Friday 27 September 2013

த்ரிவிக்ரமன் π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள்

The Trivikram π – Pi > The Secret of the Universe

த்ரிவிக்ரமன்  π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள்


பரம பூஜ்ய பாப்புவின் சமீபத்தில் செய்த ப்ரசங்கங்கள் வாயிலாக ,பாப்பு நம் அனைவருக்கும் [ அல்கோரித்ம்] அதாவது ,ஒரு சிக்கலை [ப்ரச்சினை] சரி செய்ய உதவும் சின்ன சின்ன வழிமுறைகளே  கணித சாஸ்த்திரத்தின் அடிப்படையில்  "அல்கோரித்ம்" எனப்படும்  என்பதோடு, அதன் புனித க்குறி எவ்வாரு அது பரமேஷ்வரருக்கு ப்ரதிநிதியாக உள்ளது என்பதை விவரித்தார். பாப்பு  ஸ்கந்த சின்னம்[குறி], ஸ்வஸ்திக், ப்ரபஞ்சத்தில் ஸூரியன், சந்திரன் ச்ருஷ்டித்தல்,பிறகு தீபம், ஆரத்தி போன்ற அல்கோரித்ம அதாவது ஆன்மீக வழிமுறைகள் பற்றியும் விவரமாக வர்ணித்தார். 
[க்ரீக்க நாட்டு சிறிய குறி "பைய்" கீழே உள்ளது]

 பிறகு ஜூலை மாதத்தில் ஒரு ப்ரசங்கத்தை ஆரம்பிக்கும் முன் ,நாம் இன்று ப்ரபஞ்சத்தின் ஒரு மகத்தான ரகசியம் பற்றி பேசப்போகிறோம் என்றார்.பிறகு ஒரு கேள்வி கேட்டு க்கொள்வோம் " கணிதத்தில் மாறாத எண்ணான [பைய்] π, எப்படி வந்தது? . "பைய்" ஒரு மாறாத எண், அது ஒருபோதும் மாறாது  ; ப்ரபஞ்சத்தில் கூட [ஆம் மற்ற  எதுவாயினும் மாறுவதே ப்ரபஞ்சத்தின் உண்மை, அப்படியிருந்தும் இந்த "பைய்" மாறவே மாறாது]. நாம் இந்த "பைய்"யின் மதிப்பு கண்டுபிடிக்க ஒரு வட்டத்தின் சுற்றளவை ,அவ்வட்டத்தின் சரியான மத்தியில் உள்ள குறுக்களவினால் வகுத்தால் "பைய்"யின் மதிப்பு தெரிந்து கொள்ளலாம், முழுமையாக இல்லாவிடினும்  ஒரு அளவிற்கு. பாப்பு பிறகு ப்ரஹ்மஸ்வரூபன் ஹனுமானின் தொடர்பு  இந்த "பைய்" என்னும் மாறாத எண்ணுடனும், வட்டத்துடனும் எவ்வாரு உள்ளது என்று வர்ணிக்கும்  போது "ப்ரம்மாண்டா போவதீ வேடே வஜ்ரபுஞ்சே கரு ஷகே" என்ற ஸமர்த்த ராமதாஸரின் மாருதீ ஸ்தோத்ரத்திலிருந்து எடுத்து சொல்லியபடி, எவ்வாரு இந்த ப்ரஹ்மாண்டம்[ப்ரபஞ்ஜம்],ஹனுமானின் வாலினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது. வஜ்ரமாக உள்ள ஹனுமானின் வாலின் நுணியே இந்த ப்ரபஞ்ஜத்தை முழுவதுமாக சுற்றி வளைக்கும் அளவு நீளமானது, அதுவே போதுமானது.

போன வார ப்ரசங்கத்தில் அதாவது  ஆகஸ்ட் 8,2013 அன்று நடந்த ப்ரசங்கத்தில் பாப்பு ,  (п)  "பைய்"யின் மதிப்பு 360 தசமம் வரை செய்து காட்டினார். அவர் [தசமம்] எண்களை ஐந்து ஐந்து கூறுகளாக செய்து ,அவை ஏன் ஐந்தின் கூறுகளாக இருக்கவேண்டும் என்பதையும் வர்ணித்தார். பலர் "பைய்’(п) யின் மதிப்பு 22/7 என்று தவராக நினைத்துள்ளனர், நிர்ணயித்தும் உள்ளனர்.  п "பைய்"  ஒரு மாறாத எண் ஆகும். அது விகிதமுறா எண்.  அதாவது வகுக்க இயலாத எண்.  ஆகையால் அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக வர்ணிக்க முடியவே முடியாது. 22/7என்ற விகித எண்கள்(п) ’பைய்"யின்   ஒரு அனுமான கணிப்பு ஆகும். எந்த விகிதகணிப்பும் இதற்கு நிகரானது அல்ல, ஆகவும் ஆகாது. கணித ஜாம்பவான்கள் இன்று வரை(п) "  "பைய்"யின் சரியான மதிப்பை ஐம்பது லக்ஷம் தசமம் வரைசெய்ய முயற்சித்துள்ளனர்.

[த்ரிவிக்ரமன் அடையாள சின்னம்]

இந்திய ஆன்மீக ஆய்வின்படி "பைய்"(п)யின் தத்துவத்தை த்ரிவிக்ரமனின் அடையாளச்சின்னம், அறிகுறியே ப்ரதிநிதியாக உள்ளது. இந்த ஆதிமாதாவால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட   ப்ரபஞ்ஜத்தின்[ப்ர்ஹ்மாண்டத்தின்] பெரும்  பரப்பளவு நிரந்தரமாக நிலையாக உள்ளது. ஸ்ரீ ஹனுமான் அதன் அளவை எடுத்துக் காட்டுகிறார் ஆகையால் அவர்தான் முதல், அதாவது மூத்தமகன்[ தத்தாத்ரேயர் , புனித வெள்ளை ப்ரகாசம்]. இந்த ப்ரஹ்மாண்டத்தின் அதாவது ப்ரப்ஞ்ஜத்தின் குறுக்களவு த்ரிவிக்ரமன் [ஹரிஹர்] அதாவது மஹாவிஷ்ணுவும் ஈஸ்வரனும் சேர்ந்தே உள்ளபடி ஆவர் , ராமனும் ஹனுமந்தனும் இனைந்திருப்பது போல், வீரமும் வாத்ஸல்யமும் [தயை,கருணை] சேர்ந்திருப்பது போல். கணித சாஸ்த்திர 22/7என்னும் "பைய்"யின் மதிப்பு ஆகையால் ஒரு அனுமானமே யாகும். அதை கணிதத்தில் அவ்வாரே ஏற்றுக்கொண்டு உபயோகப் படுத்துகின்றனர். அதேபோல் த்ரிவிக்ரமனின் சரியான, மதிப்பு கணக்கு  கிடையாது , அது எல்லையற்றது, அளவே கிடையாது ஆனால் மாறாத எண் போன்று என்றும் நிரந்தரமானது.
                                                          
 "ஹரி ஓம்"  "அம்பக்ஞ"

"ஓம் த்ரிபுராரயே த்ரிவிக்ரமாய வஜ்ரதராய த்ரிகாலஸுகதாய அநிருத்தாய நமோ நம:" 

"ॐ त्रिपुरारयॆ त्रिविक्रमाय वज्रधराय त्रिकाल सुखदाय अनिरूद्धाय नमॊ नम:"


No comments:

Post a Comment