Showing posts with label Aniruddha Bapu. Show all posts
Showing posts with label Aniruddha Bapu. Show all posts

Friday 28 November 2014

"சீஸ்"[cheese] சைவ- பால் கட்டி, அசைவ - பால்கட்டி [ பரப்பு பண்டம்]

Vegetarian & Nonveg Cheese

சீனாவின் தின்பதார்த்தங்களுடன் இடாலி,லெபனீஜ், கோரியன் என்று பல வெளிநாட்டு பண்டங்கள் பாரதத்தில் ப்ரபலமாகி வருகின்றன. இத்தின்பண்டங்களில் முக்கால் விகிதம்  "பால்கட்டி"[cheese சீஸ்] உபயோகிக்கப்டுகின்றது. பால்கட்டி பாரதத்தில் பல வருடமாக கிடைத்து வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக பால்கட்டி கொண்ட பண்டங்கள்மீதான  விருப்பம் நம் நாட்டவர்கள் இடையே மிகவும் அதிகரித்துள்ளது. 
  
நமது ஸத்குரு பரம பூஜ்ய அநிருத்த பாப்பு செப்டம்பர்   25, 2014 அன்று  ஹிந்தியில்  செய்த ப்ரசங்கத்தில் சைவ பால் கட்டி, அசைவ பால்கட்டி பற்றி விளக்கம் அளித்தார். நமது காலை சிற்றுண்டியிலிருந்து,மதியம் கொரியல்களுடன்  இரவு உணவு வரை மய்யம் கொண்டுள்ள பால்கட்டியின் ரகம் , விதம் அது உற்பத்தி செய்யும் முறைகளை நாம் அறியோம்.  அது ஒரு சிலருக்குத்தான் தெரியும் என்பது ஒரு பரபரப்பான விஷயம் . இன்று இந்த பால் கட்டியானது மெல்ல மெல்ல ஸேண்ட்விச், பரோட்டா , கோஃப்டா, பாவ்-பாஜீ , தோசை, பக்கோடாம் ,  டோஸ்ட் , ஸாலாட்[பச்சை காய்கரி] , ரொட்டி ரோல்ஸ், பிஜ்ஜா, பர்கர் முதலியனவற்றில் மட்டும் அல்லாமல்   மும்பை வடாபாவையும் தாண்டி  நமது தினசரி சமயல், சாம்பார், ரசம் கரிகளில் கூட இடம் பிடித்துவிட்டது. மக்கள் வசீயம் ஆகிவிட்டனர். ஆகையால் இந்த "சீஸ்" என்னும் பால் கட்டியைப்பற்றி நாம் அதிகமாக அறிந்து கொள்வது அவசியாமாகிவிட்டது என்ற நிலையில் ,  இந்த "சீஸ்" [cheese] பால்கட்டி தயார் செய்யும் முறையை சுருக்கமாக பார்ப்போம்.   

"சீஸ்" பால்கட்டி , பாலிலிருந்துதான் தயாராகவேண்டும்.  பாலை கட்டியாக்க அதை இருக்க வேண்டும் , சுண்டவேண்டும். சிலசமயம் இம்முறையை விறைவாக்குவதற்கு , அதில் ஒரு விசேஷ பதார்த்தத்தை சேர்ப்பார்கள். அதன் பெயர் "ரெனெட்"[(Rennet)] ஆகும். (http://en.wikipedia.org/wiki/Rennet). இந்த "ரெனெட்" எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?

அது பசுமாட்டின் வயிற்றிலிருந்தோ  அல்லது அதன் கன்றுக்குட்டியின் அடி வயிற்றில் அகப்படும். இந்த "ரெனெட்" பசு, அதன் கன்று தின்றுவரும் புல் , பிண்ணாக்கு, போன்ற தாவர உணவு ஜெரிக்க்வைக்க கடவுள் கொடுத்த தன்மை பொருள் ஆகும். பசு அல்லது , கன்று உயிரோடு இருக்கையில் இதை எடுக்க இயலுமா? சிந்தித்துப்பாருங்கள். ரெனெட் உபயோகித்த சீஸ் உண்பவன் , பசு , கன்றை கொன்று தின்ன பாவம் தான் ஒட்டிக்கொள்ளும்.இந்த "ரெனெட்" உபயோகித்து தயார் செய்த சீஸ் தான் அசைவ சீஸ் ஆகும் , அது இல்லாதது சைவ சீஸ் ஆகும். 
பாரதத்தில் பால் பண்னைகளினால்  உற்பத்தி செய்யப்படும் பால்கட்டி  "சீஸ்" அங்காடிகளில் சைவ சீஸ் என்று கிடைக்கிறது, சில சர்வதேச நிருவனங்கள் பாரதத்தில் தயார் செய்தாலோ, அல்லது இரக்குமதி செய்யப்பட்ட சீஸ்களில் இந்த ’ரெனெட்’  இருக்க் வாய்புள்ளது. அதைத்தவிர  பல சர்வதேச நிருவனங்கள், இந்த ’ரெனெட்" உபயோகித்த  தகவலை பொருள் சிட்டையின் [label]மீது வேண்டுமென்றே மறைத்துவிடுகின்றனர். நமது பாரத சனாதன கலாசாரத்தில் ஒன்பது நியம நிஷ்டைகளில் , கோமாதா , கங்காமாதா, காயத்ரீ மாதா முக்கியத்துவம் வகிக்கின்றன. பசு பவித்ரம் , பரிசுத்தத்தின் அம்சம். இதை கருத்தில் கொண்டு எவெரவர் அசைவ சீஸ் சாப்பிட வேண்டாமோ அறியாது உண்ணவேண்டாம் , அது சைவமா அல்லது அசைவமா என்பதை பரிசீலித்து அறிந்து உபயோகிக்கவே இந்த தகவல். இதில் அவரவர் கொள்கை,  சாமர்தியம் , தற்காப்பு அடங்கியுள்ளது. அதற்கென்று "சீஸே..." சாப்பிடக்கூடாது என்பது அல்ல.--------- அநிருத்தா பாப்பு
ஹரி ஓம்  || ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ||  

மூள லேக -

Thursday 27 November 2014

ஸ்கந்த சக்ரத்தை பற்றிய தெளிவுறை.

Clarification of Skanda Chinha
"ப்ரத்யக்ஷ" என்ற தினசரி பத்திரிகை வாயிலாக நம்  பரம பூஜ்ய பாப்புவின் பக்தர்கள் அதை சம்பந்தப்பட்ட வெப்சைட்டின் இன்டர்னட்[இணயத்ததிலிருந்து] தெரிந்து கொள்ள முயன்ற வேளை எழுந்த சந்தேகத்தில் கீழ்வரும் ஸ்கந்த சக்ரங்களில் எது சரியானது எது சரியானது அல்ல என்பது கீழ்வருமாரு விளக்கப்ப்ட்டு இருக்கிறது.

                     
இரண்டு வித்தியாசமான வர்ணத்தில் முக்கோணம் ஒன்றின்மீது ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது [இதுவே சரியானது]



______________________________________________________________________________________________________



இரண்டு வித்தியாசமான வர்ணங்களில் இரண்டு முக்கோணங்கல் ஒன்றினுள் ஒன்று நுழைக்கப்பட்டு இருக்கிறது [இது சரியான ச்கந்த சக்ரம் அல்ல

                                                         ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ|| 

மூள லேக -
     




Thursday 28 August 2014

குருக்ஷேத்திரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

Independence Day celebrations at Aniruddha Gurukshetram 




ஆகஸ்ட்  15,2014. அன்று குருக்ஷேத்திரத்தில் சுதந்திர தின விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. அநிருத்தா அகாடமி  ஆஃப் டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் [அநிர்த்தா திடீர்   அபாய சேவை கழகத்தின்]   டி எம் வி என்று அழைக்கப்படும் அங்கத்தினர்கள் அறங்கேற்றிய அணிவகுப்பு பயிற்சிகள் மிக அற்புதமாக நடந்தேரியது.நான் இங்கே சில புகைப்படங்களை இணைக்கிறேன். மொத்தாமாக 163 , டி எம் வீ க்கள்  கொண்டாட்டத்தில் அணிவகுப்பு பயிற்சிகளில் பங்கேற்றனர்.

அதன் விவரம் பின் வருமாரு.

தேசியக்கொடி தாங்கியவர்  ------             சுஷாந்த் ஸின்ஹ் ராவுத்
குருக்ஷேத்ரம் கொடி பிடித்தவர் ----------       ப்ரேமவீரா கதம்
ஸ்கந்த த்வஜம் தாங்கியவர்      ------------      ப்ரீதிவீரா பாஸ்கர்
அணிவகிப்பின் சேனாதிபதி   ------------       தீபாலிவீரா ராவுத்
வீரர் குழு   ஓன்று  ---------------------------       அஞ்சலிவீரா சிங்க்
வீரர் குழு  இரண்டு -------------------------        ரூபேஷ் ஸின்ஹ் மட்கே
வீரர் குழு  மூன்று  ---------------------------        ரவீணாவீரா காவ்லே
வீரர் குழு நான்கு  ---------------------------         ப்ரவீண் ஸின்ஹ் நாயிக்
காப்பாற்று குழு ------------------------------         ஸாகர்ஸின்ஹ் பாடில்
கோஷ பதக்        ------------------------------       ஷலாகாவீரா  கோவல்கர்

இதன் விரிவான விமரிசனம்




ஹரி ஓம் ||  ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ|| 


மூள லேக -

Saturday 14 June 2014

சத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்புவின் உபாசனா.



தற்போது, பரம்பூஜ்ய ஸத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்பு நம்மை போன்ற எளிய  அனைத்து பக்தர்களுக்காக (ஸ்ரத்தாவான்களுக்காக) வழங்கும் பிரவசன் (ப்ரவசன்) கடந்த 3 வியாழக்கிழமைகள் முதல் ஸ்ரீ ஹரிகுருகிராமில் வழங்க வர முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். பரம்பூஜ்ய ஸத்குரு ஸ்ரீஅநிருத்த பாப்புவின் மீது அதிக அன்பு மற்றும் பக்தியுடைய பக்தர்களுக்கு (ஸ்ரத்தாவான்கள்)  கடந்த 3 வியாழக்கிழமைகளிலிருந்து பாப்புவின் தரிசனம் பெற முடியவில்லை என்பதால் பாப்புப் பற்றி விசாரித்தார்கள். அதற்கிணங்க, நான் அனைத்து பக்தர்களுக்கும் தெரிவிக்க விரும்புவது, பாப்பு   கடுமையான உபாசனா செய்வது இன்னும் சில காலம் நீடிக்கும் என்பதாகும். அவரது கடுமையான உபாசனாவினால் தான், வியாழக்கிழமைகளில் ஸ்ரீஹரிகுருகிராமுக்கு பாப்பு வராமலிருக்கிறார்.  நான் உண்மையில், எல்லா பக்தர்களுக்கும் தெரிந்திருக்க விரும்பிகின்ற  குறிப்பானது, வரவிருக்கின்ற நாட்களில் பரம்பூஜ்ய பாப்புவின் வருகையானது அவரது கடுமையான உபாசனாவை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பதாகும்.

ஹரிஓம்.       " நான் அம்பக்ஞன் ஆவேன்"

Wednesday 19 March 2014

நன்கொடை இப்போது ஆன்லைன் மூலம் அனுப்ப எல்லா இடங்களிவும் வசதி.

,உபாசனை மையங்களுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,குருபௌர்ணமி அல்லது ,அநிருத்த பௌர்ணமி போன்ற உத்ஸவங்களுக்கு பாப்புவின் தரிசனத்திற்கு வருகின்றனர்.அவர்கள் அந்த உத்ஸவ சமயங்களில் பரந்த மனத்துடன் பாப்புவிற்கு, ஏதாவது குரு தக்ஷிணையாக கொடுக்க விரும்புகின்றனர்.ஆனால் பாப்பு ப்ரத்யேகமாக ஒரு பூ,பழம் கூட வாங்குவ்தில்லை.பாப்பூ, யாராவது ,கொடுக்க விரும்பினால் அவர்கள் காணிக்கையாக நமது உபாசனா மையங்களிலோ அல்லது ட்ரஸ்டிலோ ,உத்ஸவங்களுக்கும் சேவைகளுக்கும் காணிக்கையாக தரலாம்.  

ஸ்ரீமத் புருஷார்த்த க்ரந்தராஜ்,முதன்காண்டத்தில் தானத்தின் மஹிமையைப்பற்றி பாப்பு விவரித்து எழுதுகிறார்." எல்லா யுகத்தில்லும்[ஸத்ய, த்ரேதா,த்வாபரம்,கலியுகம்]

ஈடு இணையில்லாதது தானத்தின் மஹிமை.கலியுகத்தில் தான்த்தின் மிக எளிய தர்மசாதனம் ஆகும்.ஆசார தர்மத்தில் தான்மே இன்றியமையாதது.உண்மையாக் தானத்திற்கு நிகர் ஏதுமில்லை..தாமே ,கண்கள்தானம், ரக்த தானம்,அங்க அவ்யவங்கள் தானம் செய்து ஜீவன்த்தை அற்பணியுங்கள்.ஞானத்தின் தானம், தனத்தின் தானம், சேவாதானம் செய்யவேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவே செய்யுங்கள் , ஆனால் செய்யுங்கள்.ஸ்ரீகுரு தத்தா நித்ய தாத்தா[ தருபவர்] ஆவார்[ அகையால்தான், தத்தா என்றழைக்கப்படுகிறார்.எவர் தானம் செய்கின்றனரோ அவர்கள் தத்தகுருவின் அன்பிர்க்கு,க்ருபைக்குப் பாத்திரமாவார்.ஸ்ரீ ஸ்ரீமத்ப்ருஷார்த்தம், க்ரந்தராஜ் ஸத்யப்ரவேஷ், பக்கம் 242ல் பாப்பு குறிப்ப்ட்டுள்ளார்.
ஸாயீ ஸத்சரிதமும் இதையே தெளிவாக்குகிறது.

தனம் தங்கவேண்துமென்றால் ,தானம் செய்யவேண்டும்,ஆனால் சின்னசின்ன விஷயங்களுக்கும், வேலைகளுக்குமே அது  செலவாகிவிடுகிறது.தானத்தினால் தர்மம் வளரும்,தர்மத்தினால் ஞானம் பெருகும்.இது சுயநலமாக தோஈன்றலாம் அனால் அதுவெ பர்மார்த்தத்திற்கு ஒரு வழி ஆனாலும் அதன்மூளம் மனம் நிறைவு காண்கிறது நிம்மதி கிடைக்கிறது.  
[ஸாயீ ஸத்சரிதம் அத்யாயம் 14,  வரி 113,114

இந்த நல்ல எண்ணத்தில் பக்தர்கள் பலர் நமது சங்கத்திற்கு நன்கொடை அனுப்ப ஆயத்தமாக உள்ளனர். உபாசனை மையங்களுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,வெளி நாட்டில் உள்ளவர்கள் நெறில் சென்று நன்கொடை அளிப்பது கஷ்டமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு
www.aniruddhafoundation.com ஊடக வேப்சைட் மூலம் தொடர்பு கொண்டு "பேமண்ட் கேட்வே"காணியல் ஆன்லைன் வசதிமூலம் நன்கொடை செலுத்தலாம். பாரதத்தின் எந்த எல்லையிலும் இந்தவசதி செய்து தரப்பட்டுள்ளது.அனால் அவ்வாறு செலுத்துபவரிடம் வங்கியின் சொந்தகணக்கு எண், டெபிட் கார்ட்,
க்ரெடிட் கார்ட், தைனர் கார்ட் உடையவர்களுக்கு மட்டுமே இது முடியும். 




 இதை ச்சொல்ல எனக்கு  ஆனந்த மாக இருக்கிறது. நமது , குழுமத்தின்[அறக்கட்டளையின்] மூன்று பெரிய திட்டங்களின் வேலை வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ள்து அவை: -  ஜுயி நகர், நவீ மும்பையில் செயலாற்றவிருக்க நம் நாட்டின் முதல் "இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜெரியாட்ரிக்ஸ் அண்ட் ரிஸர்ச் சென்டர்.[முதியவர்கள் மருத்தவ மையம் பரிசோதனைக் கூடம்]
   ஆளந்தி அருகாமையில் அமைக்கபபட்டுவர இருக்கும் "அநிருத்த தாமம்"
   வேர்வை சிந்த உழைக்கும் விவசாயிகளுக்கென்று கர்ஜத்-கோதிம்பே அருகில் நடந்துவரும் "அநிருத்தாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் க்ராம்விகாஸ்".
இந்த மூன்று முக்கிய்த்திட்டங்களுக்கும் உதவ விரும்பும் பக்தர்கள் " பேமண்ட் கேட்வேயின்"வாயிலாக இயன்றதை செலுத்தலாம்.
 ஸ்ரீ அநிருத்த ஹ்பௌண்டேஷன் டாட்காம் [www.aniruddhafoundation.com]மீது க்ளிக் செய்யவும்
பிரகு .க்ளிக் ஹியர் டு டொனேட் ஆன்லைன்[click here to donate online] மீது க்ளிக் செய்யவும்
அது கேட்கும் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் நிரைப்பி "டொனேட் நவ்" என்ற பொத்தானை க்ளிக் செய்து செலுத்தவும்.அதற்கு முன் விண்ணப்ப படிவத்தில்
உங்கள் பெயர், ஈ-மெயில்,மொபைல் நம்பர் மற்றும்,நன்கொடைத்தொகை இருப்பது மிக அவசியம்.க்ரெடிட், டெபிட் கார்ட் முறையில் எப்படியோ அவ்வாறே.
உங்களுக்கு காணியல் மூலமே ரஸீதும் அளிக்கப்படும்.
இதற்காகவே ,பக்தர்களின் எளியமுறைக்காக குமழத்தினால். நெட்பேங்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
பெரும்பாலான பக்தர்கள் இந்த "பேமண்ட் கேட்வே" வசதியினால் பயனுற்று,பயன்பெற்று ,இயன்ற நன்கொடை அளிப்பார்கள், அளித்து வருவார்கள் 

"ஹரி ஓம்"   "ஸ்ரீ ராம்"    " அம்பக்ஞ"


                                                                    

Monday 30 December 2013

தினசரி பத்திரிகை "ப்ரத்யக்ஷ"-புதுவருட ப்ரதி -2014 ப்ரசுரம் வெளியீடு

The Dainik Pratyaksha – The New Year Issue – 2014

பாரதத்தின் ஜனத்தொகை பெரும்பாலும் இளைஞர்களினால் ஆனது. அதுவும் தற்போது அதிகரித்தவாரே இருக்கின்றது. ஃபேஸ்புக் ,வ்ஹாப், யூட்யூப் போன்ற சகவாச சம்பந்த ஊடகங்களின்  பலத்த பாதிப்பு  இளைய சமுதாயத்தின் இடையே பரவலாக விரும்பப்பட்டதாக இருக்கிறது. அத்தோடு, கோடிக்கணக்கான அளவில் அதிகரிக்கும் இணையவாசிகள்[ இன்டர்னெட்டுடன் இணைந்துள்ளவர்கள்] சகவாஸ சம்பந்தப்பட்ட ஊடகங்களினால் ஏற்படும் பாதிப்புகளை  கட்டுப்ப்டுத்துவது கஷ்டமாகிவிட்டது.
     



அரசியல்வாதமில்லாத அற்புதப்பத்திரிகை
இந்த ஊடகம் {வழி, வாயில்}அல்லது மேடையானது நுட்ப அறிவியலை அதிக அளவில் பரப்பி தற்போது உலகத்தை ஆளுவதைமட்டுமல்லாமல் ஆதிக்கம் செலுத்திவருகின்றது என்பது தெளிவாவதோடு நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாக உள்ளது.

ஆகையால்  ஒரு பொருப்புள்ள நகரவாசியாக,இந்த ப்ரம்மாண்டமான ஆற்றல்மிக்க  வாயிலை [கருவியை] , புதுவிதமாகவும், ஜாக்கிரதையுடனும், பொருப்புடன் முதிர்ந்த முறையில் கையாளவேண்டும்.
இதையே குறிக்கோளாகக் கொண்டு"சகவாஸ சம்பந்த ஊடகங்கள்" -  தகுந்த உகந்த முதிர்ந்த உபயோகம்"
[ தெளிவான ஜாக்கிறதையான  உபயோக விதிமுறைகள்] என்ற தலைப்பை முக்கிய மத்தியத் தகவலாக கொண்டுள்ள " ப்ரத்யக்ஷஜனவரி 1 ,2014 அன்று புதுவருட ப்ரசுரத்தை வேளியிடுகிறோம்.

"அம்பக்ஞ"

Wednesday 18 December 2013

மத்திய கிழக்கு நிலவரம்- பாகம் 2 [ உலகம் ஆட்டம் கண்டுள்ளது]

Middle East Situation – World at the Crossroads (Part II)


[பாகம் 1, அக்டோபர் 5,2013ன் தொடர்ச்சி] உலகத்தின் இந்த பாகத்தின் மேல் ரஷ்ஷியா, அமெரிக்கா இருவருக்கும் ஒரு கண்தான். ஸிரியாவின் தனக்கு சாதகமாக  நடந்து வரும் அரசு, ரஷ்ஷியாவிற்கு முக்கியம். ரஷ்ஷியா தனது மிகவும் அவசியாமான, முக்கியமான ராணுவ தளத்தை ஸிரியாவின் துறைமுகப்பட்டினம் டார்டஸில் அதை ஒரு கட்ற்படை நிறுவலாக பராமரித்து செயலாக்கியும் வருகிறது, ஏனெனில் இது ரஷ்ஷியாவின் பழைய ஸோவியட் யூனியனின் வெளியில் இருக்கும் ஒரே ஒரு ராணுவ தளமாகும். ரஷ்ஷியா  தற்போது ஸிரியாவின் ஆஸாத்  அரசுக்கு ஆதரவளிப்பதற்கு இதுவே முக்கிய காரணம். அதே சமயம்  ஸுன்னி முஸ்லிம் கொண்ட அமெரிக்காவை ஆதரித்து , நம்பி வாழும் இதர நாடுகள் ,ஆஸாத் அரசை கவிழ்க்க தீவிரமாக உள்ளன. கத்தார்,  ஐரோப்பாவிற்கு  இய்ற்கை எரி  வாயு வழங்க ஆயத்தமாக உள்ளது. அது அதற்கு வேண்டிய கத்தாரலிருந்து  ஐரோப்பா கொண்டு செல்ல குழாய் வழி நிறுவ திட்டமிட்ட நிலையில், இக்குழாய் ஸிரியா வழியாகவே செல்லவேண்டும். ஆனால் ஸிரியாவின் பாஷர் அல் ஆஸாத் இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த கத்தாரி -  ஐரோப்பா குழாய் திட்டத்தை நிராகரித்தது இருக்கையில்  அதே போன்ற நூறுகோடி டாலர் [பத்து  பில்லியன் அமெரிக்க டாலர்] மதிப்புள்ள திட்டத்திற்கு  இரான், இராக்குடன் சேர்ந்து , கடந்த வருடம்  ஜூலையில் கையொப்பம் இட்டுள்ளார் ஸிரியாவின் பாஷர் ஆஸாத். கவனிக்கவேண்டியது என்னவென்றால் ஸிரியாவின் அரசு ராணுவத்திற்கும் , கலகஞ்செய் எதிரியினருக்கும் நடந்த கலவரமும்,  ஸிரியா அரசு கையொப்பமும் தற்செயலாக சேர்ந்தே நடந்துள்ளன.  கத்தாரின் விருப்பம் தெரிவிக்கும் அதே சமயம் ஸௌதி அரேபியாவும் ரஷ்ஷியாவுடன் மிகத்தீவிர ஆலோசனை நடத்தி தன்னையும் ஒரு உருப்பினராக சேர்த்து கோள்ள வினவியது. ஸௌதி அரேபியாவும் ஒரு நட்புக்குறிய அரசுடன் செயல்பட ஆவலாய் இருக்க காரணம் அது அதன் எரி பொருள் வாணிகம் பாதிக்காது ,தனது கை ஓங்கி  இருக்கவே ஆகும்.

தொன்று தொட்டு ரஷ்ஷியாதான் ஐரோப்பாவிற்கு எரிபொருள்கள் வழங்கி வந்தது. ஐரோப்பா நாடுகள் , ரஷ்ஷியா இந்த எரிபொருள்களை  ஒரு ஆயுதமாக பயன் படுத்துகின்றது என்று குற்றச்சாட்டினர். ஆகையால் ரஷ்ஷியா மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா கொண்டு செல்ல அனுமதிக்க அது கடைசி தேசமாகத்தான் இருக்கவேண்டும் [தன் வ்யாபாரத்தை எவர்தான் விட்டுக் கொடுப்பார்கள் . ரஷ்ஷியா,  ஸிரியாவின் பாஷார் ஆஸாத் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு முழுமையாக அளிக்க க்காரணம் இதுவும் ஒன்று.  உலகத்தின்  பல வலுவான தேசங்களின் இந்த தீவிர குழப்பமுள்ள சுயநல தனிப்பட்ட ஆர்வமே ஸிரியாவின் கலவர நிலவரத்துக்கு முடிவு காண்பது தூரத்து உண்மை எனலாம். தற்போதைய அமைதி நிலவரம் தற்காலிகமானதே. மத்திய கிழக்கு நாடுகளுடன், அமெரிக்கா, ரஷ்ஷியா ,இதர நாடுகளும் மெதுவாக இந்த விவகாரத்தில் ஈர்க்கப்படுகின்றன. ஐரோப்பாவின் அமெரிக்கா ஆதரிக்கும் யூ கே போன்ற தேசங்கள், ஜெர்மெனி, ஃப்ரான்ஸ்,இதாலி, டென்மார்க்,லக்ஸம்பர்க், ஸ்பெயின்,நெதர்லாண்ட்  அனைவரும் ஸிரியாவின் தஞ்சமடைந்தோருக்கு 430 மில்லியன்[43 கோடி] டாலர் அடமானம் வாக்குறுதி  தந்திருக்கின்றனர்.  யூ.கே யும் மூன்று மில்லியன் டாலர் தற தயார் என அறிவித்தது ,அவை ஸிரியாவின்  ரசாயன ஆயுதங்களையும்  அதன் வசதிகளையும்  அழிக்க உபயோகப்ப்டுத்தவேயாகும். எப்போதும் போல் சீனா, ரஷ்ஷியாவுடன் சேர்ந்து ஸிரியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல அமெரிக்காவின் ஸிரியாவை எதிர்த்து ஐனா சட்டசபையில் ஏவிவிட்ட தீர்மானங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. ஸிரரியாவின் மீது அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கு  சீனா கடும் கண்டனமும் ஏதிர்ப்பும் தெரிவித்தது. பேச்சு வார்த்தையே ஸிரியாவின்  இக்கட்டான நிலைக்கு தீர்வு காண வழி என்று திட்டவட்டமாக சீனா கூறியுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளின் கலவர நிலவரம் பாத்தியப்பட்ட நாடுகளுக்குமட்டுமின்றி அது கிட்டத்தட்ட 80% எரி பொருள் மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருக்கும் நம் பாரத தேசத்திற்கு ஒரு பலத்த சவாலாக உள்ளது. நமக்கு பெருமளவு எரிபொருள் வழங்கிவந்த  இரானின் மீது அமெரிக்கா பல நிபந்தனை விடுத்து கட்டுப்ப்டுத்திவருகிறது. இரான்  பாரதத்திற்கு மூன்று மாத அவகாசத்துடன் ஸௌதி அரேபியா, இராக்கைவிட விலை குறைவாக அளிக்கின்றது. அது பணம் செலுத்துகையை இந்திய ரூபாயிலும் பெற்றுக் கொள்கிறது. ஆகையால் பாரதத்திற்கு சர்வ தேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னியதேசத்து மாற்ருப் பணம் மிஞ்ஜுகிறது. ஆனால் அமெரிக்காவின்  இரானின் மீதுள்ள கட்டாய நிபந்தனைகள், பாரதத்திற்கு இரானிலிருந்து எரிபொருள்  இரக்குமதி குறைத்து விட்டது. அதேபோல் ஸிரியாவும் பாரதத்திற்கு அதன்   எண்ணை நிலத்தில்  பாத்தியதை வழங்கியுள்ளது. அங்கு ஸிரியாவில் 14 கடலோரம் மேல்  6 கடல் நடுவே எரிபொருள் எண்ணை செமிப்பு கிணருகள் உள்ளன. ஆனால் தற்போதய கலவர நிலவரத்தினால் பாரதத்தின் எண்ணை கம்பெனிக்கள்,  தற்காலிகமாக தனது உற்பத்திகளை நிருத்திவைத்துள்ளது. ஓ.என் ஜீ.சி, பாரத் ஹெவி இலெக்ட்ரிகல்ஸ் இவையும் இந்த திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. பாரதத்திற்கு அங்கு ஒரு இரும்பு ஆலையிலும் பங்குண்டு. 

உலகின்  மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் இருக்கும் தேசங்களின் அரசியல் தடுமாற்றம் , கலவரங்கள், எரிபொருள்கள். கச்சா எண்ணை ஒரு கட்டுப்பாடில்லாத விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பு மிகச்சறிவை க்கண்டு ,எரிபொருள் இரக்குமதியை விலை அதிகரித்திருக்க மற்றொரு காரணம்.எரி பொருள்கள் விலை உயர்வு ,முன்பே வீழ்ச்சியடைந்துள்ள பாரதத்தின் பொருளாதாரத்திற்கு மேலும் சவாலாக இருக்கும். எரிபொருள்  எண்ணை இரக்குமதியின் மதிப்பு பாரதத்தின் இரக்குமதியின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆய்வாளர்களின் கணிப்பு படி,  ஸிரியாமீது எந்தவித தாக்குதலும் எண்ணை எரிபொருள் விலையை ஒரு பீப்பாய் இப்போதைய 115 டாலர் லிருந்து 150 அமெரிக்க டாலருக்குத் தள்ளிவிடும். எரிபொருள் , கச்சா எண்ணை விலை உயர உயர பாரதத்திற்கு பணவீக்கத்தை அடக்கி, கட்டுப்படுத்த திணரலாக இருக்கும்.
இந்த நிலவரம் பொருளாதாரத்திற்கு மட்டும் சவாலாக இல்லாமல், அது ஒரு போர் , ராஜ்ய அபாய நிலவரமாகவும் உள்ளது.  இரான் இன்னும் ஆறே மாதத்தில் அணுசக்தி ஆயுதமுள்ள தேசமாகிவிடும் என்று இஸ்ராயல் கறுதுகிறது. லெபனென்னில் இருக்கும் ஹெஜபொல்லா, பல அணு ஆயுத ஏவுகணைகளை வெற்றியுடன்  உபயோகித்து , இஸ்ரெயல் போன்ற பலத்த ராணுவ தேசத்தை முட்டியிடச்செய்திருக்கிறது. அது அவ்வாரிருக்க, ஸிரியாவின் அரசாங்க ராணுவத்தின் த்ரோகியான  கலவர எதிரியான ப்ரிகேடியர் ஜாஹேர் ஸாகேத் [ எவன் ஸிரியாவின் ரஸாயன ஆயுதங்களின் தலைவனாக செயல்பட்டு வந்தனோ அவன் தகவல் படி ஸிரியா தனது ரஸாயன ஆயுதங்களை கடந்த வாரம் யுனைடெட் நேஷன் ஸெக்யூரிட்டி  கௌன்ஸிலின் தீர்வின் அடிப்ப்டையில் அழிக்க ஒப்புக்கொண்டுவிட்டு,  அவைகளை அழிக்காது லெபனென்ன்னில் இருக்கும் ஹெஜபொல்லவிற்கும் , இராக்கிற்கும் அனுப்பிவருகிறதாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்வளவு அபாயங்கள் சூழ்ந்துள்ள நிலையில்  பொருமை இழந்துள்ள இஸ்ரேயல் இரான், ஸிரியா மீது ராணுவ ஆக்ரமிப்பு செய்ய ஆதரவளிக்கிறது , தாமே ஆயத்தமாகவும் இருக்கிறது. அதன் நடுவில் அமெரிக்கா கத்தார், யூ.ஏ.ஈ, சௌதி அரேபியாவுடன் சேர்ந்து தனது ராணுவ  சான்னித்யத்தை[இருக்கையை] அதிகரித்துவருகிறது. இஸ்ராயலுடன் சேர்ந்து  துர்கிஸ்தானும் தனது கை பளுவை  ஸிரியாமீது தனியாக சமீபத்தில்  செய்த தாக்குதலை க்கொண்டு உறுதியாக்கியது. இந்த நிலைமையை சமாளித்து வர ரஷ்ஷியாவும்  தனது ராணுவ அதிகாரத்தையும்,  பலத்தையும் மத்திய கிழக்கு ப்ரதேசத்தில் அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்த இரானின் அணு ஆயுத பயத்துடன் ,ஸிரியாவின் ரசாயன அயுதங்கள், ஹெஜபொல்லாவின் ஏவுகணைகள் இருவரும் இரானின் ஆதரவாளர்களிடமிருந்து  உலகத்தின் மத்திய கிழக்கு ப்ரதேசத்திற்கும், ஏன் உலகத்திற்கே தீவிர அபாயம் நிலவி வருகிறது. ஆம் இத்தருணம் உலகம் அனைத்தும் மத்திய கிழக்கினால் ஆட்டம் கண்டுள்ளது. [பாப்பு சொல்படி அனைவரும் உலகத்தின் நிலவர்ம் பற்றிய  செய்திகள் தெரிந்து கொண்டு எதையும் சந்திக்க த்தயாராக இருக்க எல்லாம் வல்ல இரைவனை ப்ரார்த்தித்து செயல்பட்டு வருவோமாக].



ஹரி ஓம், " நான் அம்பக்ஞன் ஆவேன்"   

மூள லேக -

Friday 13 December 2013

ஸ்ரீகங்கா த்ரிவேணீ அல்கோரிதம் (Algorithm)


ஸெப்டெம்பர் 19, 2013 அன்று சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பு அவர்கள் "ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm" பற்றி எல்லா ஸ்ர்த்தாவான் பக்தர்களுக்கும் புரியவைத்தார்.  அப்பொழுது Pascal  Triangle க்கும் இந்த algorithm க்கும்  சம்பந்தம் இருப்பதாக் கூறினார். ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm பற்றி விவரம் சொல்லும்போது கங்கா-யமுனா-ஸரஸ்வதி இந்த மூன்று நதிகளும் சேரும் இடத்தின் பெயர் தான் த்ரிவேணி ச்ங்கமம் என்று சொன்னார்.                                     
கங்கா-யமுனா-ஸரஸ்வதி நதிகள் நமது உடலில் இடா, பிங்கலா, சுஷும்னா ரூபத்தில் உள்ளது.  மனிதனின் நெற்றியின் நடுவில் அதாவது ஆக்ஞாசக்கரத்தில் இந்த மூன்று நாடிகளும் ஓன்றாக சேரும். சுஷும்னாவில் ஹனுமானிருக்கிறார் அதாவது அங்கு மஹாப்ராணத்தின் ஸாம்ராஜ்யம் உள்ளன.
நமது மனதிலுள்ள கங்கா-யமுனா-ஸரஸ்வதியின் சங்கமம் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். 
இன்த மூன்று நதிகளில் ஸ்னானம் செய்தால் எல்லா பாவங்களும் நாசமாகும் என்று நம்பிக்கை/ஸாஸ்த்ரம் உண்டு.  ஆனால் நிஜமான த்ரிவேணி சங்கமத்தில்  ஸ்னானம் என்றால் நமது மனதிலுள்ள கங்கா-யமுனா-ஸரஸ்வதி  அதாவது  இடா, பிங்கலா, சுஷும்னா வின் ஸங்கமத்தின் ஸ்னானம்.
இந்த முறை சந்தர்ப்பம் எல்லாருக்கும் கிடைக்கும்.  
                            

ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm 

மேலில் நமது உடலிலுள்ள இடா, பிங்கலா, சுஷும்னா நாடிகள்
அதாவது கங்கா-யமுனா-ஸரஸ்வதி செய்யும் கார்யத்தை காண்பிக்கும் படம். இந்த முக்கோணத்தில் 
1 லெருந்து 9 உம் 0வும் ஒரு தீர்மானித்த படி வருகிறது.
நமக்கு சுஷும்னா நாடியில் மட்டும் 0 தெரிகிறது. இந்த சூன்யமாய் இருப்பது தான் சாந்தி-த்ரிப்த்தி அடைவது அதாவது முழுமை. ஹனுமான் ஸம்பூர்ணமானவர்.  அதனால் நமது சுஷும்னா நாடியில் அவர் இருக்கிறார்.  இந்த சுஷும்னா நாடி எதிர் காலத்தையும் அறிந்துக்கொள்வதால் இதை ‘ஜ்யோதிஷ்மதி‘ என்ரும் சொல்வதுண்டு.

ஆனால் இந்த கங்கா-த்ரிவேணீ முக்கோணத்தில் குளிப்பது எப்படி?  நமது இஷ்ட பகவானின் விக்ரஹத்தை அபிஷேகம் செய்யும்போது கழ் உள்ள தாம்பாளத்தில் இந்த "ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm" வறைந்த காயகிதத்தை வைக்கவும்.  இதனால் கங்கா  த்ரிவேணீ சங்கமத்தின் பாவித்ரியம் அபிஷேக தீர்தத்தில் இரங்கும்.  பிறகு அபிஷேகம் செய்த பகவானின் விக்ரஹத்தை அன்புடன் ஜாகர்தயா துடைக்கவும்.  அபிஷேகம் செய்தப்பிறகு இந்த தீர்தத்தை
கங்கா-யமுனா-ஸரஸ்வதியை த்யானம் செய்து குடிக்கவும். இந்த ஜலம் கங்கா,யமுனா,ஸரஸ்வதியே என்று உணறவும். இதன்கூட,  நமது உன்மையாக
விரும்புவர்களுக்காகவும் சேவிக்கிறோம் என்று உணறவும்.  தீர்தத்தை சேவித்தபின் ஈர கையை நம் இரண்டு கண்களிலும், ஆஞாசக்ரத்திலும், தலையின் பின்பாகத்திலும் .அதாவது Circle of Willis  ல ஒத்திக்கவும்.  இதன்போல அபிஷேகம் தினமும் செய்தால்  இந்த த்ரிவேணி சங்கமத்தில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும்.

இந்த படத்தை வறையும்போது மேல் ஸ்ரீகங்கா  த்ரிவேணீ    
யெழுதவும். அதர்க்கு கீழ் நடுவில் algorithm படத்தை வறையவும். இதுக்கு கீழ் நமது பிரியமான் பகவானின் பெயரை எழுதவும்.  காகிதத்தில் அல்லது துணியில் எழுதி ஸ்வாமிக்கு கீழே வைத்தால் மிகவும் நல்லது. 
தவரிபோய் பகவானுக்கு மஞ்ச-குங்குவம் இட மறந்து போனாலும் பரவா இல்லை. ஆனால் நாம் எது சேய்தாலும் அன்புடன் செய்ய வேண்டும். இந்த algorithm படத்தை நாம் வண்டியில்லும் வைக்கலாம் ஏன் என்றால், இந்த படத்துமேல் வெய்யிலின் அபிஷேகம் ஆகும். இது ரொம்ப பவித்ரமும் சிறந்ததும் ஆகும். இந்த algorithm படத்தை நாம் கோலமாகவும் போட்டு எந்த சாயமும் போடலாம். இந்த கங்கா - த்ரிவேணீ படத்தை நாம் ஸாமி வைக்கும் மேடையில் அடீயில் 
வைத்தால் நாம் பூஜையில் தவறு செய்தால் பயப்பட வேண்டாம்.

மூள லேக -

Friday 6 December 2013

டான் பிரவுனின் துரோகம் பாயிண்ட்(Deception Point டிசெப்ஷன் பாயிண்ட்)

Deception Point by Dan Brown


டான் பிரவுனின் துரோகம் பாயிண்ட்(Deception Point டிசெப்ஷன் பாயிண்ட்)

டான் பிரவுன் எழுதிய டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் படித்த பிறகு என்னால் டிசெப்ஷன் பாயிண்ட் புத்தகத்தை படிக்க எடுக்காமல் இருக்கமுடியவில்லை, இதுவும் டான் பிரவுனின் மற்றொரு உன்னத படைப்பு ஆகும். வழக்கம் போல் அவரது புத்தகத்தின் விவரிப்பு வழக்கமான மாதிரி ஈடிணையற்ற -  நன்கு விளங்குகின்ற மற்றும்  தெளிவாக பாணியில் இருந்தது . 
 

டிசெப்ஷன் பாயிண்ட்

அசோக் பாத்யேயால் பிரமாதமாக மராத்தியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இப்புத்தகத்தை வாசித்தேன். இந்த தரமான நாவல்களை  மேத்தா பப்ளிஷிங் ஹவுஸ் மராத்தி வாசகர்களுக்கு கிடைக்குமாறு செய்தது  பார்ப்பதற்கு  நன்றாக இருக்கிறது.

டிசெப்ஷன் பாயிண்ட் ஒரு தீவிர இரகசிய தொழில்நுட்ப நுண்ணறிவு உளவு நிறுவனத்திலிருந்து  தொடங்குகிறது மற்றும் உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் மிக உயர்ந்த அரசியல் துறையின் எதிரொளிப்பாக இருக்கிறது. இங்கிருந்து அது [வாசகர்களை] படிப்பவர்களை மிகக் கடுமையான [செல்ல இயலாத] தடையிடப்பட்ட பனிக்கட்டு அடுக்குகள் கொண்ட ஆர்க்டிக் கண்ட- வட்டத்திற்கு கொண்டு சென்று, திரும்பி மறுபடி  அரசியலும் , [மக்கள் வாயில்] ஊடகத்தின் முகப்புக்கூடவழி  கொண்ட தேசத்தின் பலத்த தலைநகரத்திற்கு அழைத்து வந்து விடும். திரு டான் பிரவுனால் இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள்  மற்றும் ஆயுதங்கள் பற்றி பெரும்பாலானவைகள் முற்றிலும் கேட்கப்படாத மற்றும் வெளித்தோற்றத்தில் வருங்காலத்திற்குரியவைகளாக இருக்கின்றன. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை என்னவென்றால், திரு பிரவுன் அவ்வாயுதங்களின் இருப்பும் மற்றும் அவைகளை ஆயுத படைகளால் வழக்கமான  பயன்பாட்டுக்குள்ளாக இருந்தது என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார்,ஆனால் அவைகள் உயர் மட்ட அளவில் (அந்தரங்கமாக) வகைப்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடானது பல்வேறு வகையான நிகழ்வுகளிலும் மற்றும் பல எடுத்துக்காட்டுகள் மூலம்  தீவிர முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், உலகம் முழுவதிலும் உள்ள  கொடூரமான எதிரிகள் மற்றும் நிலப்பகுதிக்கு எதிராக ஏற்படும் புதிய கற்கால போர்களிலும், அதி குரோதமாக இருப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்த வேண்டியுமமிந்த நவீன  ஆயுதங்களை பெற்றிருக்க வேண்டுவது பெரும்பாலாக இராணுவத்தினருக்கு அவசியம் வேண்டுமென்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. புவியியல், அரசியல்,மற்றும்  படைதுறையியல்  ரீதியாக ஒரு கொந்தளிப்பான மற்றும் ஆபத்தான  நிலையில் இந்தியா இருப்பதால், உபகரணங்களை சீரமைக்க வேண்டியும், இந்த முன்னேறிய போர் அமைப்புகளை அண்மையில் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது நியாயமானது என்று சொல்லப்படுகிறது.

பெயர் குறிப்பிடுவதுபோல், டிசெப்ஷன் பாயிண்ட் இந்த காலத்திற்கேற்ப  மிக சிறந்த ஆயுதமான மோசடி பற்றிய கதையாக உள்ளது. இந்த நாவலில், துரோகம் மற்றும் பொய்கள் இரண்டும் ஒன்றாக நெய்யப்பட்டு, மற்றும் ஒரு மர்மமான அதிகார தரகரால், உண்மையை தவிர  எதையும் மறைத்து நிறுத்த முடியாத   ஒரு புலனாய்வு சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏமாற்றுத்தனத்தினால்  உண்மை மற்றும் உண்மையை உணர்வதற்கான சந்தர்ப்பம்  ஏற்படுகிறது. ஏமாற்றுத்தனம் எல்லோரையும் முட்டாளாக்குவதில்லை ஆனால்  வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போக்கை மாற்றக்கூடிய சாத்தியம் உள்ளது, அதன் விளைவால் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும்  கொள்கையில் ஒரு இடைவெளி ஏற்படுமளவுக்கு  தாக்கத்தைக்கொடுக்கும். ஆனால் இறுதியில் உண்மையே நிலைத்து நிற்கும்.

இந்த நாவலின் மூலம் நிச்சயமாக காண்பிப்பது தூய சத்தியமும், பிரேமை மற்றும் ஆனந்தம் ஆகிய இந்த மூன்றும் மனித குலத்தின் மிக அடிப்படையான மற்றும் மிகவும் முக்கியமான கொள்கைகள் தான் என்றும் நிரூபிக்கிறது; மற்றும் அதை தாண்டி மற்றவைகள் எல்லாம் நிலையற்ற மாறும் தன்மையுடையது.

நான் உண்மையாக நினைப்பதுவும் மற்றும் பரிந்துரைப்பதுவும் என்னவெனில்  ஒவ்வொரு சமூக விழிப்புணர்வு மற்றும் பொறுப்புமுடைய   வாசகர் இந்த புத்தகத்தை கட்டாயமாக படிக்க வேண்டும். 

Wednesday 13 November 2013

ஸப்த மாத்ருகா பூஜா

Saptamatruka Poojan

போனவாரம் வ்யாழக்கிழமை அக்டோபர்24,2013 அன்று நமது பரம பூஜ்ய பாப்பு அவரது ப்ரசங்கத்தில் ஒரு முக்கியமான விஷயம் சொன்னார்கள். ஒவ்வொரு பெற்றோருக்கும் நெஞ்சார்ந்த ஆசை நம் குழந்தைகளுக்கு நலமான நல்ல ஆரோக்யமான ,தீர்க ஆயுளுடன் கூடிய வாழ்க்கை அமையவேண்டும் என்பது.வழக்கமாக சம்ப்ரதாயப்படி சஷ்டி  பூஜை இந்த  வேண்டுதலுக்காகவே செய்து வரப் பட்டது. படிப்ப்டியாக இந்த பூஜை அதன் முக்கியத்துவம் இழந்து அது  ஒரு சடங்காக மாறிவிட்டது. பரம பூஜ்ய பாப்பு,  அவர் ப்ரசங்கத்தின் வாயிலாக இப்பூஜையின் மஹத்துவமும்,முக்கியத்துவமும் எடுத்துறைத்து ,பூஜையின் வழிமுறைகளையும் விவரித்தார்.

இந்த பூஜையை முதன்முதலாக ரிஷி அகஸ்தியர் அவர் மனைவி லோபாமுத்ரா,ரிஷி வஷிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் அவர்கள் தாய்மை அடைந்து இருவரும் ஒரே சமயத்தில் ப்ரசவித்தபோது , சேர்ந்து செய்ததாக பாப்பு சொன்னார்கள். இந்த பூஜை "ஸப்தசஷ்டி  பூஜை" என்று அழைக்கப்பட்டது.நாம் பரம பூஜ்ய பாப்பு எழுதி அருளிய மாத்ருவாத்ஸல்ய விந்தானம் க்ரந்தத்தில் எவ்வாறு அனைத்து தேவர்களும் அவரவர்களது ஆற்றல் திறமைகளை திறட்டி சக்திகளை அனைத்தும்  அசுரர்கள் சும்ப -நிசும்பனுடன் போரிட ஸ்ரீ மஹா ஸரஸ்வதிக்கு வழங்கி அருளினாரகள் என்பதை பார்க்கிறோம். இந்த ஏழு சக்திகளையே "ஸப்தமாத்ருகா" என்று அழைக்கின்றோம். இந்த ஏழு அற்புத சக்தி ஸ்வரூபமான தேவியர்களுக்கு ஆதிமாதா காலிகாம்பிகையே  சேனாதிபதி[அதிபதி] ஆவாள்.
ஏழு மாத்ருகா அவர்கள் பெயர் பின்வருமாரு உள்ளன:

1,மாஹேஷ்வரி: சிவனின் சக்தி, அவளுக்கு ஐந்து முகங்கள்,ரிஷபம் அவளது வாகனம், அவள் கையில் திரிசூலம் இருக்கும்

2,வைஷ்ணவி:விஷ்ணு பகவானின் அற்புத சக்தி,கருட வாகனம்,அவள் கையில் சுதர்ஷன சக்ரம், கதை, தாமரைப்பூவும் இருக்கும்.

3,ப்ரஹ்மாணி: ப்ரம்மனின் சக்தி, நான்கு முகம் கொண்டவள் ,ஹம்ஸ[அன்ன பக்ஷி] வாகனம்,கையில் கமண்டலமும், அக்ஷமாலா[மணிமாலை] கொண்டவள்.

4,ஐந்த்ரீ: இந்த்ரனின் சக்திஸ்வரூபிணி,வஜ்ராயுதம் கொண்டவள், ஐராவத யானை வாகனம்.

5,கௌமாரீ: ஆறுமுகன் கார்த்திகேயனின் அற்புத சக்தி, ஆறுமுகத்துடன் , மயிலை வாகனமாகக் கொண்டவள்.

6,நாரஸிம்ஹீ: சிங்கமுகத்தை  தரித்து, வாளையும், கதையும் ஆயுதமாக கொண்டவள்.

7,வாராஹீ:   காட்டுப்பன்றி முகத்துடன் ,சுதர்ஷன சக்ரம், வாள்,கேடையம் கொண்டு வெள்ளை எருமை வாகனம்.

இந்த  ஸப்த மாத்ருகா பூஜையே "ஸப்த சஷ்டி பூஜையும்" ஆகும்.பாப்பு பிறந்தவுடன் இந்த பூஜை பாப்புவின் இல்லத்தில் செய்யப்பட்டது."ஸப்தமத்ருகா பூஜை செய்யவேண்டிய படம்  பாப்பு அக்டோபர்24, 2013 ப்ரசங்கத்தில் பாப்பு காட்டியிருந்தார். பூஜையின் மஹிமையை ப்பற்றி ப்ரசங்கத்தில்  பாப்பு எடுத்துறைக்கையில் சும்ப-நிசும்பனை ஆதிமாதா மஹிஷாசுர மர்த்தினி,  மஹாஸரஸ்வதியின் ரூபத்தில் அழித்தாள். சும்பனின்  மகனான துர்கமன் எப்படியோ பிழைத்துவிட்டான். அவன் பிழைத்ததற்கு காரணம் அவன் காக்கையாக மாறினதால் இல்லை, அது இந்த ஏழு மாதாக்களின் மாத்ரு வாதஸல்யம்[தாய்பாஸம், அவன் எதிரியின் மகனாக இருந்த போதும் கூட], மாஹாஸரஸ்வதி இந்த ஏழு மாதாக்களின் செய்கையை புகழ்ந்து சொன்னாள்  " எவனொருவன் ,அவன் இல்லத்தில் குழந்தை பிறந்தவுடன் இந்த ஸப்த மாத்ருகா பூஜை செய்கின்றானோ அக்குழந்தை உங்கள் அனைவராலும் காப்பாற்றப்படுவர்". ஆகையால் குழந்தை பிறந்தவுடன் "ஸப்தமாத்ருகா பூஜை செய்வது வழக்கமான ஒரு மரபு ஆகும்.  
   
அதன் பின்னர் பாப்பு இந்த பூஜா விதி முறைகளை பின்வருமாரு விவரித்தார்.



பூஜை விதி முறையும், தயாரிப்பும்:

1. ஒரு பூஜா பலகை எடுத்துக்கொள்ளவும். அதன் மேல் கோல மாவினால் "ஸ்வஸ்திக்" அல்லது "ஸ்ரீ" யோ கோலமாக இடவும்[ஏனெனில் இவை மங்களகரமான வறைபட  குறிகள் ஆகும்] . இது பூஜை பலகைமீதே செய்தாகவேண்டும் , வேறு டேபிள், டீபாய் அல்லது ,சிறுமேஜைமீது செல்லாது,காரணம் நாம் அனைவரும் அந்த ஆதிமாதாவின் குழந்தைகளே. ஆகையால் நமது முதல் அடி சிறிதாகவே இருக்கும் . அதையே பூஜா பலகை குறைந்த ,சிறிய உயரத்தின் மூலம் காட்டுகிறது. ஆகையால் பலகையே பூஜா அலங்காரத்திற்கு உகந்தது.

2.  பிறகு பலகைமீது மடியான வஸ்த்ரம்  அது பட்டு அல்லது ஷால், அல்லது மடியாக உலர்த்திய துணிவிரிக்கவும்.இப்போது பலகையை சுற்றியும் கோலத்தால் அலங்கரிக்கலாம்.

3. ஒரு பூஜை தாம்பாளத்தில் கோதுமையை பரப்பி, அதை சீறாக வைத்துக்கொள்ளவும்.

4. முழு கொட்டை பாக்கு  ஒன்று பரப்பிய கோதுமை மத்தியிலும் அவ்வாரே அதை சுற்றி ஆறு முழு க்கொட்டை பாக்கு வைத்துக்கொள்ளவும்.

5. இறண்டு நல்ல தேங்காயை எடுத்துக் கொண்டு அதன்மேல் மஞ்சள் குங்குமம் இடவும் ,ஓம் அல்லது ச்வஸ்திக்கும் வறையலாம். அவை பூஜா தாம்பாளத்திற்கு இரு பக்கத்திலும் வைக்கவேண்டும்.

6. இவ்விரு தேங்காய்களின் உள்புறத்தில் பூஜா தாம்பாளத்தின்இருபக்கத்தி-லும் அக்ஷதையின் [குங்குமம் கலந்த சிகப்பு நிற அக்ஷதை] குவித்தாற்போல் வைக்கவும்.
-[இந்த அக்ஷதை குவிப்பு அஷ்வினீகுமார்[ தேவர்களின் வைத்தியர்கள்]  மனைவிகளை குறிக்கின்றன. அவர்கள் உண்மையிலேயே இரட்டையர்கள் ஆவர்.அவர்கள் பெயர் "ஜரா"வும் "ஜீவாந்திகா" ஆகும்.அவர்கள் அஷ்வினீ குமாரர்கள் போல் என்றும் எப்போதும் பிரியாதவர்கள்.அவர்களே குழந்தை சிறியதாக இருக்கும் போது விளையாடுவார்கள். குழந்தை மூன்று மாதம் ஆகும் வறை இவர்கள் விளையாட்டு காட்டி பார்த்துக்கொள்கின்றனர், குழந்தையும் ப்ரதிபலிப்பாக சிறிக்கிறதாம்.

7. (அ)  ஜரா தீர்க ஆயுளின் அதிபதி ஆவாள்.’குழந்தை முதியவர் ஆகும் வறை நீண்ட ஆயுளோடு இருக்க ஆசீற்வதிக்கிறாள்."ஜீவாந்திகா" குழந்தையை திடகாத்திற ஆரோக்யத்துடன் இருக்க ஆசீர்வதிக்கிறாள்.


8. நான்கு வெற்றிலை பாக்கு[இரண்டு வெற்றிலை ஒரு முழு பாக்கு அல்லது இரு களி பாக்கு] பலகையின் மேல் நான்கு மூலைகளிலும் வைக்கவும்.வெற்றிலைமீது பாக்கை வைப்பது கடவுளை மந்திரம் இல்லாதே , ஆவாஹனம் செய்வதாகும்[ கூப்பிடுவதாகும்].ஆதிமாதாவின் அம்ஸமான காத்யாயினி சொல்படி வெற்றிலை வைப்பது கடவுளுக்கு அழைப்பிதழ் போன்றதாகும். பூஜா தாம்பாளத்தின் பின் புறம் ஸப்தமாத்ருகாவின் படம் வைத்துக்கொள்ளவும்.



பூஜை முறை

-இந்த பூஜை சூரிய உதயத்திலிருந்து சூரிய மறைவுக்குள் செய்யவேண்டும்.எந்த நாளிலும் செய்யலாம் [அமாவாசை உள்பட].

-இந்த பூஜை குழந்தை பிறந்தபின்னர் குழந்தையின் தந்தையே செய்யவேண்டும்.பூஜை செய்யும் சமயம் தந்தை குழந்தையை சிறிது நேரம் தமது மடியில் வைத்துக் கொள்ளவேண்டும். பூஜை குழந்தை பிறந்து மூன்று நாள்பின் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நமது முறைப்படி குத்து விளக்கு , ஜோடி ஜோதி விளக்கு அல்லது காமக்ஷி விளக்கு ஏற்றி வைத்தபிறகு பூஜை ஆரம்பம்.

-பூஜையின் ஆரம்பம் வக்ரதுண்ட மஹாகாயா ஸ்லோகத்துடன் ஆரம்பிக்கவேண்டும்.

- இதை அடுத்து குருக்ஷேத்ர மந்திரம் சொல்லவேண்டும்.பிறகு ஸத்குரு நாம ஜபம் செய்தாக வேண்டும்.

- வெற்றிலைமீது வைத்திருக்கும் பாக்குகளுக்கு மஞ்ஜள் குங்குமம் இடவும் , சிறிது ஈரமாக இருந்தால் பரவாயில்லை, ஒட்டும்.பிறகு  பூஜா தாம்பாளத்தில் இருக்கும் பாக்குகளுக்கு ஒவ்வொன்றாக  சந்தனம், மஞ்ஜள் குங்குமம், அக்ஷதை அர்ப்பணிக்கவும்.

- பிறகு இந்த பூஜை மாத்ருவாத்ஸல்ய விந்தானத்தில் இருக்கும் நவ மந்த்ரமாலா ஸ்தோத்ரம் பாராயணம் ஒரு முறையாவது செய்யவேண்டும். அவரவர் வசதிப்படி எவ்வளவு முறை வேண்டுமானாலும் நவ மந்த்ரமாலா பாராயணம் செய்யலாம்.

- இந்த ஸ்தோத்ரம் முதல் முறை சொல்லும் போதே வாஸனை பூக்கள், இல்லலாவிடில் சாதாரண பூக்கள் சந்தனத்தில் ஒத்தி, அக்ஷதையுடன் கலந்து ஏழு பாக்கு, ஸப்தமாத்ருகா படம், "ஜரா" "ஜீவாந்திகாவை" குறிக்கும் அக்ஷதை குவிப்பு மீது அர்ப்பணிக்கவும்.
-தூபம் ஏற்றவும்.

- ஏழு தட்டில் தனித்தனியே நெய்வேத்தியம் தயார் செய்து கொள்ளவும் .[தேங்காய் பூரணம், தேங்காய் துறுவல் , வெல்லம், கலத்தின் பருப்பு, அன்னம் இதை த்தவிர அவரவர்கள் சௌகர்யம் எப்படியோ அப்படி] இது இல்லாதவர்கள் , அரை த்தேங்காயும் வெல்லமும் நெய்வேத்தியம் செய்யலாம்.

- இவை அனைத்தும் செய்தபின், கடைசியாக தாமரைப் பூ அர்ப்பணிக்கவும் ஏனெனில் அது  அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான பூ வாகும். 
   


பாப்பு பிறகு சொன்னார்: இந்த பூஜை குழந்தை பிறந்த பின்னர் முதல் பூஜை  தகப்பனாரால் செய்யவேண்டியது.பூஜை நடைபெரும் சமயம் குழந்தையின் தாயார் சிறிது நேரமாவது கணவர் பக்கத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தந்தையால் ஏதோ காரணத்தினால் பூஜையில் அமரமுடியவில்லை என்றால் குழந்தையின் தாத்தா[ அப்பாவழி அல்லது அம்மாவழி] பூஜை செய்யலாம். அவர்களும் செய்ய இயலவில்லை என்றால் குழந்தையின் நெருங்கிய  ஆண் உறவினர் செய்யலாம். குழந்தை பெறிதாகிவிட்டால் குழந்தையின் தாய் எப்போது வேண்டுமானாலும் வயது த்தடை ஏதுமின்றி பூஜை செய்யலாம்.எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம்.அது குழந்தையின் பிறந்த நாளோ அல்லது , நோயிலிருந்து குணமானவுடன்,அல்லது வேறு எந்த கொண்டாட்டம் சமயம் செய்யலாம்.பெற்றோர்கள் சேர்ந்தோ ,தனியாகவோ செய்யலாம். ஒரு முறை செய்தபின், மறுமுறை செய்ய எவ்வித வர்புருத்தலும் இல்லை. ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருப்பினும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே பூஜை செய்வது நல்லதே , ஆயினும் அப்படி முடியாதவர்கள், அனைத்து குழந்தைகளுக்கும் சேர்த்தே பூஜை செய்யலாம். ஸத்குருவும் அவர்  தாயுமான ஆதிமாதாவும்  பார்த்துக் கொள்வார்கள்.



॥ हरि ॐ ॥
अथ नवमन्त्रमालास्तोत्रम्।
(पदच्छेद)
या माया मधुकैटभ-प्रमथनी या महिषोन्मूलिनी
या धूम्रेक्षण-चण्डमुण्ड-मथनी या रक्तबीजाशनी।
शक्ति: शुम्भनिशुम्भ-दैत्य-दलिनी या सिद्धिलक्ष्मी: परा
सा चण्डि नव-कोटि-मूर्ति-सहिता मां पातु विश्वेश्वरी॥
स्तुता सुरै: पूर्वम्-अभीष्ट-संश्रयात् तथा सुरेन्द्रेण दिनेषु सेविता।
करोतु सा न: शुभहेतुरीश्वरी शुभानि भद्राण्यभिहन्तु चापद:॥
या सांप्रतं चोद्धत-दैत्य-तापितै: अस्माभिरीशा च सुरैर्-नमस्यते।
करोतु सा न: शुभहेतुरीश्वरी शुभानि भद्राण्यभिहन्तु चापद:॥
या च स्मृता तत्क्षणमेव हन्ति न: सर्वापदो भक्ति-विनम्र-मूर्तिभि:।
करोतु सा न: शुभहेतुरीश्वरी शुभानि भद्राण्यभिहन्तु चापद:॥
सर्वबाधाप्रशमनं त्रैलोक्यस्य अखिलेश्वरि।
एवमेव त्वया कार्यं अस्मद्-वैरि-विनाशनम् ॥
सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके।
शरण्ये त्र्यंबके गौरि नारायणि नमोऽस्तु ते॥
सृष्टि-स्थिति-विनाशानां शक्तिभूते सनातनि।
गुणाश्रये गुणमये नारायणि नमोऽस्तु ते॥
शरणागत-दीनार्त-परित्राण-परायणे।
सर्वस्यार्तिहरे देवि नारायणि नमोऽस्तु ते॥
सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति-समन्विते।
भयेभ्यस्-त्राहि नो देवि दुर्गे देवि नमोऽस्तु ते॥
______________________________________________________________________
 ॥ हरि ॐ ॥
॥ अथ नवमन्त्रमालास्तोत्रम् ॥
(मराठी)
जी माता मधु-कैटभ-घातिनी        मर्दी जी महिषासुरां
जी धूम्रेक्षण-चण्ड-मुण्ड-नाशिनी   वधे रक्तबीजासुरां।
निर्दाळी शुम्भ-निशुम्भ-दैत्यां        जी सिद्धिलक्ष्मी परा
ती चण्डिका नव-कोटी-मूर्ति-सहिता   प्रतिपाळो आम्हां लेकरां ॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
अभीष्ट-पूर्तिसाठी देवादिकांनी    स्तविली भजिली जिला ती आदिमाता।
शुभहेतुरीश्‍वरी ती माय आमुची   करो शुभभद्र, हरो सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
उन्मत्त दैत्यांमुळे गांजलेल्या    आमुचे क्षेम करो पराम्बा सुरवन्दिता।
शुभहेतुरीश्‍वरी ती माय आमुची   करो शुभभद्र, हरो सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
जी स्मरण करताचि हरे दु:खक्लेश । भक्तिशील आम्ही तिला शरण असता।
शुभहेतुरीश्‍वरी ती माय आमुची   करो शुभभद्र, हरो सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
सर्वबाधांचे प्रशमन           करी त्रैलोक्याची अखिलस्वमिनी।
आमुच्या वैर्‍यांचे निर्दालन   करावे हेचि त्वा भक्त-उद्धारिणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
सर्वमंगलांच्या मांगल्ये   शिवे सर्वार्थसाधिके।
शरण्ये त्र्यम्बके गौरी   नारायणी नमो अम्बिके॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
सृष्टीची उत्पत्ति स्थिति लय   करी जी आद्यशक्ति सनातनी।
वन्दितो गुणाश्रये गुणमये     वात्सल्यनिलये नारायणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
शरणागत पामर लेकरां       तत्पर जी प्रतिपालनी।
प्रणाम तुज सर्वपीडाहारिणी   क्षमास्वरूपे नारायणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
सर्वस्वरूपे सर्वेश्‍वरी   सर्वशक्ति-समन्विते।
भयापासून रक्षी आम्हां   देवी दुर्गे आदिमाते॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करो बाळाचे संरक्षण मातृकासम्राज्ञी॥
  ______________________________________________________________________
॥ हरि ॐ ॥
॥ अथ नवमन्त्रमालास्तोत्रम्॥
(हिन्दी)
जो माता मधुकैटभ-घातिनी        महिषासुरमर्दिनी
जो धूम्रेक्षण-चण्डमुण्ड-नाशिनी      रक्तबीज-निर्मूलिनी।
जो है शुम्भनिशुम्भ-दैत्यछेदिनी     जो सिद्धिलक्ष्मी परा
वह चण्डिका नवकोटीमूर्तिसहिता   चरणों में हमें दें आसरा ॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
अभीष्ट-पूर्तिहेतु सुरगणों ने   की जिसकी स्तुति भक्ति वह आदिमाता।
शुभहेतुरीश्‍वरी वह माँ हमारी    करें शुभभद्र, हरें सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
उन्मत्त दैत्यों से ग्रस्त हैं हम     करो क्षेम हमारा पराम्बा सुरवन्दिता।
शुभहेतुरीश्‍वरी वह माँ हमारी    करें शुभभद्र, हरें सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
स्मरण करते ही दुखक्लेश है हरती।    भक्तिशील हम जब शरण में हों उसके।
शुभहेतुरीश्‍वरी वह माँ हमारी    करें शुभभद्र, हरें सर्व आपदा॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
सर्वबाधाओं का प्रशमन   करे त्रैलोक्य की अखिलस्वमिनी।
हमारे बैरियों का निर्दालन   करो यही माँ तुम भक्तोद्धारिणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
सर्वमंगलों का मांगल्य   शिवे सर्वार्थसाधिके।
शरण्ये त्र्यम्बके गौरी   नारायणी नमो अम्बिके॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
सृष्टि की उत्पत्ति स्थिति लय   करे जो आद्यशक्ति सनातनी।
वन्दन तुम्हें गुणाश्रये गुणमये   वात्सल्यनिलये नारायणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
शरणागत दीनदुखी संतानों के   परिपालन में तत्पर जननी।
प्रणाम तुम्हें सर्वपीडाहारिणी   क्षमास्वरूपे नारायणी॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
सर्वस्वरूपे सर्वेश्‍वरी   सर्वशक्तिसमन्विते।
भय से हमारी सुरक्षा करना    देवी दुर्गे आदिमाते॥
अनिरुद्धमाता नवमन्त्रमालिनी। करें बच्चे की सुरक्षा मातृकासम्राज्ञी॥
 ______________________________________________________________________

"நவமந்த்ரமாலா ஸ்தோத்ரம்"   

" नव मंत्रमाला स्तॊत्रम्।"  
[Navamanthramala sthothram]

யா மாயா மதுகைடப ப்ரமதனீ யா மஹிஷோன்மூலினீ
யா தூம்ரேக்ஷண சண்டமுண்டமதனீ யா ரக்தபீஜாஷனீ ||
ஷக்தி: ஷும்பநிஷும்ப தைத்யதலினீ யா ஸித்திலக்ஷ்மீபரா
ஸா சண்டி நவகோடிமூர்திஸஹிதா மாம் பாது விஷ்வேஷ்வரீ || 1 ||

ஸ்துதாஸுரை: பூர்வமபீஷ்டஸம்ஷ்ரயாத் தத்தா ஸுரேந்த்ரேண தினேஷு ஸேவிதா
கரோது ஸா ந: சுபஹேதுரீஷ்வரீ சுபானி பத்ராண்யபிஹன்து சாபத: || 2 ||

யா ஸாம்ப்ரதம் சோத்தத் தைத்யதாபிதை: அஸ்மாபிரீஷா ச ஸுரைர் நமஸ்யதே
கரோதுஸா ந: சுபஹேதுரீஷ்வரீ சுபானி பத்ராண்யபிஹன்து சாபத:|| 3 ||

யா ச ஸ்ம்ருதா தத்ஷணமேவ ஹ்ன்தி ந: ஸர்வாபதோ பக்திவினம்ரமூர்த்திபி:
கரோது ஸா ந: சுபஹேதுரீஷ்வரீ சுபானி பத்ராண்யபிஹன்து சா பத: || 4 ||

ஸர்வாபாதா ப்ரஷமனம் த்ரைலோகஸ்ய அகிலேஷ்வரீ
ஏவமேவ த்வயாகார்யம் அஸ்மத்வைரீ  வினாஷனம்|| 5 ||

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
ஷரண்யே த்ரயம்பகே கௌரீ நாராயணீ நமோஸ்துதே|| 6 ||

ஸ்ருஷ்டிஸ்திதி வினாஷானாம் ஷக்திபூதே ஸநாதனீ
குணாஸ்ரயே குணமயே நாராயணீ நமோஸ்துதே || 7 ||

ஷரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்திஹரே தேவீ நாராயணீ நமோஸ்துதே || 8 ||

ஸர்வஸ்வரூபே ஸர்வேஷீ ஸர்வேஷக்தி ஸமன்விதே
பயேப்யஸ்த்ராஹினோ தேவீ  நாராயணீ நமோஸ்துதே|| 9 || 

_________________________________________________________________________________
"அம்பக்ஞ"

மூள லேக -
மராடீ - ஸப்த மாத்ருகா பூஜா  मराठी Blog
ஹிம்தீ -  ஸப்த மாத்ருகா பூஜா   हिंदी Blog 
இம்க்லிஶ  - ஸப்த மாத்ருகா பூஜா  English Blog