Saturday 12 October 2013

பரம பூஜ்ய பாப்பு பரிசளித்த பதிமூன்று புள்ளி த்திட்டம்

 பரம பூஜ்ய பாப்பு  பரிசளித்த பதிமூன்று புள்ளி த்திட்டம்

The 13 Points Programme given by Param Poojya Bapu


பதினொன்று வருடம் முன் இதே  அக்டோபர் 3,2002ல் பரம பூஜ்ய பாப்பு ஒரு ஆத்ம கிளர்ச்சியூட்டும் ப்ரசங்கம் செய்ததில் அவர் பதின் மூன்று புள்ளித்திட்டத்தை பற்றி விவரித்தார்.இந்த திட்டம் யாவும் நம் பாப்புவின் வழி நடத்தலில் நன்கு நடந்து வருகின்றன , அதில் பல ஆயிர ஸ்ரத்தாவான்கள் சுயமாகவே உற்சாகமுடன்  பங்கேற்று
வருகின்றனர். இன்றும் பதினொன்று வருடம் பின் அது ஒரு முக்கியத்துவம் அடைந்து  பாப்புவின் சங்கத்தின் சேவையின் இன்றியமையாத அங்கமாகும்.



ஆகையால் நான் இன்றிலிருந்து பாப்பு விவரித்த  இந்த  பதின்மூன்று புள்ளி திட்டத்தின் ஒரு வீடியோ தொடர் ஆரம்பிக்கிறேன்.
இன்று ஆரம்ப் முன்னுறையை வெளியிடுகிறேன். மேற்கொண்டு பதின் மூன்று புள்ளிதிட்டத்தின்  ஒவ்வொரு புள்ளியை ப்பற்றியும் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்.

ஹரிஓம்     

Friday 27 September 2013

த்ரிவிக்ரமன் π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள்

The Trivikram π – Pi > The Secret of the Universe

த்ரிவிக்ரமன்  π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள்


பரம பூஜ்ய பாப்புவின் சமீபத்தில் செய்த ப்ரசங்கங்கள் வாயிலாக ,பாப்பு நம் அனைவருக்கும் [ அல்கோரித்ம்] அதாவது ,ஒரு சிக்கலை [ப்ரச்சினை] சரி செய்ய உதவும் சின்ன சின்ன வழிமுறைகளே  கணித சாஸ்த்திரத்தின் அடிப்படையில்  "அல்கோரித்ம்" எனப்படும்  என்பதோடு, அதன் புனித க்குறி எவ்வாரு அது பரமேஷ்வரருக்கு ப்ரதிநிதியாக உள்ளது என்பதை விவரித்தார். பாப்பு  ஸ்கந்த சின்னம்[குறி], ஸ்வஸ்திக், ப்ரபஞ்சத்தில் ஸூரியன், சந்திரன் ச்ருஷ்டித்தல்,பிறகு தீபம், ஆரத்தி போன்ற அல்கோரித்ம அதாவது ஆன்மீக வழிமுறைகள் பற்றியும் விவரமாக வர்ணித்தார். 
[க்ரீக்க நாட்டு சிறிய குறி "பைய்" கீழே உள்ளது]

 பிறகு ஜூலை மாதத்தில் ஒரு ப்ரசங்கத்தை ஆரம்பிக்கும் முன் ,நாம் இன்று ப்ரபஞ்சத்தின் ஒரு மகத்தான ரகசியம் பற்றி பேசப்போகிறோம் என்றார்.பிறகு ஒரு கேள்வி கேட்டு க்கொள்வோம் " கணிதத்தில் மாறாத எண்ணான [பைய்] π, எப்படி வந்தது? . "பைய்" ஒரு மாறாத எண், அது ஒருபோதும் மாறாது  ; ப்ரபஞ்சத்தில் கூட [ஆம் மற்ற  எதுவாயினும் மாறுவதே ப்ரபஞ்சத்தின் உண்மை, அப்படியிருந்தும் இந்த "பைய்" மாறவே மாறாது]. நாம் இந்த "பைய்"யின் மதிப்பு கண்டுபிடிக்க ஒரு வட்டத்தின் சுற்றளவை ,அவ்வட்டத்தின் சரியான மத்தியில் உள்ள குறுக்களவினால் வகுத்தால் "பைய்"யின் மதிப்பு தெரிந்து கொள்ளலாம், முழுமையாக இல்லாவிடினும்  ஒரு அளவிற்கு. பாப்பு பிறகு ப்ரஹ்மஸ்வரூபன் ஹனுமானின் தொடர்பு  இந்த "பைய்" என்னும் மாறாத எண்ணுடனும், வட்டத்துடனும் எவ்வாரு உள்ளது என்று வர்ணிக்கும்  போது "ப்ரம்மாண்டா போவதீ வேடே வஜ்ரபுஞ்சே கரு ஷகே" என்ற ஸமர்த்த ராமதாஸரின் மாருதீ ஸ்தோத்ரத்திலிருந்து எடுத்து சொல்லியபடி, எவ்வாரு இந்த ப்ரஹ்மாண்டம்[ப்ரபஞ்ஜம்],ஹனுமானின் வாலினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது. வஜ்ரமாக உள்ள ஹனுமானின் வாலின் நுணியே இந்த ப்ரபஞ்ஜத்தை முழுவதுமாக சுற்றி வளைக்கும் அளவு நீளமானது, அதுவே போதுமானது.

போன வார ப்ரசங்கத்தில் அதாவது  ஆகஸ்ட் 8,2013 அன்று நடந்த ப்ரசங்கத்தில் பாப்பு ,  (п)  "பைய்"யின் மதிப்பு 360 தசமம் வரை செய்து காட்டினார். அவர் [தசமம்] எண்களை ஐந்து ஐந்து கூறுகளாக செய்து ,அவை ஏன் ஐந்தின் கூறுகளாக இருக்கவேண்டும் என்பதையும் வர்ணித்தார். பலர் "பைய்’(п) யின் மதிப்பு 22/7 என்று தவராக நினைத்துள்ளனர், நிர்ணயித்தும் உள்ளனர்.  п "பைய்"  ஒரு மாறாத எண் ஆகும். அது விகிதமுறா எண்.  அதாவது வகுக்க இயலாத எண்.  ஆகையால் அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக வர்ணிக்க முடியவே முடியாது. 22/7என்ற விகித எண்கள்(п) ’பைய்"யின்   ஒரு அனுமான கணிப்பு ஆகும். எந்த விகிதகணிப்பும் இதற்கு நிகரானது அல்ல, ஆகவும் ஆகாது. கணித ஜாம்பவான்கள் இன்று வரை(п) "  "பைய்"யின் சரியான மதிப்பை ஐம்பது லக்ஷம் தசமம் வரைசெய்ய முயற்சித்துள்ளனர்.

[த்ரிவிக்ரமன் அடையாள சின்னம்]

இந்திய ஆன்மீக ஆய்வின்படி "பைய்"(п)யின் தத்துவத்தை த்ரிவிக்ரமனின் அடையாளச்சின்னம், அறிகுறியே ப்ரதிநிதியாக உள்ளது. இந்த ஆதிமாதாவால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட   ப்ரபஞ்ஜத்தின்[ப்ர்ஹ்மாண்டத்தின்] பெரும்  பரப்பளவு நிரந்தரமாக நிலையாக உள்ளது. ஸ்ரீ ஹனுமான் அதன் அளவை எடுத்துக் காட்டுகிறார் ஆகையால் அவர்தான் முதல், அதாவது மூத்தமகன்[ தத்தாத்ரேயர் , புனித வெள்ளை ப்ரகாசம்]. இந்த ப்ரஹ்மாண்டத்தின் அதாவது ப்ரப்ஞ்ஜத்தின் குறுக்களவு த்ரிவிக்ரமன் [ஹரிஹர்] அதாவது மஹாவிஷ்ணுவும் ஈஸ்வரனும் சேர்ந்தே உள்ளபடி ஆவர் , ராமனும் ஹனுமந்தனும் இனைந்திருப்பது போல், வீரமும் வாத்ஸல்யமும் [தயை,கருணை] சேர்ந்திருப்பது போல். கணித சாஸ்த்திர 22/7என்னும் "பைய்"யின் மதிப்பு ஆகையால் ஒரு அனுமானமே யாகும். அதை கணிதத்தில் அவ்வாரே ஏற்றுக்கொண்டு உபயோகப் படுத்துகின்றனர். அதேபோல் த்ரிவிக்ரமனின் சரியான, மதிப்பு கணக்கு  கிடையாது , அது எல்லையற்றது, அளவே கிடையாது ஆனால் மாறாத எண் போன்று என்றும் நிரந்தரமானது.
                                                          
 "ஹரி ஓம்"  "அம்பக்ஞ"

"ஓம் த்ரிபுராரயே த்ரிவிக்ரமாய வஜ்ரதராய த்ரிகாலஸுகதாய அநிருத்தாய நமோ நம:" 

"ॐ त्रिपुरारयॆ त्रिविक्रमाय वज्रधराय त्रिकाल सुखदाय अनिरूद्धाय नमॊ नम:"


Tuesday 3 September 2013

யூ ட்யூப் வீடியோ [ காண்மறை ] வழிதடம்[சானல்,channel] - "அநிருத்த ப்ரேமஸாகரா" வெளியீடு [திரப்பு] .

 யூ ட்யூப் வீடியோ [ காண்மறை ]     வழிதடம்[சானல்,channel] - "அநிருத்த ப்ரேமஸாகரா"  வெளியீடு [திரப்பு] .

Launch of YouTube Video Channel – ANIRUDDHA PREMSAGARA
 
நான் இன்று "அநிருத்த ப்ரேம ஸாகரா"  (http://www.youtube.com/watch?v=iWnOGGfHRRQ) என்ற தனிப்பட்ட , அதற்கென்றே ப்ரத்தியேகமான  யூ ட்யூப் வீடியோ [காண்மறை]  சானல் [ வழித்தடம்] வெளியீடு [திறப்பு] நடந்தேறியதை அறிவிக்க பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் யூ ட்யூபில் அந்த பெயரை சுலபமாக தேடி கண்டுபிடித்துவிடலாம். கீழ் வரும் வீடியோ [காண்மறை] இதிலிருந்து வெளிவரும் முதல் ப்ரசுரம் ஆகும்.



இந்த சானல் அநிருத்த ப்ரேம ஸாகரம்[ அநிருத்தரின் அன்பு அலைக்கடல்] ஷ்ரத்தாவான்களுக்கு[பக்தர்களுக்கு] ,ஷ்ரத்தாவான்களினால்[ பகதர்களினால்] இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு , மூன்று  வாரங்களுக்குள் நாங்கள்  பாப்புவின் பல முக்கிய நிகழ்சிகள், முக்கியமாக  ராமநவமி, குரு பூர்ணிமா, அநிருத்த பூர்ணிமா, போன்ற உத்ஸவங்கள், திருவிழாக்கள்,பக்தர்கள் பாதுகா பூஜை செய்தல், ஸச்சிதானந்த உதஸவம் கொண்டாடுதல், கண்டகூப பாஷாண பூஜை(2010),   தர்மசக்ர  பூஜை (1999),  பாப்புவின் இல்லத்து நிகழ்சிகள், அநிருத்த சாலீஸாவின் படலகாட்சி [slide show], பிபாஸாவின் அபங்கங்கள், அதைத்தவிர பாப்பு வருகைத்தந்து  கலந்து கொண்ட  அவர் குடும்பத்தின்ர், நண்பர்கள், பகதர்களின்  கொண்டாட்டங்கள் , இன்னும் பல பழைய நினைவுகள் கொண்ட சுமார்  150 வீடியோக்கள் இந்த சானலில் ஏற்றிவிடுவோம் [அப்லோட்,upload]. ஷ்ரத்தாவான்கள்  அவரவர்கள் மேல் வர்ணித்த விழாக்கள், கொண்டாட்டங்கள், அவரவர்கள் செய்த பாதுகா பூஜைகளின் புகைபபடமோ, படலமோ அல்லது வீடியோ காட்சிகள்  சிறிய தொகுப்புகள் aniruddhapremsagara@gmail.com அதாவது "அநிருத்தப்ரேமஸாகரா@ஜிமெயில்.காம்" .
அல்லது வீடியோ காட்சி தொகுப்பை நேராக www.dropbox.com, இல்லாவிடில் – www.google.com/drive முகவரி வாயிலாக அல்லது ,மேகப்பங்கேற்பு தளம் வழியாக அனுப்பலாம். தயவு செய்து கவனிக்கவும், வீடியோ தொகுப்பின் நீளம் ஐந்து நிமிட அளவுமட்டுமே அனுமதிக்கப்படும். அதைத்தவிர வீடியொ தொகுப்புக்கொண்ட சீ.டி
வ்யாழக்கிழமையன்று ஹரிகுருக்ராமிலோ அல்லது ஹாப்பிஹோமில்  2வது மாடியில் உள்ள குணஸங்கீர்த்தனை இலாகாவில் சேர்த்துவிடலாம்.

Saturday 31 August 2013

நந்தாமாதா ஆங்கிலம் கற்க எழுதிய புத்தகங்கள் வெளியீடு விழாவில் நம் பரம பூஜ்ய பாப்பு அவர்கள் செய்த ப்ரசங்கம்

நந்தாமாதா  ஆங்கிலம் கற்க எழுதிய புத்தகங்கள் வெளியீடு விழாவில் நம் பரம பூஜ்ய பாப்பு அவர்கள் செய்த ப்ரசங்கம்.

 Speech of Sadguru Bapu at the Launch of English Learning book authored by Nandai

நேற்று நான் நந்தா மாதா அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில மொழி கற்க , வளமடைய முதல் தொகுப்பு புத்தகங்கள் வெளியீடு விழாவில் நமது ஸத்குரு பரம பூஜ்ய பாப்பு செய்த ப்ரசங்கத்தை எனது ப்ளாகில் ஏற்றி வைத்திருக்கிறேன்[அப்லோட், upload செய்திருக்கிறேன்].இந்த "ஸாயீ ஃபார் மீ" [ஸாயீ எனக்காக] என்ற பெயரில் வெளியாகிய  தொகுப்பு ஏழு புத்தகங்களும்,ஒரு பயிற்சி புத்தகமும்  கொண்டது . இவை "ஹாப்பி இங்க்லீஷ் கதைகள்" [ஆங்கில ஆனந்த கதைகள்] என்ற தொடரின் ஓர் அங்கமாகும்.




Wednesday 28 August 2013

ஆங்கில மொழி வளர்ச்சிபெற[செம்மையாக்க] நந்தா மாதா எழுதிய, புத்தக வெளியீடு விழா".

ஆங்கில மொழி வளர்ச்சிபெற[செம்மையாக்க]
நந்தா மாதா எழுதிய,  புத்தக வெளியீடு விழா".

Launch of Books authored by Nandai to Improve English


உங்கள் அனைவருக்கும் நேற்று மிகவும் விமரிசையாக, கோலாகலமாக நம் பரம பூஜ்ய பாப்பு, நந்தாமாதா ,ஸுசித்தாதா முன் நிலையில்  "ஸாயீ ஃபார் மீ"[ஸாயீ எனக்காக] என்ற தலைப்பில் "ஹாப்பீ இங்க்லீஷ் ஸ்டோரீஸ்"[ ஆனந்த ஆங்கிலக் கதைகள்] என்ற தொடரிலிருந்து முதல் கணம் அல்லது  தொகுப்பு புத்தகங்கள் வெளியீடு விழா நடந்தேறியது என்பதறிவீர்கள், என்று நான் உறுதி. ஆத்மபல காரியதரிசியும் ,  மூத்தவரும்,  எண்பது வயதுக்கும் மேர்ப்பட்ட  பெரியவருமான ஆசிரியை "ஸ்ரீமதி துர்காவீரா வாக்" அவர்களை கௌரவிக்கும் வகையில் ,  அவர்கள் திருக்கரங்களினால்  இப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன.இந்த புத்தகங்கள், ஆங்கில மொழி பயில ஆரம்பிப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் நன்கு தெரிந்தவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்ற நோக்கத்தை கொண்டது.
 

இந்த புத்தக வெளியீடு விழாவுடன் "புக்ஷணரி பப்ளிகேஷன்ஸ்" [புக்ஷணரி ப்ரசுரம்] ப்ரசுர உலகத்தில் மனதைக்கவர்ந்த  ப்ரவேசம் செய்திருக்கின்றது.புக்ஷணரி பல தலைமுறைகளுக்கும்  ,விஷயங்களுக்கும் தரமான இலக்கியங்கள்  தர , வழங்க ஆயத்தமாய் உள்ளது, அவை புத்தகமாகமட்டும் அல்லாமல் சி.டீ, வீ.சீ.டீ, கணிப்பொறிக்கு ஏற்ற ,ஈ-புத்தகங்கள் தற்காலிக தேவைக்கேற்ப்ப கிடைக்கும் நவீன ப்ரசுர வசதிகளும் அளிக்க தயாராக உள்ளது.

பாப்பு தன் ராமராஜ்யம் 2025 என்ற கொரிக்கையை  அவரது  மே 6, 2010 ஆம் ஆண்டு ப்ரசங்கத்தில்  தெளிவு படுத்தி விவரிக்கும் போது பல ஆன்மீக தத்துவங்கள்,செயல்முறை கூறு கோணங்கள் ,தனி  நபருக்குறிய, குடும்பத்திற்குரிய, சமூகத்திற்குறிய, தேசத்திற்குறிய, ஏன் இந்த உலகத்திற்குறிய செயல்படுத்தவேண்டிய பட்டியல் அளித்தார். அதில் அவர் குறிப்பாக ஆங்கிலமொழியின்  தொடர்பு கொள்ளும் வழி,முறையின் முக்கிய அங்கமாக இருப்பதை அழுத்தமாக ச் சொன்னார்.

இன்று ஆங்கிலம் உலகமெங்கும் தொடர்புகொள்ள முக்கியாமான மொழியாக நிரந்தரமாகி விட்டது, எழுத்திலும் சரி , உறையாடல் வார்த்தைகளாகவும் அப்படியே.
இன்றைய காலகட்டத்தில் ,தொடர்பு கொள்ளுதல்  வாணிகம் வர்த்தகம் செய்ய ஒரு திறமான  மிக அவசியமான கருவியாகும், ஆகையால் ஆங்கிலத்தை அனைவரும் ஆதரிக்க அவசியம் நேரிடும். இன்று, ஆங்கில்த்தை  தவிர்த்த உலகப்ப்குதியிலும் , ஆங்கிலத்தை அங்கீகாரம் செய்ய நேரிட்டதால் , செய்தும் வருகின்றனர்.
ஆங்கிலத்தில் வல்லமை அன்றாடத் தேவையே, இல்லாவிடில் நமக்கு எந்த தகுதியோ, பட்டமோ, பதவியோ இருந்தாலும் , நாம் சமூகத்தில் தேவையற்றவர்களாகிவிடுவோம்.  இன்று சீனாவைவிட  நம்  பாரத தேசம் கணிப்பொறி [ப்ரோக்ராம், program] இயக்கும் நிரல் சம்பந்தப்பட்ட ஆற்றலில் முன்னிலையில் இருக்கக் காரணம், நம் ஆள்வலிமை வளம்[manpower resources] சீனாவைவிட அதிக விலைமதிப்புள்ளதாக இருப்பினும், நமது தேசத்து நிரல் அமைப்பவர்கள் [programmers]  சீனர்களைவிட ஆங்கிலத்தில் தேற்சிபெற்றவர்கள் என்பதால்தான், அதேசமயம் சீனர்கள் ஆங்கிலத்தில் வல்லவர்கள் அல்லர்.

2005 ஆம் ஆண்டு ப்ரதயக்ஷ என்ற அன்றாட பத்திரிகை வெளியீட்டின் போது ,நம்மை சுற்றி நடக்கும் மெய்மை, உண்மைகளைப்பற்றி   அறியாது இருத்தல் இருட்டை ப்போன்றதாகும், இந்த இருட்டு ஏமாற்றத்தை அளிக்கும். நம்மை, கசக்கிப்பிழிந்து  நாசமாக்கும்  என்று பாப்பு திட்டவட்டமாக கூறினார். . ஆகையால் அனைத்து ஸ்ரத்தாவன்களின்[பக்தர்களின்] நலனுக்காக , நமது நந்தா மாதா [டாக். ஸ்ரீமதி நந்தா அநிருத்த ஜோஷி ] அவர்கள் இந்த ப்ரசுரத்தின்  தொடர் புத்தகங்களை   நாம் லாபமடைய ,முன்னேற , ஆங்கில மொழி வளமாக்க வெளியிட்டிருக்கின்றார்கள். புத்தகங்கள் ,ஆங்கிலம்  கற்க  ஆரம்பிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ளவும் அதை  செயல்படுத்தவும் அமைந்திருக்கின்றன. இப்புத்தகங்கள் ,ஆங்கிலம் நன்கு அறிந்தவர்களுக்கும் பல உதவி அளிக்கவல்லது.

இப்புத்தகங்கள் நமது குருக்ஷேத்ரத்திலிருந்து உறிய விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம். இவை ஸ்ரீ ஆஞ்சனேயா பப்ளிகேஷன்ஸ்லிருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். தொடர்பு கொள்ள வெப் சைட்[www.aanjaneyapaublications.com]

" அடியேன் அம்பக்ஞ ஆதிமாதே"

"अंबञॊस्मी आदिमातॆ"