Tuesday 30 July 2013

கோதுமையின் சாரம்[சத்து, சத்வம்]


 || ஹரி ஓம் ||

Recipe of Wheat Concentrate (Gavhache sattva)
கோதுமை சாரின் சத்து செய்முறை



ஜுன் 13,2013,அவர் ப்ரசங்கத்தில், பாப்பு  [கவாசே= கொதுமையின் ,சத்வ= சத்துவம் ]கோதுமையின் சத்துவத்தை ப்பற்றி கூறியது இவ்வாரு:
நான் இதன் செய்முறையை உங்களூடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இரு ஆழாக்கு கோதுமையை ஊறப்போடவும். மருநாள் தண்ணீரை இருத்துவிடவும், அதே கோதுமையை மருபடி புதிய நீர் இட்டு ஊறவிடவும்.  இவ்வாறே மூன்றாம் நாளும் செய்க. நான்காம் நாள் நீரை இருத்துவிட்டு, சிறிது புதிய நீருடன் கோதுமையை ஆட்டுக்கல்லிலோ, அம்மியிலோ அல்லது, இன்றைய காலத்து மிக்சியிலோ அறைக்கவும். அறைத்த மாவை ஒரு பாத்திரத்தில்  மூடி வைக்கவும்


ஆறு அல்லது ஏழுமணி நேரம் பின் மூடியைத்திறந்து பார்த்தால் கெட்டி மாவு அடியில் தங்கிவிடும். தெளிவான நீர் மேலே இருப்தைக்காணலாம். நீரை எடுத்துவிடுங்கள். இந்த கெட்டி மாவை ஒரு ஜாடியிலோ, சம்படத்திலோ வைத்துக்கொள்ளவும்.
செயல்முறை ஒன்று:
யாருக்கு தனது எடையை கவனிக்கவேண்டுமோ ,குறைக்கவேண்டுமோ: இந்த கெட்டி கோதுமை மாவு ஒரு கோப்பை, நான்கு கோப்பை நீர், பெருங்காயம்  ஒரு ஸ்பூன், உப்பு ருசிக்குத்தகுந்தவாரு , ஜீராப்பொடி அரைஅல்லது ஒரு டீ ஸ்பூன். இதை எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கொண்டே , கட்டிதட்டாமல்  சிறியதான அக்னியில்  கிண்டவும் வேகவைக்கவும் 

குறைந்த எடையுள்ளவர்,ஒல்லியானவர்களுக்கு:

அதே கோதுமை கெட்டி மாவு ஒரு கோப்பை, நெய் இரு டீ ஸ்பூன் , பால் ஒரு கோப்பை , சக்கரை இரு டீஸ்பூன் ,  ஏலக்காய் பொடி
நெய்யை ஒரு பாத்திர்த்தில்விட்டு கலந்துகொண்டே கோதுமைமாவைவிட்டுக்கிளரவும் , அவ்வாரே பால் , சக்கரை விட்டுகிளரிக்கொண்டே ,சிறிய அக்னியில் வேகும் வரை
கிண்டவும், [வெண்தும் என்றால் ஏல்க்கய் பொடி வாஸனைக்கு சேர்த்துக்கொள்ளவும். ,கிள்றிக்கொண்டே இருக்கையில் பளபளப்பு தெரிய வரும்.இது வெந்ததின் அரிகுரி.
அடுப்பிலிருந்து எடுக்கவும்.

மேர்க்க்ண்டவாரு விவரித்த கோதுமை கெட்டி மாவான சாரு  முக்கியமான  உடலுக்கு தேவையான நல்ல பொருள்கள்கொண்டது. உயர்ந்த ஊட்டசத்துமிக்க உள்ளது.
அன்றாடம், தினசரி ஒரு அளவான கோப்பை சாப்பிடுதல் நலம் தரும்.

இதன் வீடியோ விரைவில் வெளிவரும்

"ஹரி ஓம், அம்பக்ஞ"   


Monday 1 July 2013

தாரீ தேவியின் சீற்றம்

                                                                  || ஹரி ஓம் ||


[தமிழில் தாரை என்றாலே ப்ரவாஹம் என்பது பொருள் அதுவே சம்ஸ்க்ருதத்தில்  தாரா.இங்கு தேவியின் பெயர் தாரி தேவி என்பதை கவனிக்கவும்] 

சார்தாம் யாத்ரா என்று சொல்லப்படும் நான்கு தாமங்கள்[புண்ணிய ஸ்தலங்கள்]  யாத்திரையின் சமயம் பக்தர்களை  ஸம்ரக்ஷணை செய்து  காப்பவள் "ஸ்ரீ தாரீ தேவி" என்று நம்பபடுகிறது.ஆதலால் உத்தரகாண்டத்தில் ஸ்ரீநகரில் அலக்நந்தா நதி தீரத்தில் அமர்ந்திருக்கும் " தாரீ தேவியின்" ஆல்யத்தை[ கோவிலை] அரசாங்கம் வீழ்த்த வேண்டாம் என்று கடந்த இரண்டு வருட காலமாகஅங்குள்ள குடிமக்கள் விண்ணப்பித்து வந்தனர். அலக்நந்தா நதியின் ப்ரவாஹத்தை அடக்கி ஆள்பவள் "தாரீ தேவியே"  அவளது அருளால் அலக்நந்தா கட்டுப்பாட்டில் இருப்பதனால், அலக்நந்தா ஸௌம்யமாக சாந்தமாக இருக்கிறாள் என்று அங்குள்ள ஜனங்களின் நம்பிக்கை இருந்தது.ஆகையால் அப் ப்ரதேசத்து தார்மீக சங்கங்களிலிருந்து சாதாரண குடி மக்கள் வரை, அரசாங்கத்திடம் அவ்வாரு முடிவெடுக்க வேண்டாம் என்று வேண்டி வினவினர், கெஞ்ஜினார்கள். ஆனால் முன்னேற்றத்துக்கு மின் வசதி தேவை என்று, இந்த வேண்டுகோளை அரசாங்கத்தினர் நிராகரித்தனர். ஜூன் 16, மாலை 6 மணிக்கு [விளக்கேற்றும் சமயம்] "தாரீ தேவியின்" ஆலயம் வீழ்த்தப்பட்டது. கோயில் உள் குடி கொண்டிருக்கும்  தேவியின் சிலையும் இடம் மாற்றப் பட்டது. 


அதே சமயம் கேதாரநாத்தில்  பெரும் " மேகவெடிப்பு" [cloud burst} ஏர்ப்பட்டு அதைத்த்தொடர்ந்து  இரண்டு மணி அடித்த பலத்த மழையில் சாமான்ய வாழ்க்கை சின்னாபின்னம் ஆயிற்று. நான்கு தாமங்கள் யாத்திரையில்  வந்த பக்தர்கள் இங்கு கேதாரநாத்தில்  சிக்கிக்கொண்டனர். அடாத மழை விடாது பெய்ததாலும், அங்கங்கே நிலச்சரிவுகளினாலும் இங்கு சிக்கியிருக்கும் பக்தர்களை கஷ்டமில்லாது  சௌக்கியமாக்  வேளியேற்றும் பணி சவாலாக,  முடியாத ஒன்றாக இருந்தது.  அத்துடன் நிலவரம் மோசமாக மாறி வந்தது. இம்மாதிரியான அபாய நிலைக்கு க்காரணம் யார் என்று தேடி," மக்கள் செய்தி வாயில்கள் ,ஊடகங்கள் பல  பொருப்பேற்று செயல்படுகின்றன. உத்தராகாண்டம் பேரிடர்  அபாய சம்பவத்திலும் அவ்வாரே ஆயிற்று, இதில் பலியானவர்கள், சிக்கியிருப்பவர்கள் எண்ணிக்கை செய்தி தரும் தருணம்   , கடைசியில் சுற்றுச்சூழல் நிலவரம் கவனிக்காது அவசரமாக ,முட்டாள்தனமாக  அரசாங்கம் இயக்கிய உத்தேஸ, உபாயம் திட்டத்தினால்தான்   ஆயிற்று என்று ஒரு முடிவுக்கு வர,  அம்மாநில அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் { புட்டு புட்டு வைத்தனர்} பல தொலைக்காட்சி செய்தி வாயில்கள் பகிரங்கமாக,கணடனம் செய்து  வெளிப்படுத்தினர். இது அனைத்தும் ஒர் அளவுக்கு ஒப்புகொண்டாலும் அங்குள்ள மக்கள் வீழ்த்தப்ப்ட்ட "தாரீ தேவியின்" ஆலயத்தை  க்காட்டி தமது துக்கத்தை தெரிவித்தனர்.

கடந்த 800 ஆண்டுகளாக தாரீதேவியின்  ஆலயம்  இந்த இடத்திலேயே இருந்தது. இது பழங்கால ப்ராசீன சித்தர்பீடமாக கருதப்படுகிறது ".தாரீதேவி காளிகாம்பாளின்" ஒரு அம்சம் என்றும் நம்புகின்றனர். இந்த சித்தபீடத்தின் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது என்று  ஆவணங்கள் தெரிவிக்கின்றன. உத்தராகாண்டத்தில் [வடக்குப்ரதேசம்] இருக்கும் ஸ்ரீநகரில் [ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் அல்ல, அது வேறு]  காலியாஸுர் என்ற க்ராமத்தில்  அமைந்த  "தாரீதேவியின்"  ஆலயம்  அங்குள்ள அன்பர்களின் நம்பிக்க்கைக்குறிய  இடமாகும் [ஸ்ரத்தா ஸ்தானமாகும்]. தாரீதேவியின் விக்ரஹம் உக்ரமாக[ கோபமாக]  இருந்தாலும், தேவி மேற்கொண்ட உக்ரகோலம் நம் யாவரையும் தீய சக்தி, விபத்துகளிலிருந்து காப்பாற்றவே என்று அங்குள்ளவர்கள் பரம்பரை பரம்பரையாக புரிந்து கோண்டதேயாகும். அதை ப்பற்றி சரித்திரவரலாற்றில் கதை கூட உள்ளதாம். 1882ம் ஆண்டில் ஒரு புத்திகெட்ட ராஜா இந்த ஆல்யத்தை அவ்வாரே தொந்தரவு செய்தபோது , அப்போதும் பயங்கர  இயற்க்கை சங்கடம் ஆயிற்று. ஆகையினால் காப்பற்றும் காளி  தேவியான "தாரீ தேவியின் மேல் கொண்டுள்ள அசையா பக்தி என்பதில் ஆஸ்சர்ய்ம் இல்லை.

இந்த  ஆலயத்தை அரசாங்கம் வீழ்த்தினாலும் அதன் பயங்கர பின் விளைவு நாமே  அனுபவிக்க நேரிடும் என்று அங்குள்ளவர்கள் நன்கு அரிவார்கள்.  ஆனதும் அவ்வாரே. "தாரீ தேவியின் ஆலயத்தை தரைமட்டம்  ஆக்கிய  சில மணி நேரத்துக்குள் பலத்த ப்ரளயம் போன்ற மழை, கங்கையின் உப நதியான அலக்நந்தா ருத்ராவேஸத்துடன் சீறி ப்பாய்கிறாள், அது ஒரு சாதாரண நிகழும் சம்பவம் அல்ல என்று பகதர்கள் நம்புகின்றனர். அந்த ப்ரதேசத்தின்  ஊடகம் மூலம் ஜனங்களது கோரிக்கை வெளிஆயின. தார்மீக சங்கங்கள் தாரீதேவியின் ஆலயம்  தகர்த்த அரசாங்கத்தை கடுமையாக  கண்டனம் தெரிவித்தனர்.  உத்தர காண்டத்தில் சுற்றுச்சூழல் பற்றி சற்றும் யோசிக்காது ,கவனிக்காது, பொருட் படுத்தாது , அலட்சியம் செய்து  பல நூற்றுக்கணக்கான,  திட்டங்கள் மத்திய அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. தாரீ  தெவியின் ஆலயத்தை தகர்த்தி அங்குள்ள அலக்நந்தா நதிமீது அணைகட்டும் திட்டமும் அதில் ஒன்றாகும். வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு சாதாரணமாக அங்குள்ளவர்கள்  எதிர்ப்பு வரும். தாரீ தேவி ஆலயம் தகர்ப்பதற்கு எதிர்ப்பும் அவ்வாரே என்று அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அதே காரணத்தினால் பக்தர்களின்  ஆலயத்தை  சம்பந்தப்பட்ட  ஸ்ரத்தை, மனோபாவத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை, அதை அவசியம் என்று கருதவில்ல. அதோடு எந்த ஸ்ரத்தை மனோ பாவத்துடன் இந்த நான்கு தாமம் யாத்திரை செய்து வரப்படுகிறது என்ற அந்த பக்தி ஸ்ரத்தைக்கே  இத்திட்டங்கள் இடையூராக இருக்கும் என்பதை திட்டமிட்டவர்களே,   மரந்தேபோயினர். அதற்க்கு பயங்கரமாக ஈடு கட்ட நேரிடும் என்று  அங்குள்ளவர்கள் உணர்ந்தனர். ஆன்மீகம், தர்மத்தில் நம்பிக்கையில்லா சுற்று சூழல் குழு, கழகங்கள்,சங்கங்கள்  கூட இந்த அணைக்கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் அரசாங்கம் சுற்றுசூழலையும் அலட்சியம் செய்து, ஆன்மீக மக்களின் ஸ்ரத்தா பாவத்தையும் பொருட்படுத்தாது அலக்நந்தாமீது அணைக்கட்ட தீர்மானித்தது.

 தாரீதேவியின் ஆலயத்தை தரைமட்ட மாக்கியதால் மட்டும் இது நடக்கவில்லை, சுற்றுசூழல் காரணங்களே என்று நம்புவோர்க்கு   கூட, 800 ஆண்டு புராதன ஆலயத்தை தகர்த்த .அரசாங்கத்தின்   பிடிவாதம் பிடிக்கவில்லை. இந்த அபாயச்சம்பவம் நேர்ந்திராது, அப்படியும் அரசாங்கம் ஜனசமுதாயத்தின் மனோபாவத்தை புரிந்து கொள்ளாமல், சொரணையற்ற, உணர்வே இல்லாது செயல் பட்டது , அயோக்கியத்தனத்தையே குறிக்கிறது. மின்சாரத் திட்டங்களின் அடிப்படையில்  "தெய்வ பூமி" என்று கருதப்படும் ஹிமாலயத்தில் , அம்மலை ப்ரதேசத்தில் மத்திய அரசாங்கமும், மாநிலை அரசாங்கமும்  செய்து வரும் அராஜகம் , ஆன்மீக ஸ்ரத்தை பாவத்துடன் , சுற்றுச்சூழலையும் அலட்சியப்ப்டுத்துவது தெளிவாகிறது.


கங்கையின் ப்ரவாஹத்தின் மீது கட்டப்படும்  அணைகள் , மின் உர்பத்திக்கு வசதியாக இருக்கும்  ,என்று  அரசாஙகத்தின் கருத்து, ஆனால்  அது கங்கையின் ,பண்புக்கும் தர்மத்திற்கும் இடையூரு என்றரியவில்லை. இதனால் கங்கை சூழல் சீர்க்கேடாகிறது , என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. இது வெரும் ஆன்மீகம் ஸ்ரத்தை சம்பத்தப்பட்ட விஷயமில்லை. அப்படி இருக்கையில்  பாரத வாசிகளின் ஜீவனம் இந்த நதிகளை நம்பியிருக்கிறது என்பது அரசாங்கம் அரியாதா? சொல்லித்தரவேண்டுமா? சுற்றுச்சூழல் சீர்கெடும் அபாயம்  பற்றி விவரிக்கும் போது  பாரதீய  தர்ம  கலாசாரத்திலிருந்து , நிதிவசதி வரை பாரதவாசிகளின் வாழ்க்கயின் ஒவ்வொரு அடியிலும் ,வாழ்க்கயின் அனைத்து ப்பகுதியிலும்   அங்கமான நதிகளின் விஷயத்தில் அரசாங்கம் என்ற யந்திரம் இவ்வளவு பொருப்பில்லாது கேவலமாக நடந்து கொண்டது ஏன்? என்ற கேள்வி உத்தரகாண்டத்தின் இந்த அபாயத்தினால் எழுகிறது. அரசாங்கத்தின் கருத்தின்மை, அசட்டைத்தனம், பொருப்பின்மை {எந்த பெயர் உரிச்சொல்லால் [adjective]}  வர்ணிப்பது. பூரணமாக சுதந்திரமுடையது என்று கருதப்படும் கணிஇயல்களில் இயங்கும் இன்டெர்னெட் ஊடகவாயிலாக  அரசாங்கத்தின் பொருப்பில்லாமையை  கண்டனம் செய்து தாக்கியுள்ளனர். 

சமூக சம்பந்தமான வலைவேலை[பிணயம்]  {உதா..ஃபேஸ்புக்} போன்ற வற்றிலும் அரசாங்கத்தின் உணர்வற்ற [சொரணையற்ற] செயலை கணடனம் செய்து தம்தம் கருத்துகளை வெளிப்படுத்தி விமரிசனம் செய்து வருகின்றனர். இந்த ப்ரளயம் தாரீதேவியின் ஆலயத்தை வீழ்த்தியதால் ஆகியிருக்குமோ என்ற சந்தேகக் கேள்வி கிள்ம்பியிருப்ப்தோடு , இதன் இணைப்பில் கட்டுறைகளும் வெளியாகின்றன. அதேசமயம் கங்கா நதியை தேசிய நதியாக்க நமது ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பம் சென்றிருக்கிறது. பாரத தேசத்தின் கலாசாரத்தின் அசாதாரண நிலை கொண்ட இந்த இமயத்தின் நதிகளின், தகுந்த முரையில் சுற்றுச்சூழலை பாது காக்கவேண்டும் என்று வேண்டி,  வெரும் ஆன்மீக , தர்ம காரியதரிசி மட்டும் அல்லாமல் சுற்றுச்சூழல்காரர்கள் அவ்வளவே விஸ்வாசத்துடன் செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் இதை கண்டுக்காது இருக்கமுடியாது.

மக்களின்  மனோபாவத்தையும் வேண்டுகோளையும் பொருட்படுத்தாது , அலட்சியம் செய்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பிறகு அதன் பின் விளைவுகளை சந்திக்க தைரியம் இல்லாது ,தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று விலகி இருக்கலாம் என்ற கர்பனையில் , மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இருந்துவிடக்கூடாது.  தாரீ தேவி ஆலயத்தை தரைமட்டம் ஆக்கிய்தும் நிகழ்ந்த ப்ரளயம், அதில் உயிரிழந்தோர்களின்  உற்றார் உறவினர்களுக்கு நிதி உதவி  அறிவிப்பதாலோ, அல்லது புதிய திட்டங்கள் அறிவிப்பதாலோ , இழந்தவைகளுக்கு ஈடு ஒருபோதும் ஆகாது. ஜனங்களின் ஸ்ரத்தையை ,நம்பிக்கையை  முரிஅடிப்பது முன் , அதன் பின் விளைவுகள்  எவ்விதமாவது ப்ரதிபலிக்கும் என்று  அரசாங்கம் நினைவில் வைத்திரல் வேண்டும். கட்டுகடங்கா நதிகளும், சீற்றம் கோண்ட சமுத்திரம், கோபமுற்ற  இயற்கையின்முன் விஞானம் எதுவும் செய்ய இயலாது, விஞானிகளுக்கு எந்தவித வழியும் கிடைக்கவில்லை,தெரியவும் இல்லை. ஆகையால் வினாசத்தை வரவேர்கும் "அதர்ம வளர்ச்சிகளை"  அரசாங்கம் உடனே  நிருத்தவேண்டும். கோபமோ, சீற்றமோ ,இயற்கையோ, தெய்வீகமோ என்பதை  விவாதிக்காமல் தமது தப்பை உணர்ந்து,  அதை சரிப்படுத்த, துரிதப்படுத்த அரசாங்கம் செயல்பட வேண்டும். அவ்வாரே செய்தால்தான் அரசாஙகத்திற்கு உணர்ச்சி கொஞ்சனஞ்சம்  இப்பவும் உள்ளது என்றும், இழந்த நம்பிக்கை மீட்க உதவலாம். இல்லையெனில் இம்மாதிரியான பெருத்த அபாய ச்சங்கடங்கள் சமயம், அரசாங்கத்திற்கு,  தெய்வகுற்ற கோபம், இயற்கையின் கோபம் மற்றும் ஜனசமுதாயத்தின் கோபம் மூன்றிர்கும் பலியாக வேண்டியிருக்கும்.
ஸித்தார்த்த நாயிக் எழுதியது

- ஸித்தார்த்த நாயிக் எழுதியது


                                                                || ஹரி ஓம் ||




Saturday 22 June 2013

ஐரோப்பா பொருளாதாரம்

                                                              || ஹரி ஓம் || 


ஐரோப்பா  பொருளாதாரம்
[தர்போதுள்ள நிலவரம் பற்றிய ஒரு ஆய்வு]

போனவாரம், ரெட்க்ராஸ் காரியதரிசி முகவர்[செக்ரெடரி ஜெனரல்] "பெகலெ கெலெடா" சில  ஐரோப்பிய நாடுகளின் நிரந்தரமாக  "அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை," வறுமை, கலக்கம்,கலவரம், வன்முறையை ஊக்குவிக்கும் எரிபொருள், சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள்.என்று எச்செரிக்கை விட்டிருந்தார். ஜெர்மனியின் நிதி மந்திரி வுல்ஃப்காங்க் ஷாபுல் வேலைவாய்ப்பின்மையை அடக்காவிட்டால் ஐரோப்பிய  நாடுகள் பிரிந்து அழிந்து போகும் என்றார்.  


இந்த எசாரிக்கைகளுக்கு சற்றேமுன்பு ஐரோப்பாவில் பொருளாதாரத்தில்
பளுவான நாடாக கருதப்படும் ஸ்வீடன் ,அதன் தலை ந்கரமான ஸ்டாகோமில் ஒரு பெருத்த வன்முறை,கலவரம் வெடிப்பு கண்டது /சந்தித்த்தது. இதில்  கவனிக்கவேண்டியது "ஸ்வீடனின் தலை நகரம் ஸடாகோம் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த நகரமாக , ஐரோப்பாவில் கருதப்ப்டுகின்றது. இதன் முன்  இத்தகைய அளவில் ஸ்வீடன் , குழப்பததையும் ,கலவரமும் கண்டதே இல்லை.  இந்த சம்பவம் எவ்வாரு ஐரோப்பாவின் ப்ரபலமான பொருளாதாரம் செறிந்த நிலை, நீர்க்குமிழி போல் சில வருடங்களாக ஊடைந்து சிதறியது.



பல ஐரோப்பிய நாடுகள் {ஜி.டி.பி}  "ஒட்டு மொத்த உள்நாட்டு பொருளாதார பலன்" குறைவை சந்திக்கின்றனர், காரணம் பல நாடுகள் மலை போன்று கடன்பட்டிருக்கின்றனர். இதன் நடுவில். ஸ்வீடன் ஒரு வளமான பொருளாதார வளர்ச்சியை தொடர்கின்றது, அதன் விளைவு, தற்போது ஸ்வீடன் , ஜெர்மனி, ஃப்ரான்ஸை விட பொருளாதாரத்தில் அதிக உறுதியாகவும் வளமாகவும்  உள்ளது. அப்படியிருந்தும் அங்கு அதிக வன்முறையும் ,கலக்கமும், கலவரமும்  ஆனது காரணம் அரியாது பலர்  குழம்பியிருக்கின்றனர். அதன் காரணம் ஸ்வீடனில், ஐரோப்பிய  பொருளாதார நிலை சறிவின் [பின் வாங்குதல்]  விளைவின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக  பல மாற்றங்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாகோமும் அதை சுற்றி இருக்கும் பல பகுதிகளும்,  இடம் பெயர்ந்தோரின் அளவுக்கடங்காத உட்புகுதலுக்கு பலியானது. ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வேலை வாய்ப்பை தேடியும், சுகமான  எதிர்காலத்தின் கனாவுடன் வந்திருந்தனர். ஆனால் இப்போதும் அது அடையாத, நிகழாத வாஸ்தவமாகும். வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்து, இளைஞர்கள், படித்தவர்கள் கூட வேலையில்லாது  கஷ்டப்ப்டுகின்றனர்.  இதே நிலவரம்  ஐரோப்பாவிலும் உள்ளது. ஐரோப்பநாட்டின் ஒன்றான க்ரேக்க தேசத்தில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை சதவிகிதம் வானளாவ 64.2% ஆக உயர்ந்துள்ளது ,சிறிது நாளில் அது 75% தொட்டுவிடும் . ஸ்பெயின் நாட்டிலும்  இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை 56.4%. "போற்துகல்"கூட அதிகமாக இதில் பின் தங்காது இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை  42.5% ஆக உள்ளது. அதே சமயம் மற்ற இதர ஐரோப்பிய, சக நாடுகளான "சைப்ரஸ், லாடிவியா,அயர்லாந்து,லிதுவேனியா,இஸ்டோனியா போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை வேகமாக் அதிகரரிப்பதை காண்கின்றனர்.  அதோடு   ஜனத்தொகையின் பயங்கரமான அளவான உத்தேஸமாக மூன்றின் ஒரு பங்கு 15லிருந்து  
24   வயது உள்ளவர்கள் வறுமையை நோக்கி தள்ளப்படும் அபாயம் உள்ளது.



இதோடு இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தந்த இடத்துக்குறிய ஆட்சிக்குழுக்கள்  பல  சமூக நல திட்டச் செலவுகளை கடுமையாக குறத்துவிட்டனர். அதில் கல்வி பொருப்பாட்சி மய்யங்களுக்கு அளித்து வந்த சலுகைகளும் அடக்கம். இதனால் மனச்சோர்வு, உள்ளச்சோர்வு அடைந்து வெறுப்பேரிய இளைஞர்களின் எதிரொலியே ஸ்டாகோமின் கலவரம் ஆகும். இதே போல் யுனைடெட் கிங்க்டம் என்று அழைக்கப்படும்  ப்ரிட்டனில் வீதிகளில் 2011ல் நடந்த கலவரம் உண்டு. தலைநகரம் லண்டன் ஐந்து நாள் எறிந்தது. இந்த வன்முறை, கலவரம் அதன் பக்கத்திலும், சுற்றியிருக்கும் நகரங்களுக்கும்,ஊர்களுக்கும் பரவியது. கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டன,பாதுகப்பு போலீஸ் ஒன்றும் செய்ய முடியாது தவித்தது. இதையும் கவனித்தவுடன் தெரிய வந்த விஷயம், இந்த  வன்முறை, கலவரத்துக்கு காரணமும், பொருளாதார ப்ரச்சனை,வேலையில்லா நிலவரம், வேலை வாய்ப்பின்மை  அதிகரிப்பு , வறுமை, கட்டுப்படுத்த முடியாத இடம் பெயர்ந்தோர் உட்புகுதல், செல்வந்தர் - ஏழை  பலத்த வித்தியாசம் அதிகரிப்பு என்பவையில் வேருன்றியிருந்ததே ஆகும். ஸ்டாகோம் கலவரம் ஐரோப்பாவின் நிலவரம் 2011லிருந்து முன்னேராது இருப்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமலலாமல் ,ஐரோப்பா மண்டலத்தின் தகர்வையே அநேகமாக குறிக்கிறது,  அதுவே ஐரோப்பாவின் சின்னா பின்னத்தில் முடியலாம். பொருளாதார நிலை பின்வாங்குதல் நின்று , முனேற்றம்  காண்கிறது என்பது, வாஸ்தவத்தில் அறிவித்ததைவிட குறைந்த விகிதமேயாகும்.

அரசாங்க பொக்கிஷம் மேல் அழுத்தம் வராது இருக்க பல நாடுகள் பல எளிமையாக செயல்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டனர். வேலையின்மை வேலைநஷ்டம் காரணத்தால்  அதிகரிக்கும் உதவியின்மை குடும்ப செலவு முதுகொடிந்து அதை தாங்கும் நிலையோ, கட்டுக் கடங்காது போயிற்று, இதோடு இணைந்து  அரசாங்க விசேஷ சலுகை திட்ட மானியங்கள் கணிசமாக குறைதல் ஐரோப்பா கண்டம் முழுவதும் ,சாமான்ய ப்ரஜைகளில் திருப்தியில்லாது, மனக்குறைவையும்  அதிகரித்து விட்டது. க்ரீஸ்,போர்துகல்,இடாலி,அயர்லாந்து,ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் இந்த சமூக ச் செலவின் குறைப்பால் சாமன்ய் ப்ரஜைகள் திருப்தி இல்லாமை , சமீபத்தில் ச்ந்தித்த விஷயமே. இதில் கவனிக்க வேண்டியது ,ஜெர்மனி போன்ற பளுவான பொருளாதார நாட்டிலும் இந்த குறைவு,  திருப்தியின்மை உள்ளது. 

2011ம் ஆண்டு,அரேபிய நாடுகளில் வன்முறை, கலவரம் கொழுந்துவிட்டு எரிந்தபோது அமெரிக்காவிலும் ,பல ஐரோப்பா நாடுகளின் வீதிகளில் ["ஆக்குபை"] குடியிரு, அனுபவி கலகத்தினால் ஆட்டம் கண்டது. மக்கள் வீதிகளில் சென்று குறிவைத்தது வடநாட்டு அரசாங்கத்தையும் அது கவனித்தும் , காத்தும் வந்த பலத்த முதலீடு செய்த வர்த்தகர்களையும் மட்டுமே. பூகோளத்தின் பல பெரிய நகரங்களிலும் இத்தகைய கலவரம் கண்டது. கடந்த ஓர் ஆண்டு காலமாக இதேபோன்ற புரட்சி {ப்லாக்குபை} என்ற பெயரில் உருவாகி வருகின்றது. இந்த நிலை நேர் மாற்றமாக இருப்பதோடு, ஐரோப்பா நாடுகள் எவை பலத்த முதலீட்டோர் கொள்கையினால் பயனுற்றதோ அக்கொள்கைகளையே எதிர்த்து புரட்சியை சந்திக்கின்றன.முக்கியாமாக கவனிக்கவேண்டியது ஐரோப்பா ,அத்துடன் பொருளாதார நிலை ஸ்திரமாக் இருந்து வந்த ஜெர்மனியிலும் இத்தகைய கலவரம் உருவாகின.  பல ஐரோப்பிய அரசாங்கங்களாலும், ஐரோப்பிய கூட்டுறவு சங்கங்களாலும்,ஐரொப்பிய மத்திய வங்கிகளினாலும் [இன்டர் நேஷனல் மானிடரி ஃபண்ட்] "சர்வதேச நாட்டின் பண்முறை சார்ந்த நிதி"  கழகத்தினாலும் விதிக்கப்பட்ட அரசாங்க விசேஷ சலுகை திட்ட மானியங்களின் அசாத்திய குறைவே காரணம், ஏனெனில் இக்கழகங்கள் யாவும் ஐரோப்பாநாடுகளை பொருளாதார ஆபத்திலிருந்து காப்பாற்ற  உதவியன [ஆகையால் பொதுநலத்திற்காக கட்டுப்பாடு விதித்தன]. 

இந்த சங்கடம் அதிகரிக்க காரணம் ,இந்த சூழ்நிலையில் பொருளாதார முன்னேற்றம் காணும் ஐரோப்பாவின் , பல ப்ரதேசஙகளின்  முக்கிய  கோரிக்கையான ,சுதந்திரம் சுய உரிமைக்காக  போராட்டமும் ஆகும். இந்த தேசங்களின் பட்டியல் பெரியது, அதில் இடாலியின் வெனெடோ,லொம்பார்டி ப்ரதேசங்களும் ; யுனைடெட் கிங்க்டொமின் ஸ்காட்லாண்டும், ஸ்பெயினில் இருக்கும் காடாலோனியாவும், பெல்ஜியமில் உள்ள ஃப்லாண்டர்ஸ், ஃப்ரான்ஸில் இருக்கும் கோர்ஸிகா ஆகும். வளமாகவும் செழிப்பாகவும் இருந்து இந்த நாடுகள் அவர்களது நாட்டின்   {ஜி.டி.பி}  "ஒட்டு மொத்த உள்நாட்டு பொருளாதார பலனுக்கும், வரி வசூலித்து அளிப்பதும், அதிகபட்சமாக இருந்தும் இன்நாடுகளுக்கு வளர்ச்சிக்கோ முன்னேற்றத்திர்கோ கிடைக்கும் திட்டங்கள் படுகுறைவேயாகும். இந்த சமானமின்மை, பலத்த வித்தியாசம் இந்த ப்ரதேசத்து  நாடுகளின் திருப்தியின்மைக்கு காரணம், அதுவே இன்நாடுகளின் சுதந்திர போராட்டத்திற்கும் காரணம் ஆகும். இவ்வாறு, சுருக்கமாக சொல்லப்போனால், பொருளாதார வீழ்ச்சி ஐரோப்பா மண்டலத்தின்  விரிசல், உடைதல் மட்டும் அல்லாமல் , ஐரோப்பா நாடுகளில் இருக்கும் பல ப்ர்தேசங்கள், மாகாணங்கள் பிரிந்துவிடும் என்று நம்பப்ப்டுகிறது. 

அமெரிக்க  டாலரின் மதிப்பு நிலையற்ற நிலையில் ஐரோப்பா யூரோவும் நிச்சயமில்லை. மிகப்பெரிய வேலை வாய்ப்பின்மை,வறுமை, இதோடு இணைந்து ஐரோப்பா பொருளாதார வள்ர்ச்சிக் குறைவு ஒரு  பலத்த பொருளாதார பின்வாங்கும் நிலையையே குறிக்கிறது, அது ஐரோப்பா ப்ரதேசத்தை மூழ்கடிப்பதோடு ஐரோப்பா கண்டத்தையே மூழ்கடித்துவிடும். இதன் பின் விளைவினால் இந்திய ரூபாயின் மதிப்பு பலத்த அடிபட்டு பெரும் வீழ்ச்சியை ககண்டுள்ளது . அமெரிக்கா டாலருக்கு எதிரில் இன்று ௫ 58.5க்கு மேல் ஆகியுள்ளது.

மூள லேக -



                                                            || ஹரி ஓம் || 


Tuesday 4 June 2013

உத்தரேத் ஆத்மனா ஆத்மனம்[उध्दरॆत आत्मना आत्मनम्]

|| ஹரி ஓம் ||

தன்னைத்தானே முன்னேற்றம் காண்பீர்
சிறு வயதிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஏதாவதுசெய்யத்தோன்றும், அதாவது ஏதாவது மாற்றம் தேவை. இந்த வேண்டுமென்ற மாற்றமானது அந்தந்த மனிதருக்குஅவனுடைய எதிர்பாற்ப்புள்ள முன்னேற்றத்தின் பாதையாகும். சிறு பத்து வயது சிறுவனிலிருந்து   70 வயதுள்ள தள்ளாமை நிலையிலும் அவரவர் நிலமையில், நாம் இதைவிட அதிகமாக நல்லது ஏதாவது செய்திருக்க வேண்டும், நமக்கு இதைவிட நல்லநிலை வந்திருக்கக்கூடும் என்று தோண்றிக்கோண்டிருப்பது இயல்பே. மனிதனின் இந்த தன்னுடைய நிலையில் அதிகமாக நல்ல மாற்றம் கொண்டுவர அவனது ஆசையே அவனது முன்னேற்றத்துக்குக் காரணமாக உள்ளது. ஆனால் பல முறை,  முயற்சிப் பாதையே மாறி விடுகிறது , பலமுயற்சி செய்தும் பயனில்லாமல் போவது, தவிர வேண்டாத விஷயத்திற்கு முயற்சி செய்ததாகவும், செய்வதாகவும் ,இவ்வாறு நினைவுக்கு வரும். நம் வாழ்க்கை அமைதியாக், திருப்தியாக,நல்லமாற்றத்துடன் விருவிருப்பான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்ற ஒவ்வொருவரின் ஆசையும் சகஜமே. ஆனால் அப்படி ஆவதே இல்லையே. ஆகையால் வாழ்க்கையில் அடிக்கடி அமைதியின்மை,சமாதானம் இல்லாமை அதோடு சக்தியிழந்து அசந்துபோன அனுபவமே வரும்.
பல கனாக்களை கண்டோம் , பல சங்கல்பம் செய்தோம் , முடிவுகள் எடுத்தோம், ஆனால் அதன்படி அதற்கு தகுந்த முயற்சியுடன் செயல்பட்டோம், ஆனந்தம் அடைந்தோம்  என்று நடப்பதாக தெரிவதில்லை. வாழ்க்கையில் எல்லாவித ஐஸ்வர்யங்களுடன் முன்னேற்றத்துடன், மலர்ந்து , அமைதி, த்ருப்தி சமாதானத்தின் ஆனந்தத்தைத் திருடவே [அனுபவிக்கவே ] ,கீழ்வரும் வாக்கியத்தின் அர்த்தம் புரிந்து கொண்டு  அதன்படி செயல்படுவது அவசியம்.  
          உத்தரேத் ஆத்மனா ஆத்மனம் என்பதற்கு மிக எளிதான மொழியில் தன்னைத்தானே முன்னேற்றம் காண்பீர் என்பது பொருள், விரிவாக பார்த்தால், என்னுடைய வளர்ச்சி அல்லது முன்னேற்றம் நானேதான் செய்து கொள்ளமுடியும். அது ப்ரப்ஞ்சத்தில்[ உலகில்]  இயல்பான விஷயங்களான வாழ்க்கை ஆகட்டும், அல்லது நான் என்ற அகந்தையை பூரணமாக விட்டுவிட்டு பரமேஷ்வரனுடன் ஒன்றிப்போகும் மோக்ஷமடைய ஆன்மீக வாழ்க்கைப் பாதையே ஆகட்டும்,  நான்தான் பாடுபட வேண்டும். நாம் இங்குதான் தவருகிறோம். நாம் நம்முடைய வளர்ச்சிக்கு எதுவரை நம்மை சுற்றியிருக்கும் நிலை, மற்றவனின் உதவி,மந்திர தந்திரம் அல்லது, விதியின் பயனை நம்பி இருந்தால் நம் கோரிக்கை என்றும் நிறைவேறாது. எந்த ஒரு உசிதமான ந்யாயமான,முயற்ச்சிக்குப்பின்னால் தம் வலிமையை தாமே பெற வேண்டும். மற்றவரை நம்பிய வாழ்க்கையும், புஸ்தக படிப்பு மட்டும் என்றும் எந்த விஷயத்தையும் முழுமையாக சாதிக்காது. நமது சித்தம் நமது பாக்கியம் என்பது  போல் தன்னையே நம்பும் ஸ்வாவலம்பி [சுய நம்பகன்] ஆக சித்தமாவது அவசியம். எவர் ஸ்வாவலம்பி இல்லையோ அவன் ஊனமுற்றவனைப் [ physically challenged] போல் ஆவான்,அகையால் இயலாதவனும் ஆகிறான். "ஹெலன் கெல்லர்" போன்ற அங்கத்தில் பல ஊனங்கள் கொண்ட பெண், அவளது தன் நம்பிக்கை [ஸ்வாவலம்பி] கூடிய சுயமான வாழ்க்கைக்கான முயற்சியே உலகத்தையே ஊக்குவிக்கும் உதாரணமாகும். அப்படியிருக்கையில் எல்லாம் நன்றாக இருக்கும் திடகாத்திரமான நமக்கு ஏன் இயலாது?. நீங்கள் சொல்வீர்கள் ஹெலன் கெல்லருக்கு அவள் நிலையிலிருந்து வெளியில் கொண்டுவர அவளுடைய ஆசிரியை இருந்தார்களே?  ஆம் ,சரிதான். அங்க ஊனம் என்ற நிலமை அவளது அடக்கு அளவுகோலாக[Limitation] இருந்தும், முயற்ச்சி செய்ய ஆயத்தம் கொண்ட ,அந்த சிறுமியை ஏதாவது ரூபத்தில் ஆன்மீக சக்தியாக[பரமேஷ்வர சக்தியாக] கடவுள் க்ருபைதான் உதவியிருக்க வேண்டும். அந்த விடாமுயற்சி உள்ள ஊனமுற்ற சிறுமிக்கு ஆன்மீக அன்பே, கடவுள் க்ருபையே அந்த ஆசிரியையின் ரூபத்தில் அவதரித்திருந்தது. இல்லை கடவுள் க்ருபை, பரமேஷ்வரரின் பரிவு, ஆன்மீக அன்பு அங்கு வரவேண்டியதாயிற்று எனலாம்.
       
         முன்னேற்றம், வளர்ச்சி என்றால் உணமையாக என்ன?.பாபத்திலிருந்து [விடுதலை] முக்தி?, அதிக புண்ணியத்தின் ப்ரபாவம்[சேகரிப்பு] ,  ஏழ்மையிலிருந்து பணத்தை நோக்கி நடை, அநியாயத்திலிருந்து  நீதிப்பயணம், அல்லது மனம் தளர்ந்து நொந்து இருத்தலிலிருந்து சாமர்த்தியசாலியுமாவது,  என்று கூறினால் ,அதில் ஒன்றுகூட உண்மையில்லை. வாழ்க்கை வளர்ச்சி ,முன்னேற்றம் என்றால் ஆன்மிகப்பாதை மேற்கொண்டு , அதாவது , சத்தியம், அன்பு வழியில் சென்று ஆனந்தம் அடைய கிடைத்த அதிகாரம்[வாய்பு] ஆகும். ஆனால் சத்தியம் என்றால் என்ன? அன்பு என்றால் என்ன என்று தெளிவாக புரிந்து இருக்க வேண்டும். சத்தியம், வாஸ்தவம் இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். நான் சத்தியமே பேசுபவன் என்று வைத்துக்கோள்வோம். என்னிடம் ஒரு பெண் ஓடி வந்து, என்னை சில முறடர்கள்[குண்டாக்கள்] துறத்தி வருகின்றனர் உங்கள் வீட்டில் ஒளிந்து கொள்கிறேன் என்கிறாள் . அவளை ஒளிந்து கொள்ள சொல்லிவிட்டு, அந்த முறடர்கள் என்னை வந்து  கேட்க , சத்தியம் பேசுபவன் என்று,  அவளை பற்றிய வாஸ்தவத்தை சொல்லியிருந்தால் அது சத்தியமே ஆகாது. அதுவே பலாத்காரமாகும். கணடனத்துக்குறியது. அபவித்ரமான, வெறுக்கத்தக்க சம்பவத்திற்கு காரணமாகிவிடுவேன். அங்கு பெண்ணை காப்பதற்கு சொல்லும் பொய் சத்தியமே ஆகும்.  சத்தியம் என்பது பவித்ரத்தை காப்பதோடு,  பவித்ரத்தை  தயார் செய்கிறது. அது போன்ற சத்தியம்தான் எல்லாவற்றிர்க்கும் மேலானது. தன்னை த்தானே சத்தியம் பேசுவது நல்லது . அதை நாம் யாவரும் செய்வதில்லை.நாம் நம்மிடமே பொய் சொல்லிக்கொள்கிறோம். நம்முடைய நிலை, நம்மை சுற்றியிருக்கும் நிலையை சுட்டிக்காட்டி நம் புத்தியை நொண்டிச்சாக்குக்கு வலுக்கட்டி ஆமோதிக்க வைத்து, இங்கேயே நாம் முன்னேற்ற, வளர்ச்சிஅடையும் ஆற்றலை இழந்து விடுகிறோம். "நோண்டிச்சாக்கு"[ தேவையில்லா காரணம்]  என்னுடைய முழுவழ்க்கையை நாசம் செய்யும் மிகப்பெறிய அஸ்திரமே ஆகும்.
       எவன் தன் குற்றத்தை அறிந்து, அதை பொருட் படுத்தாது அதை திருத்த கஷ்டப்படுகிறானோ அவன்தான் வெற்றியடைந்தவன். பிறகு அவன் கோரிக்கை, பணம், கீர்த்தி,புகழ் அதுவே ஆதிக்த்திற்காகவோ  அல்லது பரமாத்மாவை அடைவதற்காகவே இருக்கட்டும், வாழ்க்கை பயணத்தில் ,  அன்பு இல்லை யெனில் , சத்தியம் நொண்டியாகவிடும். 
அன்பு என்பது , எதிர்ப்பார்ப்பு, லாபம் இல்லாத பரிவு,ஆறுதலேயாகும். இந்த அன்பே உலகத்தில் எல்லாவற்றிலும் வலிமையானதாகும். அன்பின் வலிமையின் முன் உலகில் எந்தவித எதிர் சக்தியான, துன்புருத்தும், ஹிம்சை செய்யும், ஸம்ஹாரம்  செய்யும் சக்திகள் தோல்வியே  அடையும். என்னுடைய உலகம்[ப்ரபஞ்சம்] அதாவது குடும்பம்[க்ரஹஸ்தாஸ்ரமம்], அன்பு, பரிவு காட்ட கற்றுக்கொள்ள எல்லாவற்றிலும் பெரிய, ஆனாலும்  மிக எளிதான காரியப் பள்ளியாகும்.  ஆனால் அங்கும் நமக்கு சிறிது மானபங்கம், அல்லது மனதுக்கு விரோதமான செயல்பாடு ,செயல்களினால், சிலரிடம் இருந்த பந்தம் , பாசம், முறியக்கூடும். இது  வீட்டில் இருக்கையில், வீட்டுக்கு வெளியிலோ கேட்கவே வேண்டாம். அங்கு சின்னச்சின்ன விஷயங்களுக்கு என்னுடைய , சகவாசம், சுற்றுச் சூழலில்  த்வேஷம்,வெறுப்பு , கோபம், ஆக்ரோஷம் மிகுந்திருந்தால் ,அவை என்னுடைய மூச்சோடு[ ஸ்வாஸத்தோடு] என்னுடைய வாழ்க்கையிலேயே நுழைந்து கொண்டிருக்கும். அதன் விஷத்தை நாமே அனுபவிக்கிறோம்.
         மனதார அன்பு காட்ட , அன்பு செலுத்த முயலுங்கள், அதோடு பவித்ரமான பாதையை விடாதீர்கள்.பிறகு உலகமே உமதாகும். காரணம் இந்த பரமாத்மாவின் ராஜ்யத்தில் சுதந்திர குடியரசே உள்ளது. குடியரசில்  எவ்வாரு ஒவ்வொரு குடிமகனும் ஆளுனர் ஆகிறான்,ஆள்பவரையும் தேர்ந்தெடுக்கிறான் , அது போல் ஒவ்வொருவனும் தன் ப்ராரப்தத்தை நடத்திக்கொள்கிறான்.. பரமாத்மா , பரமேஷ்வரன், ஒவ்வொரு  மனிதனுக்கும் கர்ம ஸ்வதந்த்ரயம் அதாவது செயல் செய்ய சுதந்திரம் அளித்திறிக்கிறான். மனிதனின் குடியரசு அவ்வாறு காக்கப்படுகிறது. அதைவிட , பலமுறை அதிகமான மனித உறிமை சுதந்திரம், வாக்களிக்கும் சுதந்திரம், வற்புருத்தும் பேச்சுறிமை சுதந்திரம்  கடவுள் அருளியிருக்கிறார். ஆனால் மனிதனின் குடியரசில் எந்தவிதமான மக்களளொ, ஜனங்களோ, அவர்கள் வாக்குறிமை சுதந்திரத்தின் சரியான உபயோகத்தை பொருத்துதான் அவ்வாரான அரசாங்கமும் அவர்களுக்கு அமைகிறது.
       அதேபோல் எப்படி ஒருவன் அவனது சத்திய நெறி,அன்பு நெறியோ அவ்வாரே ,அவனது விதிப்பயனும் அமையும். இப்போது பாருங்கள், நாம் சரிவர, வாக்களிப்பதில்லை, அவ்வாரே அளித்தாலும், ஒரு குறிக்கோளோ, மதிப்போ இல்லாது, புரியாது தெரியாது  செய்து விடுகிறோம், அதன் விளைவு நாட்டின் நல பல ஆதிக்கம் வேண்டாதவர்கள், தப்பானவர்கள் கையில் சிக்கக்கூடும். அதேபோல் என் வாழ்க்கையில் தவரான கொள்கைகள், நடத்தைகள் , தெளிவாக இல்லாததால் என்னுடைய வாழ்க்கை  கஷ்டமான நிலைக்கு இறையாகிறது.
             ப்ராரப்தம்[விதிப்பயனை]விட, புருஷார்த்தம் மேலானது. அதற்கு ஒத்துணையாக வலிமையளிக்கும் சத்தியம், அன்பு என்ற பரமேஷ்வர தத்துவத்தை விட்டுவிலகினால் இது ஒருபோதும் நடவாது. எந்த குடியரசு நாட்டில், அப்பாடா, நாங்கள் வாக்களித்துவிட்டோம், காரியம் முடிந்தது. எங்கள் ஒவ்வொரு தேவையும் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று  குடிமக்கள் சொல்வதாயின் அந்த நாடு வெரும் சிறிப்பதர்கேற்ற சர்கஸ் ஆகும். அதே போல் "அசேல் மாஜா ஹரி தர் தேயீ காட்ல்யாவரி" என்ற மராத்தி கவிதையின்  பொருள் எனது பகவான் பார்த்துக் கொள்வான், என் அதிர்ஷ்டம் முன் என்ன நடக்கும் என்ற எண்ணம்[தோரணை] என் முழுவாழ்க்கயையும் அவஹேலனத்துக்கு [ஏளனத்திற்கு] பலி ஆக்குகிறது.
        தன் வாழ்க்கையின் கூனல், குறுகல் ஒதுக்கிவிட்டு உணமையான சுயவாழ்க்கைதாரி [ஸ்வாவலம்பி] ஆகவேண்டுமென்றால் உண்மை[சத்தியம்], அன்பு கையாண்டு பரமேஷ்வரரே எனக்கு ஆதாரம் என்ற  திட நம்பிக்கை உடலில்  ஊற வேண்டும். ஆனால் சமூகத்தில் என்ன காண்கிறோம் ? பரமாத்மவை நாம் நம் ஊனுகோலாக ஆக்க முயல்கிறோம். உங்கள் பலஹீனத்தைப் போக்க  பரமாத்மா ,பரமேஷ்வரர் வெரும் ஊனுகோலோ, ஊனமூற்றோர் பயன் படுத்தும் தள்ளுவண்டியோ இல்லை என்று புரிந்து  கொள்ள வேண்டும். சத்தியம் , அன்பு இல்லாது செய்து வந்த அல்லது செய்துவரும் சேவை , செயல், செயல்முறை , பக்தி என்ற நாடகம் அதுவே ஊனமுற்றோர் தள்ளு வண்டியோ, ஊனுகோலோ  போல் ஆகும். அதன் உபயோகம் நமக்கு அதிகமான ஊனத்தையே தரும். ஆகையால் சத்தியம், அன்பின்  வழியில் செய்த பக்தியும் சேவையும் நம்மை பூரணமாக [ஸ்வாவலம்பி] முழுமையாக சுயநம்பிக்கையுடையவன் என்று நமக்கு என்றும் வெற்றியே தரும்.
பகவத் கீதை :" மூகம் கரோதி வாசாலம், பங்கும் லங்கயதே கிரிம்,
               யத்க்ருபா தம் அஹம் வந்தே, பரமானந்த மாதவம்"
               
              பொருள்     
               ஊமை பேசுகிறான், முடவன் மலையேறி தாண்டுகிறான்
               எல்லாம் உனது க்ருபையில், ஹே பரமானந்த மாதவா
               உன்னை ஷரண்புகுந்து  வணங்குகிறேன்."            

|| ஹரி ஓம் ||

"நான் அநிருத்தன்"

|| ஹரி ஓம் ||

 "நான் அநிருத்தன்"
           

             நான் அனேகமாக என்னுடைய 50 வது பிறந்த நாளில் வெளிவரயிருக்கும் விசேஷ பத்திறிகையில் என்னைப்பற்றியே
எழுதிக்கொள்ளும் முதல் இதழாசிறியர் ஆவேன். என்னுடைய பாட்டி [அம்மாவழி] சின்னவயதிலிருந்து என்னை, இவனா? எப்போ என்ன செய்வான் என்று தெரியாது என்பாள்.என் தாய் என்னை "அதிசய ஆதித்தன்" என்று சொல்லுவாள். ஆகையால் எனது சிறுவயது அதிசயிக்கும் வித்தியாசமே வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
           பள்ளி கல்வியிலிருந்து வெளி வந்தவுடன், நாம் வாய்பாடு என்று சொல்லும் சாதாரண பெருக்கல் கணக்கை  அதாவது 1x1=1, 
1x2=2 என்பதை மறந்து விட்டு , இந்த வாய்பாடான,  நான்xஒன்று =நான், நான்x பத்து= நான்,  என்பது சுலபமாகவே வரும்,காரணம் நான் என்பது பத்து திசைகளிலும் குதிரை மேல் உட்கார்ந்து எப்போது, எப்படி எகிறும் என்று தெரியாது. நான் இப்படி,நான் அப்படி, நான் இப்படி இல்லை, நான் அப்படி இல்லை, எனக்கு இது வேண்டும், எனக்கு அது வேண்டாம், நான் இது செய்தேன், அது செய்யவில்லை, இப்படி பல வடிவில். பலரூபத்தில் இந்த ஒவ்வொருவரின் "நான்" கூத்தடித்துக் கொண்டிருக்கும். இந்த அநிருத்தனோ சிறுவர்கள், குழந்தைகளின் "கூத்துக்கும்" ஊக்குவிக்கும் களிப்பரங்கத்தின் தோள் கொடுக்கும் தலைவன். அவ்வாரு இருக்க இந்த அநிருத்தனின் "நான்" ஒன்றும் செய்யாது இருக்கமுடியுமா?. "இதுதான் நான்  அதுவே நான் தான்"

நான் இப்படி  இருக்கிறேன், நான் அப்படி இருக்கிறேன்:
நான் எப்படி இருக்கிறேன் அது எனக்கு மட்டும் தான் தெரியும்.  நான் எப்படி இல்லை என்பது எனக்கு தெரியாது. அந்தந்த நிலையில் இருக்கும் மனிதர்களை பொருத்து இல்லை,அந்தந்த நிலவரத்தை பொருத்தும் இல்லை. பக்கத்தில் இருப்பவனோ, நிலவரமோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், நான் அப்படியேதான் இருப்பேன். காரணம் நான் எப்போதும் நிகழ்காலத்திலேயே உலாவுகின்றேன். நடந்து  கொண்டிருக்கும் வாஸ்தவத்தை எப்போதும் நழுவ விடுவதில்லை. கடந்த காலத்தின் விபரம்[தகவல், ஞானம்], ஞாபகம் எனக்கு என் நிகழ்கால்த்திற்கு ஒரு பாடம், அனுபவம் போன்றது, வருங்காலமோ அதன் கணிப்போ இதே நிகழ்காலத்தில் எனக்கு விழிப்புணர்வு, ஜாக்கிரதையுடன் செயல்பட எச்சரிக்கை. அதுதான் என் சுபாவம்.

நான் கெட்டவனா நான் நல்லவனா?
நான் திறந்த மனத்துடன் இதை உலகத்துக்கு அற்பணித்து விட்டேன்.அதுவே எப்படி வேண்டுமானாலும், தீர்மானிக்கட்டும், ஏனெனில்,மற்றவர் என்னநினைக்கிறார்கள் என்பது எனக்குக் கவலை இல்லை. என்னுடைய தத்தகுருவும், காயத்ரி மாதாவும் நான் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படியே இருப்பது எனது ஆயுளின் ஒரே கோரிக்கை. அவர்களது அன்பினால் மட்டும் அல்லாது, நான் அவ்வாரு வளர்க்கப்பட்டேன்.

நான் இதுவும் அல்ல நான் அதுவும் அல்ல:
நான் எதுவாக இல்லை, எங்கே இல்லை, எப்படி இல்லை,உண்மையாக நான் அறியேன். ஆனால் எந்த நிபந்தனை,நிலமையில் நான் இல்லை என்பதை நன்கு  அறிவேன். அதுவே என் பயணத்துக்கு வெளிச்சமாகும்.

எனக்கு இதுவே வேண்டும், எனக்கு அது தேவை இல்லை:.
நான் பக்தனின் காரணமும், விளைவும்  ஆமோதிக்கிறேன்,அரசியலை வெருக்கிறேன். நான் சேவை செய்வதை விரும்புகிறேன், பதவியை அல்ல. நான் பக்தர்களின் அன்பின் சிம்ஹாசனத்தில் அமர்கிறேன், ஆனால் ஆதிக்கம் வேண்டாம். நான் அஹிம்ஸயை ஆதரிக்கிறேன்,கோழைத்தனத்தை கொப்பளிக்கிறேன். எனக்கு திறமை ஆற்றல் முழுமையாக வேண்டும், சூதோ, சுரண்டலோ பிடிக்காது. அரசாங்க ஆதிக்கம் ஆதரவு உண்டு, வன்முறை கண்டனத்துக்கு உறியது. நான் ஒவ்வொரு பரமனின் பக்தனுக்கு சேவகனாக இருக்க விரும்புகிறேன்,  ஆனால் ,போலி , கபட நாடகம் ,மூடநம்பிக்கை வெருக்கிறேன்.

நான் யாரையும்  தேடி, நாடிப் போவதில்லை என்பது பலர் கோபத்துக்கு காரணம். நான் யாரிடமும் எதுவும் பெறவேண்டாம் ,கொடுக்கவும் வேண்டாம். அப்படியிருக்கையில் நான் யாரை பார்க்க வேண்டும்? நான் நண்பர்களை சந்திக்கிறேன். காரணம் "சுத்த சொந்தமே, நட்பே. அதாவது கேட்க கொடுக்க எல்லாவற்றிர்கு  அப்பார்ப்பட்ட காந்தம்,அதுவே பந்தம். இதே காரணத்தினால்  சந்திக்கிறேன் .இந்த சந்திப்பு சுத்த அன்பு, பாசத்தினால் ஆனது. அதற்கு அன்பைத்தவிர எதுவும் வேண்டாம். எனக்கு அந்த கொடுக்கல் வாங்கல் சர்ச்சை வேண்டாம். ஞானம் என்ற பேரில் காலியான ,பகட்ட ஆரவாரம் வேண்டாம். ஞானம்  சுயமுயற்சியால் பெற்று .வெற்றி கண்டு சுயநலமில்லா செயல்களுக்கும் ,சமூகத்தின் வளர்ச்சிக்கும் உபயோகமாக இருத்தல் வேண்டும்.

நான் இதை செய்தேன், அதைசெய்தேன்: 
என்னுள் இருக்கும் நான் செய்யவில்லை. அது எவ்வாறு? நான் செய்யவில்லை ஆனால் "இல்லையே-நான்" செய்து தருகிறான், செய்விக்கிறான், இதுவே என் முழுமையான நம்பிக்கை. அப்படியானால் என்னுள் இருக்கும் "நான்" செயலிழந்து இருக்கிறதா? அப்படி இல்லை. அநிருத்தனுள் இருக்கும் அந்த " நான்" ஸ்ரத்தாவான்களின்[பக்தர்களின்]  வாழ்க்கை பாதையை "இல்லையே -நானிடம் கொடுத்ததை கவனித்து, கண்காணித்து, ப்ரவாஹத்தை தடுத்து நிருத்தாது இருக்கவும், நதி காயாது இருக்கவும், தேக்கப்பட்டதை விடுவித்து அந்த "இல்லையே -நான்" என்பதை, பக்தர்களின் வாழ்க்கை ப்ரவாஹம் ஓடிக்கொண்டே இருக்க இது "இல்லையே -நான் "[பரமாத்மாவின்] என்ற அன்பு  வாழ்க்கை ப்ரவாஹத்தை நிருத்தாது , பாய்ந்து கொண்டு இருக்கவே என் முயற்சி. இப்போது ,சொல்லுங்கள் இதில் ஏதாவது எனதாகுமா?

நான்  சத்தியம், அன்பு , ஆனந்தத்தை மதிக்கிறேன், ஆதரிக்கிறேன். ஆகவே , பொய், துக்கம் தானாகவே கண்டனத்துகுறியது. இது இயல்பாகவே நடக்கிறது.ஏனெனில் பிறந்ததை ஒட்டிய இயற்கையான, சுயமான எந்தவித ஊக்குவிப்பும் இல்லாத பாகம் ஆகும் என்பதை குறிக்கிறது. ப்ரபு ராம ச்ந்திரரின்  மரியாதை பாதை, எதிர்பார்பில்லா சேவை[நிஷ்காம்ய கர்மா],பக்தி மார்கம்,சுயமரியாதை அடிவாரமாக கொண்டு இருப்பது ,  எனது கருத்து. நான் சொரணை அற்றவன் அல்ல, அன்பால் ஆடிவிடுகிறேன், அன்பினால் இணைகிறேன். என் செயல் அன்பினால் அலங்கரித்தவை. நான், பவித்ரமான, பரிசுத்தமான,  சத்தியம், உண்மையையே நம்புபவன்,வெளிப்படை வாஸ்தவத்தில் மட்டும் அல்ல.

 நான் என்ன செய்ய விரும்புகிறேன்? நான் என்ன செய்யப் போகிறேன்?  நான் ஏன் இந்த இதழ் ஆசிரியர் கட்டுரையை  எழுதவேண்டும்? ஏன் உலக மஹா யுத்தம் பற்றி அவ்வளவு எழுத வேண்டும்?, நான் ஏன் ப்ரசங்கம் செய்ய வேண்டும்?. இது அனைத்துக்கும் பதில் எளிதானதே. இதயம் எப்படி துடிக்கிறது?. எப்படி நான் ஸ்வாசிக்கிறேன்? என்ற கேள்விக்கு பதில் போல்.
[உண்மையாக அதற்கு பதில் ஏதும் இல்லை]. ஆம் அதுவே பதில் ஆகும்.

நண்பர்களே தூய்மையும், அன்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கம் போல் ஆகும். அதைக் கொண்டே என்னை வாங்கிவிடலாம். வேறு எதுவும் செல்லாது. சொல்லப்போனால் என்னுள் இருக்கும் "நான்" அநிருத்தன் உங்களுடையவன்.உங்களுடையவன் மட்டும் தான். எப்போதும் என்னுடையதாக இருந்ததே இல்லை, இனி இருக்கவும் மாட்டேன், இது உறுதி. 
                                                                      நண்ப்ர்களின் நண்பனான  
                                                                        "அநிருத்தன்"  


|| ஹரி ஓம் ||