தது. கண்காட்சி   பல வித்தியாசமான சிர்பசாஸ்த்ரம் ப்ரதிபலிக்கும் கொள்கை கொண்ட சுமார்  200 கட்டிடங்கள் இருந்தன.  அது உழவுத்தொழில், சுதந்திரக் கலை, சுறங்கத்தொழில் ,  பொறிஇயல், யந்திரம் , மின்சக்தி , அனுப்புத்தொழில் , கட்டிடத்தொழில் ஆகியவற்றைப்பற்றி ,இக்கண்காட்சியில் பல தேசங்களின் கலாசாரம் வெளிப்படுத்தப்பட்டது.


இக்கண்காட்சி  1893ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி ஆரம்பித்து அக்டோபர் 30 , 1893 வரை நீடித்தது. கிட்டத்தட்ட  ஆறு மாத காலம். , அது மிசிகன் ஏரியை ஒட்டி அமைந்துள்ள ஜாக்ஸன் பூங்காவில் , கடல் , ரயில், சாலை வழியாக பல நாட்டிலிருந்து வருவோற்களின் வசதியை க்கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது. அது ஒரு பல தேசங்களிலிருந்து  மூலை  , முடுக்குகளிலிருந்து திரளாக வந்து    . திட்டங்கள் அல்லது எண்ணங்கள், மக்கள், தொழில்நுட்ப அறிவியல்கள் ஒன்று கூடி  அவரவர்களது  யந்திரத்தொழில்கல், கலாசாரங்கள், வாணிகம் , கல்வித்துரையின்  திறனை வெளிப்படுத்தும் சங்கமக் கூட்டமாக அமைந்தது. இக்கண்காட்சியில்  ஐரோப்பாவிலிருந்து  35 கப்பல்கள் , 10000 அதிகாரிகள் , கடல் மனிதர்கள், கடல் சம்பந்தப்பட்டவர்கள் , அவர்களது நாட்டின் திறமையைக்க் காட்டினர். இன்நிகழ்சி ஒரு முக்கியமான, மதிப்புக்குறிய, சமூக சம்பந்தமான, பண்பாட்டு சம்பந்தாமான நிகழ்சியாகவும் இருந்தது. அது, கலை, சிற்பசாஸ்திரம் ,  அமெரிக்காவின் யந்திர தொழில், எதிர்பார்ப்பு முதலியனவின் மேல் ஆழ்ந்த ,  நற்பயன் விளைவுகள் கொண்டன. அக்காலத்தில் அமெரிக்காவில் நடந்த கண்காட்சி உலகத்திலேயே  நடந்த ஒரு மிகப்பெரிய நிகழ்சியாகும். சுமார் முப்பத்திஐந்து லக்ஷம் சதுர அடி இக்கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது, கண்காண்காட்சியில் , மின் ஆற்றல் கண்காட்சி ஒரு பலத்த பங்கை கொண்டிருந்தது.

வெஸ்டிங்க் ஹவுஸும் டாடெஸ்லாவும் இம் மாபெரும் கண்காட்சிக்காக தயார் செய்யும் முயற்சியில் இரங்கினர். இது டா டெஸ்லாவிற்கு , உலகத்திற்கே மாறு திசை மின் ஆற்றலை ப்பற்றி விளக்க ஒரு மகத்தான வாய்ப்பு எனலாம். டாடெஸ்லா சுமார் 1200 கிமி  சிகாகோ ப்ரயாணம் செய்து இந்த உலகமகா நிகழ்சிக்கு தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். வெஸ்டிங்க் ஹவுஸிற்கு பாலிஃபேஸ் மாறு திசை மின் ஆற்றல் விதிமுறைகள் பொறுப்பு தறப்பட்டிருந்தத்து. இதுவே தக்க தருணமாக , கிடைத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. டா டெஸ்லாவும் இந்த கண்காட்சியில் மாறு திசை மின் ஆற்றலைக் கொண்டு இக்கண்காட்சிக்கே மின் லிளக்கு அலங்காரம் செய்ய திட்டமிட்டார். இந்த வேலை சுலபமானது அல்ல . டாடெஸ்லா இரவு பகலாக உழைத்து தாமாகவே கம்பி இணைப்புகள் சரிவர செய்து மின் ஆற்றல் கொண்ட விளக்குகளை இயக்கினார். அப்போது அங்கு கனத்த குளிர்காலம்,குளிர் தாங்கமுடியயாமல் கண்காட்சியின் வேலைப்பாடுகளை இரண்டு மூன்று வாரம் நிருத்தவேண்டிய தாயிற்று. அதை பொருட்படுத்தாமல் டாடெஸ்லா கடுமையாக உழைத்து மாறுதிசை மின் ஆற்றல் பாலிஃபேஸ் கருவியை உருவாக்கி உலகிற்கு சமர்ப்பித்தார். இந்த குளிர் மட்டும் டாடெஸ்லாவிற்கு இடையூராக இல்லை, ஜெனரல் இலெக்ட்ரிக் நிருவனம் , டா.டெஸ்லாவுடன் சேர்ந்திருந்த வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனத்தை ஒரு பட்டயப் போரில் இழுத்தது,ஆதலால் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனத்திற்கு  சந்தையில் கிடைக்கும்  விளக்கு பல்ப் களை உபயோகிக்க முடியாது போயிற்று. அது கண்காட்சிக்கு இரண்டு மூன்று மாதம் முன் நிகழ்ந்தது. இந்த காரணத்தினால் . வெஸ்டிங்க் ஹவுஸ் டா.டெஸ்லா கலந்த திட்டத்துக்கு தடை. டா.டெஸ்லா இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கண்காட்சி க்கு வேண்டிய சுமார் இரண்டு லக்ஷம் விளக்கு பல்புக்களை உற்பத்திசெய்து வாங்கி  உபயோகித்தார்.  இது ஒரு பெரிய சாதனை ,ஏனெனில்  இரண்டு லக்ஷம் பல்புக்கள் அமெரிக்காவின் இருபத்தைந்து சதவிகித பல்புக்களுக்கு சமமாகியது.  


அனைத்து கண்காட்சி அரங்கம் முழுவதும் இரண்டு லக்ஷம் மின் விளக்குகளினால் அலங்கரிப்பது எப்பேர்பட்ட் சாதனை. கண்காட்சிக்கு சில வாரங்கள் முன், தானாக இயங்கும் மிக வேகத்தில் செயல்படும் யந்திரங்கள் இல்லாத, நாளில்  1893 ஆம் ஆண்டு     200000 மின் பல்புக்களை தயாரிப்பது கற்பனைக்கு எட்டா விஷயம் இருந்தும் டாடெஸ்லாவும் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனமும் செர்ந்து அயராது பாடுபட்டு கண்காட்சி முழுவதும் விளக்கு அலங்காரத்தினால் ஜொலிக்கவைத்து வெற்றி கண்டனர். அதுவும் மிகக் கடுமையான  சூழ்நிலயில் அதுவும் மாறுதிசை மின் ஆற்றலை கொண்டே .வெஸ்டிங்கஹவுஸ் நிருவனமும் டாடெஸ்லாவும் பல பாலிஃபேஸ்  மாறு திசை கருவிகள் கண்காட்சியில்  காண வைத்திருந்தனர்.  அதில் பாலிஃபேஸ் மாறு திசை மின் ஆற்றல் உற்பத்தி யந்திரங்கள், மின் சக்தி அதிகரிக்கும்  கருவி, மின் சக்தி குறைக்கும் கருவி, ,மின் அனுப்பும் கம்பிகள், தூண்டுமின் மோட்டார்கள், நேர் மின் லிருந்து மாறு திசை மின் மற்றும் சாதனம், ரயில் மின்னோடி, இன்னும் பல கண்டு பிடிப்புகள் காட்சிக்காக வைக்கப்ப்ட்டிருந்தன.

டா.டெஸ்லாவே இந்தக் கண்காட்சிக்காக பல பரிசோதனைகள் வரிசைப்படுத்தி இருந்தார். இக்கண்காட்சிக்காக டா.டெஸ்லா பல வாயு நிரப்பப்பட்ட மின்னும் [பல்புக்களை] விளக்குகளை வடிவமைத்திருந்தார். அவ்விளக்குகள் எந்தவித வாயுவோ, அதன் வதிர்வெண்ணிற்கேற்ப பல வண்ணங்களில் பளிச்சிட்டன, மின்னின.இது சாதாரண பல்புக்களை விட நன்கு வேலை செய்தன. இம்மாதிரியான வாயு நிரப்பிய பல்புக்கள் முன்னதாகவே இருந்தாலும் ,டா.டெஸ்லா அதில் உயர் வதிர்வெண் , உயர் வால்டேஜ் உபயோகித்து பலமடங்கு நன்றாக திறனுடன் வேலை செய்ய வைத்தார்.அதே முறை தான் இக்காலத்து வாயு நிறைந்த பல்பு விளக்குகள்   கையாண்டிருக்கின்றன  அதுவே நம் ட்யூப்லைட்டுக்கள்,  சிஎஹ்ப்எல்கள், நியான் விளக்குகள் , ஸோடியம் வேபர் விளக்குகள் முதலியனவாகும். யார் இந்த காண்டுபிடிப்புக்கு காரணம் என்று புரிந்திருக்கும். 

நாம் டா.டெஸ்லா எவ்வாரு விதவிதமான மின்னும் விளக்குகள் வடிவமைத்தார் அதை எவ்வாரு கண்காட்சியில் யாவரும் வியக்கச்செய்தார் என்பதை மட்டும் பார்க்காமல்  அவர் சில  கற்பனைகெட்டா பரிசோதனைகளும் செய்வித்து கண்காட்சியில் யாவரது மனதையும்  கவர்ந்தார் என்பதையும் பார்க்கப்போகிறோம்.

ஹரி ஓம்  || ஸ்ரீ ராம்  ||  அம்பக்ஞ


என்ற வெப்ஸைட்டில் பார்க்கலாம்

மூள லேக -










      

Monday 1 December 2014

டா.டெஸ்லாவிற்குக் கிடைத்த இன்னும் பல விருதுகள்

Some more honours for Dr. Nikola Tesla

டா.டெஸ்லா தமது ஐரோப்பா சுற்றுலா செய்து தனது தாயை இழந்த துக்கத்துடனும் அந்த நினைவுகளுடன், ந்யூயார்க் திரும்பினார், அவர் தமது பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பித்தார். சிறிது நாட்களில் துக்கத்தை மறந்தார். அதே வருடம் 1892ல் டா.டெஸ்லா அவர் சாதனைகளுக்கு இரண்டு மகத்தான விருதுகள் பெற்றார்.அவர் ந்யூயார்க் திரும்புவதற்கு முன்னர் அவரை சர்பியாயவின் தலை நகரமான பெல்க்ரேட் நகராட்சிக்குறிய அதிகாரிகளினால் அன்நகர மக்களுக்கு டா.டெஸ்லாவில் பரிசோதனைகள், ஆராய்சிகள் ,  சாதனைகள் பற்றி விளக்க விண்ணப்பித்தனர். ஜூன் 1, 1892 சுமார் 11 மணி அளவில் டா.டெஸ்லா பெல்க்ரேட் ரயில் நிலையத்தை அடைந்தார்.ஆயிரக்கணக்கான மக்கள் பெல்க்ரேட் ரயில் நிலையத்திலேயே வரவேற்றனர், முக்கியமாக அவரை ப்பார்க்க விரும்பினர். அனைவருக்கும் பெருமையான ஒர் விஷயம் , அதுவும் தமது சர்பிய தாய்நாட்டு மண்ணின் புதல்வனின் சாதனைகளுடன் இணைத்துக் கொண்டனர். அவருக்கு பூக்கொத்து அளித்து - மாலையும் அணிவித்து , அன்பளிப்புகளும்  கொடுத்து  கௌரவித்து வரவேற்கயில் டா.டெஸ்லா மெதுவாக அவர்களிடையே நடக்கலானார். டா.டெஸ்லாவை  சர்பியாவின் சாதனை சூரியனாக கருதினார்கள். அவருக்கு என ஒரு குதிரைவண்டி அலங்கரித்து காத்துகொண்டிருக்கையில் அவர் , இந்த வரவேற்பினாலும் ,உபசாரனையினாலும்   உணற்சிக்கு வசமானார், கண் கரைந்தார். அவர் தாழ்மையுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து , நான் எனது கனவுகளில் சிலவற்றை இதுவறை   நிஜமாகியதை  கடவுள் க்ருபையாக கருதுகிறேன். ஆனால் எனது குறியான மனித சமுதாயத்திற்கு எனது ஆராய்சிகளினால் உதவி செய்யும் பலன் கிடைக்க  வெகு  தூரம் செல்லவேண்டும், அப்போதுதான் நான் சர்பிய நாட்டின் பெருமை புதல்வனாக கருதுவேன். ஜூன்  2, 1893ல் டெஸ்லா சர்பிய நாட்டு அரசரான அலெக்ஸாண்டர் ஆப்ரேனோவிச் சை சந்தித்தார்.பெல்க்ரேட் நகரத்தில் மின்சக்தியை இயக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அரசர்  அவரை க்கேட்டும், அவரது ஆராய்சிகள் பரிசோதனைகள் கண்டு வியப்புற்று, அதே வருடம் 1893 லேயே பெல்க்ரேட் நகரத்தை மின்மயம் ஆக்கினார். அது ஒரு  பெரிய திருவிழா போன்று கொண்டாடப் பட்டது. சர்பிய அரசர் டா.டெஸ்லாவிற்கு  விஞான வளர்ச்சிக்காக   புனித சவா என்ற அன்நாட்டு பதக்கம் அளித்து பாராட்டினார்.


அதே வருடம் 1892ல் டா.டெஸ்லாவை அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் இலெக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் அவரை கௌரவித்தது . அவருக்கு உபதலைமை அதிகாரியின் பதவியும் தந்தனர். அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் இலெக்ட்ரிகல் இன்ஜினியர்ஸ் 1884ல் அமைக்கப்பட்டது. அவர்கள் கம்பியை கொண்டு மின் ஆற்றல் வினியோகம் சம்பந்தப்பட்ட தந்தி , தொலைபேசி, மின்விளக்கு , சக்தி ஆலைகள் வேலையில் செயல்பட்டு வந்த நிருவனம். மதிக்கப்பட்ட நிருவனமாக இருந்தது அக்காலத்தில்.  அந்த நிருவன சங்கம் இன்றும் இயங்கி வருகிறது,  ஆனால் வேரு ஏதோ பெயரில் .  இந்த சங்கத்துடன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரேடியோ இன்ஜினியர்ஸ் 1962ல் இணைந்து ஒரு புது விஞானிகள் சங்கமாக மாறியது. அதுவரை மின்-அணு சாரம் [எலெக்ட்ரானிக்ஸ்] ஒரு தனி கிளையாக தலைதூக்கி கிளம்பியது. ஆகையால் அந்த புதிதாக உறுவான விஞானிகள் சங்கத்தின் அங்கத்தினருடன் , மினணு விஞானிகளும் இணைந்தனர். ஆகையால் அந்த சங்கம் இன்ஸ்டித்யூட் ஆஹ்ப் இலெக்ட்ரிகல் அண்ட் இலெக்ட்ரானிக் இன்ஜினியர்ஸ் [ ஐ, ஈ. ஈ.ஈ(IEEE)]என்று அழைக்கப்பட்டது. அது இன்றும் ஒரு உலகபுகழ்பெற்ற , மதிக்கப்பட்ட நிருவனமாக செயல்பட்டு வருகிரது.   டா.டெஸ்லா இன்நிருவனத்தில் 1892-1894 வரை உபதலைமை அதிகாரியாக பணியாற்றினார்.



நாம் கடந்த கட்டுறைகளில் டா.டெஸ்லா செய்த கம்பியில்லா மின்ஆற்றல் பரிசோதனைகள் அவரது ஆராய்சிகளே என்பதை பர்த்தோம்.  அதை வெளியிட்டு டெஸ்லா அதை சந்தைக்கு கொண்டுவரவில்லை ,அதற்கு அவருக்கு வெகு தூரம் செல்லவேண்டுமென்ற கட்டம் , முக்கியமாக கம்பியில்லா மின் ஆற்றலை சாதாரண மனிதனுக்கு பயன் படும் வகையில் செய்ய,  1892ல் கொலம்பியன் கண் காட்சிக்கு அவருக்கு மின் விளக்கு அலங்காரம் செய்ய குத்தகை கிடைக்கும் வாய்ப்பளிக்கும் வகையில்  பல நிருவனங்களுக்கு திறக்கப்பட்டன. உலக கலாசார, விஞான முக்கியத்துவத்தை இந்த கண்காட்சியில்  கருத்தில் கொண்டு  தாமஸ் எடிஸன் எலெக்ட்ரிகஸ் கம்பெனி, இக்கண்காட்சியில் தமது நேர் மின் ஆற்றல் திட்டத்தை வெளிப்படுத்த கண்காட்சி முழுவதும் அலங்கரிக்க குத்தகை  $18,000,00 [12 கோடி ரூபாய்] தேவையை தெரியப்படுத்தியது. இக்குத்தகை முன்வரும் அனைத்து நிருவனங்களுக்கும் வாய்ப்பளிக்க திறக்கப்ப்ட்டு இருக்கையில் , டா.டெஸ்லாவின் ஜார்ஜ் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனமும் மனு விண்ணப்பம் செய்தது. ஆனால் அது 2கோடியே  40லக்ஷத்திற்கே  ஆகும். இதைக்கண்டு டா.டெஸ்லாவின் மாறு திசை மின் ஆற்றல் திட்டத்தை முறி அடிக்க , எடிஸன் நிருவனம் தனது தரத்தை 3 கோடியே ,33லக்ஷமாக குறைத்தது [அதுவும் டா.டெஸ்லாவுடன் போட்டியிடவே 70% குறைத்தது]. அப்படியிருந்தும் டா.டெஸ்லாவின் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனமே இக்குத்தகையை பெற்றது. இதற்கு இடையூராக எடிஸனின் நிருவனம் வெஸ்டிங்க் ஹவுஸ் நிருவனத்தை மின் விளக்கு பட்டயப்போறில் தள்ளி கண்காட்சிக்கு தேவையான மின் விளக்கு  கிடைக்காது செய்த போதிலும் டா.டெஸ்லாவும் வெஸ்டிங்க்  ஹவுஸ் நிருவன தொழிலாளிகள் இரவு பகலாக கடுமையாக உழைத்து மூன்றே வாரத்தில் 2,000,00 பல்புக்கள் [விளக்குகள்] விசேஷமாக  தயார் செய்து கண்காட்சியை அலங்கரித்து உலகத்தையே வியப்பில் ஆழ்த்தினர். 


இந்த உலக மஹா கொலம்பியா கண்கட்சி என்பது என்ன?  ஏன் வெஸ்டிங்க் ஹவுஸ் , எடிஸன் நிருவனங்கள் இதற்காக கடுமையாக போட்டி இட்டன. அதன் முக்கியத்துவம் தான் என்ன. அதை அடுத்துவரும் கட்டுறையில் பார்ப்போம்.[தொடரும்]. 

ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| நான் அம்பக்ஞன் ||

மூள லேக -







Friday 28 November 2014

"சீஸ்"[cheese] சைவ- பால் கட்டி, அசைவ - பால்கட்டி [ பரப்பு பண்டம்]

Vegetarian & Nonveg Cheese

சீனாவின் தின்பதார்த்தங்களுடன் இடாலி,லெபனீஜ், கோரியன் என்று பல வெளிநாட்டு பண்டங்கள் பாரதத்தில் ப்ரபலமாகி வருகின்றன. இத்தின்பண்டங்களில் முக்கால் விகிதம்  "பால்கட்டி"[cheese சீஸ்] உபயோகிக்கப்டுகின்றது. பால்கட்டி பாரதத்தில் பல வருடமாக கிடைத்து வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக பால்கட்டி கொண்ட பண்டங்கள்மீதான  விருப்பம் நம் நாட்டவர்கள் இடையே மிகவும் அதிகரித்துள்ளது. 
  
நமது ஸத்குரு பரம பூஜ்ய அநிருத்த பாப்பு செப்டம்பர்   25, 2014 அன்று  ஹிந்தியில்  செய்த ப்ரசங்கத்தில் சைவ பால் கட்டி, அசைவ பால்கட்டி பற்றி விளக்கம் அளித்தார். நமது காலை சிற்றுண்டியிலிருந்து,மதியம் கொரியல்களுடன்  இரவு உணவு வரை மய்யம் கொண்டுள்ள பால்கட்டியின் ரகம் , விதம் அது உற்பத்தி செய்யும் முறைகளை நாம் அறியோம்.  அது ஒரு சிலருக்குத்தான் தெரியும் என்பது ஒரு பரபரப்பான விஷயம் . இன்று இந்த பால் கட்டியானது மெல்ல மெல்ல ஸேண்ட்விச், பரோட்டா , கோஃப்டா, பாவ்-பாஜீ , தோசை, பக்கோடாம் ,  டோஸ்ட் , ஸாலாட்[பச்சை காய்கரி] , ரொட்டி ரோல்ஸ், பிஜ்ஜா, பர்கர் முதலியனவற்றில் மட்டும் அல்லாமல்   மும்பை வடாபாவையும் தாண்டி  நமது தினசரி சமயல், சாம்பார், ரசம் கரிகளில் கூட இடம் பிடித்துவிட்டது. மக்கள் வசீயம் ஆகிவிட்டனர். ஆகையால் இந்த "சீஸ்" என்னும் பால் கட்டியைப்பற்றி நாம் அதிகமாக அறிந்து கொள்வது அவசியாமாகிவிட்டது என்ற நிலையில் ,  இந்த "சீஸ்" [cheese] பால்கட்டி தயார் செய்யும் முறையை சுருக்கமாக பார்ப்போம்.   

"சீஸ்" பால்கட்டி , பாலிலிருந்துதான் தயாராகவேண்டும்.  பாலை கட்டியாக்க அதை இருக்க வேண்டும் , சுண்டவேண்டும். சிலசமயம் இம்முறையை விறைவாக்குவதற்கு , அதில் ஒரு விசேஷ பதார்த்தத்தை சேர்ப்பார்கள். அதன் பெயர் "ரெனெட்"[(Rennet)] ஆகும். (http://en.wikipedia.org/wiki/Rennet). இந்த "ரெனெட்" எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?

அது பசுமாட்டின் வயிற்றிலிருந்தோ  அல்லது அதன் கன்றுக்குட்டியின் அடி வயிற்றில் அகப்படும். இந்த "ரெனெட்" பசு, அதன் கன்று தின்றுவரும் புல் , பிண்ணாக்கு, போன்ற தாவர உணவு ஜெரிக்க்வைக்க கடவுள் கொடுத்த தன்மை பொருள் ஆகும். பசு அல்லது , கன்று உயிரோடு இருக்கையில் இதை எடுக்க இயலுமா? சிந்தித்துப்பாருங்கள். ரெனெட் உபயோகித்த சீஸ் உண்பவன் , பசு , கன்றை கொன்று தின்ன பாவம் தான் ஒட்டிக்கொள்ளும்.இந்த "ரெனெட்" உபயோகித்து தயார் செய்த சீஸ் தான் அசைவ சீஸ் ஆகும் , அது இல்லாதது சைவ சீஸ் ஆகும். 
பாரதத்தில் பால் பண்னைகளினால்  உற்பத்தி செய்யப்படும் பால்கட்டி  "சீஸ்" அங்காடிகளில் சைவ சீஸ் என்று கிடைக்கிறது, சில சர்வதேச நிருவனங்கள் பாரதத்தில் தயார் செய்தாலோ, அல்லது இரக்குமதி செய்யப்பட்ட சீஸ்களில் இந்த ’ரெனெட்’  இருக்க் வாய்புள்ளது. அதைத்தவிர  பல சர்வதேச நிருவனங்கள், இந்த ’ரெனெட்" உபயோகித்த  தகவலை பொருள் சிட்டையின் [label]மீது வேண்டுமென்றே மறைத்துவிடுகின்றனர். நமது பாரத சனாதன கலாசாரத்தில் ஒன்பது நியம நிஷ்டைகளில் , கோமாதா , கங்காமாதா, காயத்ரீ மாதா முக்கியத்துவம் வகிக்கின்றன. பசு பவித்ரம் , பரிசுத்தத்தின் அம்சம். இதை கருத்தில் கொண்டு எவெரவர் அசைவ சீஸ் சாப்பிட வேண்டாமோ அறியாது உண்ணவேண்டாம் , அது சைவமா அல்லது அசைவமா என்பதை பரிசீலித்து அறிந்து உபயோகிக்கவே இந்த தகவல். இதில் அவரவர் கொள்கை,  சாமர்தியம் , தற்காப்பு அடங்கியுள்ளது. அதற்கென்று "சீஸே..." சாப்பிடக்கூடாது என்பது அல்ல.--------- அநிருத்தா பாப்பு
ஹரி ஓம்  || ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ||  

மூள லேக -

Thursday 27 November 2014

ஸ்கந்த சக்ரத்தை பற்றிய தெளிவுறை.

Clarification of Skanda Chinha
"ப்ரத்யக்ஷ" என்ற தினசரி பத்திரிகை வாயிலாக நம்  பரம பூஜ்ய பாப்புவின் பக்தர்கள் அதை சம்பந்தப்பட்ட வெப்சைட்டின் இன்டர்னட்[இணயத்ததிலிருந்து] தெரிந்து கொள்ள முயன்ற வேளை எழுந்த சந்தேகத்தில் கீழ்வரும் ஸ்கந்த சக்ரங்களில் எது சரியானது எது சரியானது அல்ல என்பது கீழ்வருமாரு விளக்கப்ப்ட்டு இருக்கிறது.

                     
இரண்டு வித்தியாசமான வர்ணத்தில் முக்கோணம் ஒன்றின்மீது ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது [இதுவே சரியானது]



______________________________________________________________________________________________________



இரண்டு வித்தியாசமான வர்ணங்களில் இரண்டு முக்கோணங்கல் ஒன்றினுள் ஒன்று நுழைக்கப்பட்டு இருக்கிறது [இது சரியான ச்கந்த சக்ரம் அல்ல

                                                         ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ|| 

மூள லேக -
     




Wednesday 26 November 2014

டாக்டர் டெஸ்லாவின் ஐரோப்பா பயணம்.

Dr. Nikola Tesla’s Journey to Europe!

கடந்த , கட்டுரையில் டா,டெஸ்லா எவ்வாறு டெஸ்லா காயில் தயார் செய்தார் என்பதை பார்த்தோம் , அத்துடன் ஆராய்சிகளினால்  மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்க அரும் பாடு பட்டார். திடீர்விசை த்தூண்டுதல் மின் சக்தியை காற்றில் ஏவவும் ,  பரப்பவும் காரணம் ஆகும் என்று நம்பினார்.  இந்த திடீர்விசைகளினால் மின் சக்தி அக்காயிலினிருந்து அலைகளாக வராமல் கிரணங்களாக வெளிவருகின்றன.   டா.டெஸ்லா அந்த கிரணங்கள்   ஆகாய இடைவெளியில் தீர்கரேகையாக வருவதைக்கண்டார். அவர் அவரது ஒரு பட்டயத்தில் "ஒளி போன்ற கிரணங்கள் என்று வர்ணித்திருக்கிறார். இந்த கண்டுபிடிப்பு அவரது வருங்கால புதுமை ஆராய்சிகளுக்கு வழி வகுத்தது.   
டா.டெஸ்லா நம் இயற்கை த்தாயும் இந்த திடீர்விசை தூண்டுதல்  [ஆங்கிலத்தில் இம்பல்ஸ்] அடிப்படையில் இயங்குகிரது என்பதை உணர்ந்தார். இயற்கை , பலவித திடீர்விசை களை  வெள்ளமாகக் கொண்டது. அது மின்னலாக இருக்கட்டும் , நமது மூளையின்  நரம்பு செயல்பாடுகளாக இருக்கட்டும் , திடீர் யோசனைகள் , எல்லா வித சக்தி அசைவுகள் , திடீர் விசையின் உதாரணங்கள். டா.டெஸ்லா இது அனைத்தோடும் ஆண்டவன் தொடர்பு  கொள்ளும் வழியாகவே நினைத்தார் [ அது ஜீவன் உள்ள , இல்லாத ஜடப்  பொருளும் அடக்கம்].  அவர் இந்த இம்பல்ஸ் ப்ரபஞ்சத்தின்  இயற்கையிலும்,  ஆன்மீகத்திலும் , பக்தியிலும் இருக்கிறது என்பதை ப்பார்த்தார். அவர் தன் வேலகளையும் , கண்டிபிடிப்பும் அனைவருடன் எந்தவித சந்தேகம் இல்லாது தெளிவாக பகிர்ந்து கொள்வார்..அவர் வழக்கமாக அவரது புதுமை ஆராய்சி கண்டுபிடிப்புகளை பத்திரிகைகள் வெளியீடுகள் மூலமாகவும் , பத்ரிகையாளர்கள்  கலந்தாய்வு மூலமாகவும் பகிர்ந்து கொண்டார்.  அவ்வாரே அவரது பரிசசோதனைப் பற்றிய தகவல்கள் அறிவியல் வர்தக நாளேடுகளில் [ டெக்னிகல் ட்ரேட் ஜர்னல்] வெளியிடப்பட்டன.  டா.டெஸ்லாவின் புகழ் , பெயர்  அங்கங்கே பரவியது.  மக்கள் வருங்கால திட்ட்ங்களைப்பற்றிய விஷயங்கள் அறிந்து பூரித்துப்போயினர்.  ஜூலை 31 , 1891 ஆம் ஆண்டு  டா,டெஸ்லாவிற்கு அமெரிக்க குடிமக்கள் உறிமை கிடைத்தது.  ஜூன் 6,1884 ல் அவர் ந்யூயார்க் வந்தடைந்தார் , அவர் கையில் நான்கு தம்புடி காசே இருந்தது. ஏழு ஆண்டு பிறகு அவர்  அமெரிக்காவின் அதிகாரம் சார்ந்த அமெரிக்காவின் இயற்கை குடிமகன் ஆனார்.அவரது பெயர் விஞான உலகத்தில் பரவலாக ஊனத்தொடங்கியது. டா.டெஸ்லா தனது விஞான கௌரவத்திற்கு மேல் அவரது அமெரிக்க குடியுறிமையை மேலாகக் கருதுவதாக அவர் நண்பர்களிடம் சொன்னதுண்டு. அதற்கிடையில் டா.டெஸ்லா , லார்ட் கெல்வின் [லார்ட் வில்லியம் தாம்ஸன்]  இடமிருந்து  லண்டனின் ராயல் சொசைடி யில் ப்ரசங்கம் செய்ய வேண்டி அழைப்பிதழ் பெற்றார்.   

  

டா.டெஸ்லா  ப்ரசங்கங்களுக்கு தன்னை தயார் செய்து கொண்டார். தன்னுடன் தமது லண்டன் ராயல் சொசைடி அங்கத்தினர்களுக்கு நேர்முக செயல்முறை விளக்கங்களுக்கு தேவையான அனைத்து யந்திரங்கள், பொருள்கள் கொண்டு சென்றார். அவர் தனது விளக்கத்தை முதலில் தனது மாறுதிசை மின் சக்தியுடன் ஆரம்பித்து உயர்ந்த வால்டேஜ் ,உயர்ந்த வதிர்வெண் [ஃப்ரீக்வென்ஸீ] பற்றி சொல்லிவிட்டு , கம்பியில்லா  கதிர்வீசல் மின்சக்தி அதன் தன்மைகளை  அங்கத்தினர்களுக்கு செய்துகாட்டி விளக்கினார். அவர் அதேசமயம் இருளில் ஒளியாக இருக்கும் விளக்குகள், ட்யூப் லைட்கள் கம்பியில்லாது அவர் கையிலேயே எரியவிட்டு க்காட்டினார். அவரது  அழுத்தமான உறுதியாக உறைத்த குரல் அங்கத்தினர்கள் அமைதியின் மத்தியில்  தெளிவாக ஒலித்தது. அங்கத்தினர்கள் அனைவரும் அதிசயித்தனர்.  

கம்பியில்லா விளக்குகள்  கதிர்வீஸு மின் சக்தியினால் முழு ப்ரகாசத்துடன் எரிவதை செய்து காட்டினார் . அவர் சில சிறிய மோட்டார்களும்  சிறிது தூரத்தில் கம்பியில்லாது இயக்கமுடியும் என்பதையும் ஓட்டி காட்டினார். எவரெவர் டா,டெஸ்லாவின் அனைத்து பரிசோதனைகளும் கண்டனரோ வியப்பல் திகைத்தனர்.

ப்ரிசோதனைகளை விவரிக்குமாறு சில பொறியியல் நிபுணர்கள் கேட்கவே டா.டெஸ்லா மிகத்தெளிவாக விளக்கியும்   ; அதை மறுபடி செய்து காட்ட டா.டெஸ்லா கேட்க அதை ஒரு சிலரால்மட்டுமே அதை செய்து காட்டமுடிந்தது.  டா.டெஸ்லா    சில மாதங்கள் ஐரோப்பவில் தங்கியிருந்து , இதேபோல் ப்ரசங்கங்களும் பரிசோதனைகளும் செய்து அவரது மாறுதிசை மின் சக்தி விதிமுரைகள் பற்றி  விளக்கி வந்தார்.  அவர் பல விஞானிகளையும் சந்தித்து அவர்களது  பல சாதனைகள் பற்றியும் அறிந்து கொண்டார். அவர் எப்போதும்   இதர விஞானிகளின் ஆற்றல் அறிந்து மதித்தார் , அவர்களது புதிய நுடபங்க ளை  கற்றுக்கொண்டு அதன் அதிசய சம்பவங்கள் பற்றி ஆராய்வார். இதிலிருந்து  டா டெஸ்லாவின்   பறந்த மனத்தை  காட்டுகிறது. 

ஐரோப்பிய பண்டிதர்களுக்கு டா.டெஸ்லாவின்  ப்ரசங்கங்களும் , பரிசோதனைகளும் வியப்பூட்டினாலும் , அது வருங்கால புரட்சியாக கருதினார்கள்.
ஆகையால் சிலரே  எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓர் இரவு அவர் பேரிசில் இருந்த சமயம் அவரது தாயாரின் உடல்நிலை சரியில்லாதது பற்றி தந்தி வந்தது . அவர் அவரது ஐரோப்பா பயண வேலைகளை அப்படியே விட்டுவிட்டு படுத்த படுக்கையாக இருந்த தாயாரின் அருகில் இருந்தார்.  அவள் அருகில் இருந்து கொண்டு ஒரு சில மணிநேரமே உறையாடி இருக்க வேண்டும். அவர் தாயார் மிகக்கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் டா.டெஸ்லாவைக் கண்டு மகிழ்ச்சியுற்றார் அவர் அவரை , நீ வந்து விட்டாயா என் கண்ணா நிட்ஜோ என் கௌரவமே" என்று வரவேற்றி  வாழ்த்தினார். அவர் , அவர் தாயார் அருகில் வெகு நேரம் இருந்தார். அன்று இரவு அவர் சரியாக தூங்கவில்லை , டா.டெஸ்லா அந்த அனுபவத்தை  அவரது வார்த்தைகளில் வர்ணித்தது பின் வருமாரு.   இரவு முழுதும் எனது மூளையில் உள்ள ஒவ்வொரு பாகமும் எதிர்பார்ப்பினால் துடித்து களைத்தன. ஆனால் அதிகாலைவரை ஏதும் ஆகவில்லை . சிறிது கண் அயர்ந்த போது ஒரு தேவதை போன்ற  அழகான மேக அமைப்பு செல்கையில் அதில் இருந்த  ஒன்று என்னை அன்பாக பார்த்தது ,  அதுவே என் தாயாரின் உருவமாக மாறியது.  இந்த கனவிலிருந்து திடீரென்று விழிக்கையில் அவர் அவரது தாயாரையே அந்த உயரச்செல்கின்ற மேகமாக இருப்பாள் என்று நம்பமுடியவில்லை. சிறிது நிமிடங்களில் தாயாரின் உயிர் பிறிந்த தகவல் கிடைத்தது ,ஜூன் 1 ,1892 தாயார் ட்யூகா டெஸ்லா  காலமானார்.

டா.டெஸ்லாவை  ,தாயாரின் மரணம் கடும் துக்கத்தில் ஆழ்த்தியது. அவரது தந்தை 1879ல் காலமானார். டா.டெஸ்லாவின் வயது இருபத்து மூன்று. பதிமூன்று வருடங்கள் பின் தாயாரையும் இழந்தார். டா.டெஸ்லா அவரது தாயாரை மிகவும் விரும்பினார் , ஏனெனில் அவர் தாயாரே அவரது அதிசய ஆற்றலைப்பற்றி முழுமையாக புரிந்து கொண்டிருந்தார்.    

அவர் தாயாரே  சிறு வயதில் டா. டெஸ்லாவின்  எண்ணத்தை தெரிவித்தபோது  அவருக்கு ஊக்கமளித்தார். அவரது நண்பர்களும் சொந்தக்காரர்களும் ஏளனம் செய்த பொழுது அவர்  தாயாரே அவருக்கு ஒரே  துணை, ஆதாரமாகவும் இருந்தார்  . ஒரு வாரம் தாயரின் இருதிச்சடங்குகளுக்கென்று  அவரது க்ராமத்தில் துக்கத்தில் துடித்து கழித்தார்.  அந்த அதிர்வில்  நோய்வாய்ப்பட்டார். அவர் முழுமையாக குணமடைய இரண்டு மூன்று  வாரங்கள் ஆயின.  தாயாரையிழந்த  டா.டெஸ்லா விற்கு தற்போது ஒரே ஒற்  துணை கடவுளே  ஆவர்.  கடவுளும் அவரது தாயாரான மேரிமாதாவும் தான். டா.டெஸ்லாவின் கடவுள் மேல் கொண்ட அசையா பக்தி அவரை பல கஷ்டமான   நிலையிலிருந்து காப்பாற்றி வந்தது.  கடவுளும் அவரை கைவிடாது , அவருக்கு உலகத்தில்  போறாட  தைரியமும் கொடுத்தார்.  இந்த பலத்த துணையுடன் டா.டெஸ்லா தாயாரின் இழப்பிலிருந்து மீண்டு ந்யூயார்கில் உள்ள அவரது ஆராய்சி நிலயத்திற்கு சென்றார், அங்கு அவரது ஆராய்சி நிலயமும் அவரது வேலைகளும் அவருக்கென்று காத்திருந்தன.
ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம் ||    அம்பஞ || 

- மீண்டும் பார்க்க: 


மூள லேக -